January, 2019 | தன்னம்பிக்கை

Home » 2019 » January

 
  • Categories


  • Archives


    Follow us on

    சாதனை கண்டுபிடிப்பு…! சரித்திரத்தின் உயர்த்துடிப்பு…!

    “TEAM OJAS”2018 எலட்ரிக் ரேஸ் கார் சாதிப்பாளர்கள்

    வி.ஐ.டி. பல்கலைக்கழக மாணவர்கள், வேலூர்.

    எண்ணிய முடித்தல் வேண்டும்

    நல்லவே எண்ணல் வேண்டும்

    திண்ணிய நெஞ்சம் வேண்டும்

    தெளிந்த நல்லறிவு வேண்டும்

    என்பது மகாகவி பாரதியின் வரிகளாகும் . ஒருவர் ஒரு குறிக்கோளை நோக்கி பயணிக்கிறார் என்றால், அதில் அவருக்கு எடுத்த உடனே வெற்றி கிடைத்துவிடாது  அதற்கு முயற்சிக்க வேண்டும். அந்த முயற்சி சாதாரண முயற்சியாக இல்லாமல் சரித்திர முயற்சியாக இருக்க வேண்டும். அப்போது தான் இந்த உலகம் வெற்றியாளர்களைக் கொண்டாடும். அந்த வகையில் இம்மாணவர்கள் ஒரு சரித்திர கண்டுபிடிப்பாளர்களே.

    இந்த உலகம் ஒரு சாதனைக்களம். இங்கு சாதிப்பதற்கும் சரித்திரம் படைப்பதற்கும் எண்ணற்ற இடங்களும் தடங்களும் இருக்கிறது. அதில் சரியாக பயணித்து வெற்றி பெறுபவர்களே வெற்றியாளர்களாக ஆகிறார்கள். அப்படிப்பட்ட சாதனைக்குச் சொந்தக்காரர்கள் இவர்கள்.

    இந்த உலகம் உங்களைக் கொண்டாட வேண்டுமென்றால் இந்த உலகத்தின் நன்மைக்காக நீங்கள் ஏதேனும் ஒன்றை செய்திருக்க வேண்டும் என்று சொல்வார்கள். அந்த வகையில் விஐடி பல்கலைக்கழக மாணவர்கள் “TEAM OJAS”2018 எலட்ரிக் ரேஸ் கார் வடிவமைப்பை தயாரித்து சாதனைப்புரிந்திருக்கிறார்கள். அவர்களின் நேர்முகத்தை இனி காண்போம்.

    கே: OJAS 2018 என்பது என்ன?

    விஐடி பல்கலைக்கழகத்தில் பல்வேறுபட்ட துறைகளும் பல பிரிவுகளும் இருக்கிறது. அதில் எல்லாத் துறையிலும் OJAS குழு உண்டு.  OJAS என்ற சொல்லுக்கு சக்தி வலிமை என்று பொருள். அதனாலே இப்பெயர் சூட்டப்பட்டது.  OJAS என்ற குழுவை 2012 ஆம் ஆண்டு தொடங்கினார்கள் தொடங்கிய சில நாட்களிலேயே எங்களின் கண்டுபிடிப்பை பரவலாக்க நினைத்தோம். அனைவரிடத்திலும் புதிய புதிய யோசனைகள், ஆலோசனைகள் வந்தது, அனைவரும் ஒன்று கூடி பரிசீலிரித்து ரேஸ் கார் தயாரிக்க வேண்டும் என்று முடிவுக்கு வந்தோம். ஆனால் நம்முடைய கண்டுபிடிப்பு எவ்வித சுற்றுப்புற மாசுபாடுகளும் ஏற்படா வண்ணம் இருக்க வேண்டும் என்று நினைத்தோம்.  2012 முதல் இந்த ஆண்டு வரை ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற காரை தயாரித்து வருகிறோம்.

    கே: இந்த கண்டுபிடிப்பின் உரிய  நோக்கம் யாது?

    இயற்கைக்கு இம்மியளவும் பாதிப்பு ஏற்படா வண்ணம் இருக்க வேண்டும் என்பது மட்டுமே எங்களின் நோக்கமாக இருக்கிறது. தற்போது இயற்கைக்கு மாறாக எத்தனையோ செயல்கள் நடந்து கொண்டுயிருக்கிறது. அதையே நாங்களும் செய்து மேலும் இயற்கையை மாசுபடுத்தக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம்.

    கார் ரேசிங் என்பது அனைவரும் விரும்பிப் பார்க்கும் ஒரு பொழுது போக்கு விளையாட்டாக இருக்கிறது.  அப்படியிருக்கும் போது இதன் பார்வையாளர்களும் அதிகம் என்பதால் இதை விளம்பரப்படுத்த நிறைய செலவிடுவார்கள். ஒவ்வொரு காருக்கும் நிறைய எரிபொருள் தேவைப்படும். ஒரு வாகனம் என்றால் பெரிதாக தெரியாது. பங்கேற்கும் அத்துனை வாகனத்திற்கும் ஒரு மாதிரியான பெட்ரோல் தேவைப்படுகிறது.  அத்துனை வாகனங்களும்  ஒரே நேரத்தில் புறப்படும் போது நிறைய இயற்கை மாசுபாடுகள் நிச்சயமாக ஏற்படும்.

    இதன் மூலம் வெளியேறும் காற்றால் இயற்கைக்கு மட்டும் இல்லாமல் மனிதர்களும் பல்வேறு பிரச்சனைகளும், நோய்களும் ஏற்படுகிறது.

    இந்நிலை முற்றிலுமாக மாறவேண்டும் என்பதால் தான் மின்சாரத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த வகையான ரேஸ் கார் தயாரித்தோம். இதன் மூலம் எரிபொருள் சேமிக்கவும் சுற்றுச்சுழல் சீரழிவிலிருந்து பாதுகாக்கவும் முடியும். எங்கள் நோக்கத்தை இதன் மூலம் சரியாகப் பயன்படுத்தி வருகிறோம்.

    கே: இந்தக் கண்டுபிடிப்பின் மூலம் உங்களுக்கு  ஏற்பட்ட மாறுதல்கள் என்ன?

    பொதுவாக கல்லூரி என்றாலே படித்து பட்டம் பெற வேண்டும் என்பதாகவே இருக்கும். ஆனால் எங்கள் கல்லூரியில் படிப்பிற்கு கொடுக்கும் அதே முக்கியத்துவம் கண்டுபிடிப்புகளுக்கும் கொடுப்பார்கள். அவர்கள் தரும் ஊக்கம், எங்களின் ஆர்வம் இரண்டும் சேர்ந்து தான் எங்களின் கண்டுபிடிப்பிற்கு பெரும் உந்து கோலாக இருக்கிறது. எங்களைப் பொறுத்தவரை புத்தகப்படிப்பு மட்டும் எதிர்கால வாழ்க்கைக்கு துணைபுரியாது என்று நினைக்கிறேன்.

    ஒரு காரின் வடிவமைப்பை தெரிந்து கொண்டு அந்தக் காரை எவ்வாறு உருவாக்க வேண்டும். எந்தப் பொருளை எந்த இடத்தில் பொறுத்துவது, ஒரு சிறிய ஸ்குரு தொடங்கி இன்ஜின் வரை எல்லாமே யாருடைய துணையுமின்றி நாங்களே ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்வதால் எங்களால் எதையும் செய்ய முடியும் உத்வேகம் கிடைக்கிறது.

    இது அப்போதைய கண்டுபிடிப்பிடிப்பிற்கு மட்டும் என்று நினைக்காமல் இதை நம் எதிர்கால வாழ்விற்கு எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தல் வேண்டும்.

    கே: உங்கள் சாதிப்பினை அடுத்தகட்டத்திற்கு எப்படி கொண்டு செல்ல உள்ளீர்கள்?

    SAE – Society Automobile Engineers என்ற அமைப்பு ஒன்று இருக்கிறது. இந்த அமைப்பில் புதியதாகத் தயாரிக்கும் கார்களை பதிவு செய்தல் வேண்டும். அவர்கள் அனுமதி அளித்த பின்னரே இப்படிப்பட்ட கார்கள் ரேசிங் செல்ல முடியும்

    மாணவர்களால் புதிதாகத் தயாரிக்கப்படும் இயந்திரங்களுக்கு என்று ஸ்போர்ட் போட்டி ஒன்று நடைபெறும். இப்போட்டிக்கு உலகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகத்திலிருந்து தாங்கள் தயாரித்த கார்களுடன் போட்டியாளர்கள் பங்கேற்பார்கள். அவ்வாறு மாணவர்களின் கண்டுபிடிப்பினை பாராட்டி அவர்களை கௌரவம் படுத்தும் விதமாக பரிசுகளும், பாராட்டுக்களும், உந்துதலும் ஊக்கமும் கொடுத்து வருகிறார்கள். இவர்களின் ஊக்கம் எங்களைப் போன்ற சாதிக்கத்துடிப்பவர்களுக்கு ஒரு பெரும் மகிழ்வைக் கொடுக்கும் என்று சொன்னால் அது மிகையல்ல.

    கே: OJAS 2018  கடந்து வந்த பாதையைப்பற்றி சொல்லுங்கள்?

    இந்தியாவில்  மாணவர்களுக்கு என்று பார்முலா மின்சார வாகன கண்டுபிடிப்பு என்று இருக்கிறது. 2012 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த குழு தொடர்ந்து ஏழாம் ஆண்டில் காலெடுத்து வைக்கிறது.   கோவையில் நடைபெற்ற பார்முலா கிரின் மற்றும் பார்முலா பாரத் ஆகிய போட்டிகளில் பங்கேற்று வெற்றிக் கனியை ருசித்தோம். இந்த வெற்றியை கொண்டாடிய கையோடு இத்தாலியில் நடைபெற்ற பார்முலா போட்டியில் பங்கேற்று சிறப்பான ஒரு இடத்தைப் பெற்றோம்.

    எங்கள் அணியில் பணியாற்றும் ஒவ்வொருக்கென்று ஒரு தனிப் பொறுப்பைக் கொடுத்து அதை அவர்கள் கவனிக்க வேண்டும் என்று நிபந்தனை இட்டுவிடுவோம். அனைவரும் அவர்களுக்குரிய பணிகளை மிகவும் நேசித்து செய்வார்கள் இதனாலே எங்களால் எங்கும் எதிலும் வெற்றி பெற முடிகிறது.

    எங்களின் முதன்மைன நோக்கமே  மோட்டார்ஸ்போர்ட் அணியாகத்திகழ வேண்டும் என்பது தான்.  எந்த அணியும்  எடுக்க துணியாத முயற்சியை எங்கள் அணி எடுத்தது.  முற்றிலும் மின்சாரத்தை மையமாகக் கொண்டு ஒரு காரை உருவாக்கினோம். இது எங்கள் வெற்றியின் மைல்கல் சாதனையாகும்.

    2014 ஆம் ஆண்டு ஒஜஸின் வாகனம் என்ற பெயரை E 619 என்று பெயர் மாற்றப்பட்டது. இது எடையில் மிகக்குறைவாக இருந்தது. இதை ஜெர்மனியில் நடந்த பார்முலா பந்தயத்திற்கு தேர்வு செய்யப்பட்டது. இந்தக் காரை 2016 ஆம் ஆண்டு சில இயந்திர வேலைபாடுகள் செய்து 2017 ஆம் ஆண்டு முற்றிலும் மாறுபட்ட வாகனமாக TOR 17 என்று பெயரிட்டு கோவையில் நடந்த பார்முலா கிரின் பந்தியத்தில் உலா விட்டோம். இந்தப் போட்டியில் எங்கள் கார் பல விருதுகளைப் பெற்றது. இதை பெரும் சாதனையாக நாங்கள் கருதுகிறோம்.

    கே: பெற்ற விருதுகள் குறித்துச் சொல்லுங்கள்?

    வடிவமைப்பில் முதலிடம்

    திட்டமிடலில் முதலிடம்

    வேக வளர்ச்சியில்  முதலிடம்

    வணிக திட்டமிடலில் இரண்டாமிடம்

    ஒட்டுமொத்தமாக சிறந்த அணியாக முதலிடம் பெற்றது.

    2018 ஜனவரியில் நடந்த பார்முலா கீரின் TOR 18 ஒட்டுமொத்தமாக முதலிடம் பெற்றோம்.

    அதே போட்டியில் வடிவமைப்பிற்கு முதலிடம் கிடைத்தது. வேக வளர்ச்சியில் முதலிடம்.  வணிகத்திட்டமிடலில் இரண்டாம் இடம் பெற்றோம்.

    கோவையில் நடைபெற்ற பார்முலா பாரத் எலட்ரிக் திட்டமிடலில் முதலிடம் , வணிக திட்டமிடலில் மூன்றாமிடம். வடிவமைப்பில ஆறாமிடமும் பெற்றோம்.

    கே: இந்த வகையான ரேசிங் கார்களின் தயாரிப்பு முறைகள் குறித்து?

    மற்ற கார்களைப் போலவே தான் இதன் தயாரிப்பு முறைகளும் இருக்கிறது. கார் பாகங்கள் கார்பன் ஃபையர் மூலமும், மேற்பாகங்கள் அனைத்தும் ISSI  1020 என்ற எஃகு மூலமும், பேட்டரி லத்தியம் பாலிமர் மூலமும் தயாரிக்கப்படுகிறது.

    இயற்கை மாசுப்பாட்டிற்கு எள்ளவும் பிரச்சனை இல்லாத வண்ணம் இக்கார்கள் வடிவமைக்கப்படுகிறது.

    கே: கூட்டு முயற்சியின் வெற்றியைப் பற்றி உங்களின் கருத்து?

    இங்கு எதுவும் தனி ஒருவரால் சாதிக்க முடியும் என்று சொல்லிவிட முடியாது. ஒவ்வொரு வெற்றிக்கும் பின்னால் யாரானும் ஒருவர் நம்முடைய சாதிப்பிற்கு பெரும் உந்துகோலாய் இருந்து ஊக்கப்படுத்திக் கொண்டிருப்பார்கள்.

    எங்கள் கல்லூரியும் இது போல தான். நிறுவனர் தொடங்கி ஆசிரியர், சக மாணவர்கள் என அனைவரும் எங்களுக்கு எப்போதும் தன்னம்பிக்கைக் கொடுக்கும் விதத்தில் எங்களை ஊக்கப்படுத்துவார்கள்.

    அது போல OJAS குழுவின் பணியாற்றும் அத்துனை பேரும் மிக ஒற்றுமையாக ஒவ்வொருவரின் கருத்துக்களையும் ஏற்றுக் கொண்டு, அதன் படியே எங்களின் பயணம் தொடங்கும். எங்களுக்கு யாரும் தலைவர் இல்லை. இதில் பணியாற்றும் ஒவ்வொருவருமே தலைவர் தான். இந்த அடிப்படையில் இருப்பதால் மட்டுமே எங்களால் எதையும் சாதிக்க முடிகிறது. எப்போதும் நாங்கள் நினைப்பது ஒற்றுமையே பலம் என்பது மட்டும் தான்.

    கே: உங்கள் OJAS குழுவின் வெற்றிக்காக உழைத்தவர்கள் பற்றிச் சொல்லுங்கள்?

    P Sandesh Reddy(Captain) Dhruv Jani(Vice Captain) Tript Agarwal(Technical head) Rasika Rawlley(ESO)

    Kartik Jindal(Manager) Aditya Vachaspati (Head of Aerodynamics Department) Anup Kumar Dalei(Head of Transmission Department) Sunny Chalkapurkar(Head of Vehicle Dynamics Department) Nisarg,Mali(Head of Chassis Department)  Nishant Verma(Head of Composite Department)MayankKapoor(Head of Brakes Department) Chaitanya Mehta(Head of Battery Pack Department)Harshendu Pathak(Head of Low Voltage Department) Ritwik Shekhar(Head of High Voltage Department.)

    Aerodynamics Department: J Sudhakaran, Kenil Patel, Yuvraj Sarout

    Transmission Department:

    Siddharth Sharan Akash Dhar

    Vehicle Dynamics Department:

    Shamith Shekhar Chassis Department: Ravi Ahuja Aniket Roy

    Composite Department

    N Sivachakravarthy Neeraj Meghani

    Brakes Department

    Sajal Garg Sachit Agarwal

    Management Department

    Ujwaldarshan Sushmit Bafna Harjit K SKshitij Banerjee, Amey Akash

    கே: வெளிநாடுகளை விட நம்நாட்டில் கண்டுபிடிப்புகளின் நிலை எவ்வாறு உள்ளது?

    வெளி நாடுகளில் படிக்கும் போது கண்டுபிடிப்புகளுக்கும் ஆய்வுகளுக்கும் அதிகம் முக்கியத்துவம் கொடுப்பார்கள். இதனால் அவர்கள் படிக்கும் போதே பல்வேறு சாதனையை செய்ய அவர்களால் முடிகிறது.

    வெளிநாடுகளை விட இந்தியாவில் தயாரிப்பு முறைகளில் ஒரு சில வேறுபாடு இருக்கிறது. ஒரு கார் தயாரிக்க வேண்டுமென்றால் அதன் உதிரிப் பாகங்கள் முழுவதும் நம்நாட்டில் கிடைப்பதில்லை. அவ்வாறு கிடைக்கும் போது நாமும் மற்ற நாடுகளைப் போல வடிவமைப்புகளையும், சிறந்த தொழிற்நுட்பங்களையும் மேலும் திறம்பட செய்ய முடியும்.

    வெளிநாடுகளைப் போல கண்டுபிடிப்புகள் ஒரே மாதிரி இருந்தாலும் இன்னும் நாம் சில பொருட்களை வாங்க வேண்டுமென்றால் வெளி நாடுகளைத் தான் எதிர்பார்க்கிறோம்.

    இந்த நிலை மாற வேண்டுமென்றால் நம்முடைய கண்டுபிடிப்பை மேலும் துரிதப் படுத்த வேண்டும். நம்நாட்டிலேயே எல்லா விதமான கண்டுபிடிப்புகளும் இருந்தால் தான் சாதிப்பை நம்மால் பலப்படுத்த முடியும்.

    கே: எதிர்காலத் திட்டம் பற்றி?

    இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் உதிரிபாகங்களைக் கொண்டு ஃபார்முலா ரேசிங் காரை உருவாக்க வேண்டும். வாகனத்தின் எடையைக் குறைவான அளவில் தயாரிக்க வேண்டும்.

    இவ்வாகனத்தின் தொழிற்நுட்பம் டூ ஸ்பிட் கியார்பாக்ஸ் கார்பன் பைபரால் வலுவாக்கப்பட்டு, சர்வதேச தரம் வாய்ந்த வேக வளர்ச்சி மற்றும் தடுப்பு சாதனங்களின் இவ்வண்டியை சர்வதேச பந்தியங்களில் உள்ள அதிநவீன வாகனங்களுக்கு நிகரான அந்தஸ்தை பெற வேண்டும் என்பதே எங்களின் நோக்கமாக இருக்கிறது.

    கே: எதிர்கால இன்ஜினியர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?

    இவ்வுலகம் இயந்திரமாக்கப்ட்ட உலகம். இன்னும் சில ஆண்டுகளில் எல்லாவற்றிலும் இயந்திரம் என்ற நிலை வந்து விடும்.

    வெறும் புத்தகத்தைக் படித்து, அதன் மூலம் பெறும் அறிவு என்பது நிலையான அறிவுயற்று. எதையும் தீர்க்கமாக செய்முறை மூலம் கற்றுக் கொள்ளும் பாடம் எப்போதும் மனதில் நீங்காத ஒரு வளர்ச்சியாக இருக்கும்.

    இவ்வுலகம் ஒரு அறிவுப் புதையல் தேட தேட தினமும் ஏதேனும் ஒன்று புதிதாக கிடைத்துக் கொண்டேயிருக்கும் என்பதை மட்டும் மனதில் நிறுத்தி உங்களை நீங்களே தயார் படுத்திக் கொள்ளுங்கள்.

    கே: உங்களின் வெற்றியை விஐடி பல்கலைக்கழகம் எப்படி பார்க்கிறது?

    நாங்கள் இன்று ஒரு சாதனையாளராக இருக்கிறோம் என்றால் அதற்கு முதன்மைக்காரணம் எங்கள் பல்கலைக்கழகம் தான். எங்களை ஒரு பெரும் கண்டுபிடிப்பாளராக மாற்ற எங்களுக்கு தேவையான அத்துனை உதவிளையும் செய்து கொடுக்கிறது.

    எங்களுக்கு மிகுந்த சுதந்திரம் கொடுத்து ஊக்கப்படுத்தி வருகிறார்கள். எல்லா விதமான முயற்சிக்கும் ஒரு ஏணிப்படியாக இருந்து எங்களை நல்வழிப்படுத்துகிறார்கள். மாணவர்களின் நலனில் அக்கறையும் பற்றும் கொடுத்து உந்து சக்தியாக செயல்படுத்துவதில் எங்கள் நிறுவனத்திற்கு இணை எங்கள் நிறுவனமே.

    திறமைன மேலாண்மை, அனுபவமிக்க ஆசிரியர்கள் அவர்களின் வழிகாட்டுதல்கள் போன்றவை தான் எங்கள் வெற்றிக்கு காரணமாக நினைக்கிறோம்.

    புதிய புதிய கண்டுபிடிப்புகள்,புதிய புதிய ஆய்வுகள் போன்றவை செய்து கொண்டேயிருக்க வேண்டும் அப்போது தான் நாடு வளர்ச்சிப் பாதையில் செல்லும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

    இந்த இதழை மேலும்

    உண்மை உன்னை உயர்த்தும்

    வுவுவு இதற்குள்ளே உன் உயர்வு

    அறிவு, துணிவு, தெளிவு, பணிவு போன்ற இந்த வுக்குள் எவனொருவனிடத்தில் (மிகையாக) அதிகமாக உள்ளிருக்கின்றதோ அவனிடத்தில் உயர்வு இருக்கும்.

    எவனொருவனிடத்தில் அறிவு அதிகமாக, அதிகமாக,  பணிவும் அதிகமாகிறதோ, அவனே உலகில் உண்மையான அறிவாளி, மென்மையான அறிவாளி.

    துணிந்த உள்ளமும் வேண்டும்; நல்லதற்குப் பணிந்த உள்ளமாகவும் இருக்க வேண்டும்.

    அடக்கு அடக்கு அடக்கு உன் அகந்தையை அடக்கு அகந்தையை அடக்காவிட்டால் நீ கந்தையாகி விடுவாய். கர்வத்தை விட்டுவிட்டுக் கருமத்தைத் தவிர்.

    ஆணவத்தைக் கொல், உன்னை வெல்

    நேர்மையானவர்களிடத்தில் அதிகப் பணிவிருக்கும் என்கிறது ஒரு ஆங்கிலப் பழமொழி.

    நீதியை நம்பு அதுவே தமிழனின் பண்பு. உண்மையை நம்பு, அதுவே இந்தியனின் பண்பு. நிறம் மாறுவது வேண்டுமானால் மனிதனுக்கு அழகாக இருக்கலாம். ஆனால் தரம் மாறுவது மனிதனுக்கு அழகு அல்ல.

    நீதி நியாயமே என்றும் வெல்லும், எங்கும் வெல்லும். அதுவே வரலாற்றிலும் நில்லும், தமது பெயரைச் சொல்லும்.

    உண்மையாக இருந்தால் உனக்கு என்றும் நன்மைதான்.

    எந்நேரத்திலும் நேர்மையுடன் இருங்கள். வாய்மை இருப்பவனையே இவ்வையகம் போற்றும்வரலாறுபுகழும்

    வாய்மையில் தூய்மை வேண்டும்.

    உண்மையானவனாகவும், நுண்மையானவனாகவும், மென்மையானவனாகவும் இரு.

    நீதி, நேர்மை, நியாயம் இல்லையென்றால் ( இங்கு வர ) நீ யார் என்று வரலாறு உன்னைக் கேட்கும்.

    உண்மையை அழிக்கின்ற சக்தி

    நேர்மையை ஒழிக்கின்ற சக்தி

    நீதியை ஜெயிக்கின்ற சக்தி

    வாய்மையை வெல்கின்ற சக்தி

    நியாயத்தை சிதைக்கின்ற சக்தி

    இவ்வுலகில் எதுவும் இல்லை.

    உண்மைக்குஇருக்கும்சக்தி

    உலகில் எதற்கும் இல்லை.

    வாய்மையானவனாகவும் தூய்மையானவனாகவும் இரு.

    அப்படியிருப்பதும் உனது வலிமைதான்.

    உயர்வதென்பது எப்படி வேண்டுமானாலும் ( வெற்றி ) உயரலாம்.

    உனது வெற்றியில்சாதனையில்உயர்வில் நீதிநேர்மைநியாயம் இருக்கவேண்டும்.

    எப்படி வேண்டுமானாலும் செய்வதுசெய்தது சாதனையல்ல.  விதிமுறைகளுடன் இப்படித்தான் செய்யவேண்டும்செய்வதும்செய்ததும்தான் முன்னேற்றச் சாதனைச் சரித்திரமாகும்.

    உன் வாழ்க்கைப்போரில் உன் சமூக நியாயமான இலட்சியத்தின் எதிர்ப்பையும்,  எதிரியையும், புறமுதுகில் தாக்கி வீழ்த்தியதெல்லாம் சாதனையாகிவிடாது. அவன் நேர் எதிரே முன்புறமாக நெஞ்சில் தாக்கி வீழ்த்தியதே சாதனையாகும்.

    அதேபோல் உனது இலக்கு எதுவாக வேண்டுமானாலும் என்று இருக்கையில் அந்த இலட்சியம் சமூக நீதி ( நியாயம் ) வாய்ந்ததாக இருக்கவேண்டும்.

    கோட்சேயின் இலட்சியம் காந்தியைக் கொல்வது; இலட்சியப்படி கொன்றான். கோட்சேவாகிய அவனது இலட்சியம் நிறைவேறியது. ஆனால் அதன் பின்பு அவனின் குறிக்கோள் அடைவைநிறைவை இச்சமூகம் ஏற்றதா ? இல்லை ஏற்கவில்லை. இதுவரை ஏற்கவில்லை. இனிமேலும் ஏற்காது, என்றும் ஏற்காது. சமூக அநீதியான அவனது இலட்சியச் செயலை நம் தேசம் மட்டுமல்ல, உலகிலுள்ள எந்த தேசமும் ஏற்காது. அதேபோல் தன் உயிரைவிட அதிகமாக நேசித்த ( தாய் ) இம்மண்ணைவிட்டு தம் உயிர் பிரிகிறதென்று தெரிந்தும்என்னை சுட்டவனை விட்டு விடுங்கள். அவனை ஒன்றும் செய்துவிடாதீர்கள்என்று சொன்னார் மகாத்மா காந்தி அவர்கள். அவரது அகிம்சை, அறவழிக் கொள்கையையேற்ற இந்த உலகமும் இறக்கும்முன் தோன்றிய காந்தியின் அந்த மனிதாபிமானமான, ஆழ்ந்த இரத்தப் பாசமான அந்தக் கொள்கையையும் இந்த உலகம் ஏற்றது.

    நமது மனுநீதிச் சோழனை எடுத்துக் கொள்ளுங்கள். சமூக நீதிக்காக தன் ஒரே மகன் என்றுகூட பாராது தன் மகன் ஏற்றி இறந்த அந்த கன்று எந்த இடத்தில் எப்படித் துடிதுடித்து இறந்ததோ அந்த இடத்தில் அதே மாதிரி தன் மகனையும் அதே தேர்ச்சக்கரத்தில் படுக்கவைத்து ஏற்றினான். இதை உலகம் ஏற்கவில்லையா? என்றோ ஏற்றதுதானே, அது என்றும் ஏற்பதுதானே இந்நீதிச் செயலாள்.

    சோழனை மனுநீதிச் சோழன் என்று இந்த சமூகம் ஏற்றது.

    இந்திய மக்களை அதிகமாக நேசித்தவர்களும், தன் தாய் மண்ணைக் காக்க தன் உயிரையும் துறந்தவர்களுமான மாவீரன் தீர்த்தகிரி என்கிற தீரனையும் கட்டபொம்மனையும் எடுத்துக் கொள்ளுங்கள். நமக்கு அடிமை விலங்கிட்ட ஆங்கிலேயர்களால் சிறைபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு கம்பி எண்ணிக் கொண்டிருந்தபொழுது உடனே அவர்களை ஆங்கிலேயன் தூக்குத் தண்டனை விதித்து தூக்கில் போட்டுக் கொல்லவும் இல்லை. மரண தண்டனை விதித்து உடனே இம்மண்ணோடு மண்ணாகச் சாகடிக்கவும் இல்லை.

    தொடரும்

    இந்த இதழை மேலும்

    நீங்கள் வெளிப்படைத்தன்மை உடையவரா?

    முதலில் வெளிப்படைத்தன்மை என்றால் என்ன? என்று பார்ப்போம்.  பிறர் தெளிவாக அறியக்கூடிய  வகையில் நடந்து கொள்வதை வெளிப்படைத்தன்மை எனலாம். அது ஓளிவு மறைவு இல்லாத தன்மையாகும். நமது செயல்பாடு நேரடியாகப் புலனாகும் விதத்தில் இருப்பதாகும். சிலர் எனக்கு எதையும் நேரடியாக பேசித்தான் பழக்கம் என்பர். சுற்றி வளைத்து பேசத் தெரியாது என்பர். ரகசியத்தன்மைக்கு முற்றிலும் எதிரானதுதான் வெளிப்படைத்தன்மையாகும்.

    பல உயர் அதிகாரிகள் தங்கள் சொத்து விபரங்களை இணையதளத்தில் வெளியிட்டு வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொள்கிறார்கள்.  நன்கொடையாக பெறும் நிதியை வெளிப்படையாக தெரிவிப்பவர்கள் உள்ளனர்.

    வழக்குவிசாரணைவெளிப்படையாகஇருக்கவேண்டும்என்பதற்க்காகநீதிமன்றங்களில்கண்காணிப்புகேமராபொருத்தப்பட்டுள்ளதைப்பார்க்கிறோம்

    அரசுப் பணிக்காக நடைபெறும் போட்டித்தேர்வுகள்  வெளிப்படையாக தலையீடு இன்றி தகுதியின் அடிப்படையில் நேர்மையாக நடைபெறுகிறது. திறமையானவர்கள் வாய்ப்பு பெறுகின்றனர்.

    அரசுத் துறைகளில் பணியிடமாறுதல் கலந்தாய்வு வெளிப்படையாக நடத்தப்படுவது ஆரோக்கியமான விஷயமாகும். பலர் பலனடைகின்றனர்.

    வெளிப்படைத்தன்மையால் ஏற்படும் நன்மைகள்:

    ஒரு இனிப்புகடையில் விளம்பரப்பலகை வைக்கப்பட்டுள்ளது. இங்கு பலகாரங்கள் சுத்தமான நெய்யினால் தயாரிக்கப்பட்டவை. விலையைப் பொருட்படுத்தாமல், தரத்தை பெரிதும் விரும்புபவர்கள் அந்தக் கடையை தேடிச் சென்று வாங்குகிறார்கள். பிறருக்கும் சொல்கிறார்கள்.

    நல்லி சில்க்ஸ் என்கிற பிரபல துணிக்கடையில் தள்ளுபடி என்பதே கிடையாது. ஆனாலும் வாடிக்கையாளர்கள் மனதில் மிகப் பெரிய செல்வாக்கைப் பெற்றதற்கு காரணம் பட்டுப்புடவைகளின் தரத்தில் சமரசமே கிடையாது என்பதுதான்.

    சிலர் நெஞ்சை நிமிர்த்தி சொல்லுவார்கள். நான் நேர்மையற்றவன் என்றால் என் எதிரிகூட நம்ப மாட்டான். அதுதான் நான் சம்பாதித்தது என்பர். திரு.சகாயம் ஜயா அவர்கள்  “லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர்என்ற வாசகத்தை தன் அலுவலக அறையில் வெளிப்படையாக வைத்திருப்பார்.

    நகைக்கடையில் பொதுவாகவே ஹால்மார்க் முத்திரை பதித்த நகைகள் தரமானவை. 22 காரட் சுத்தமான தங்கம். அது போல மனிதர்களும் தங்கள் வெளிப்படைத்தன்மையால் உலக அரங்கில் நன்மதிப்பை பெற வெளிப்படைத் தன்மை மிகவும் அவசியம்.

    வெளிப்படைத்தன்மை உடையவர்களுக்கு பெரிய அளவில் துன்பங்கள் இருப்பதில்லை. வாழ்க்கை ஓளி மிகுந்ததாக இருக்கிறது. உடலில் பொலிவு கூடுகிறது. புனிதமானவராக கருதப்படுகிறார். சிறைவாசம், குடும்பப்பிரிவு உள்ளிட்ட துன்பங்களில் சிக்குவதில்லை.

    தகவல் அறியும் சட்டம் என்பதே அரசின் செயல்பாடுகளை ஓளிவுமறைவின்றி வெளிப்படைத்தன்மையை கொண்டதாக இருக்க வேண்டும் என்பதற்க்காகத்தான் உருவாக்கப்பட்டது. உன்னதமான சட்டத்தை மற்றவர்களை சிக்க வைப்பதற்க்காக தவறாகப் பயன்படுத்துபவர்களும்  உள்ளனர் என்பது வருந்தத்தக்கது.

    நாம் தரவேண்டிய தொகையை வங்கிக்கணக்கில் செலுத்தினால் அது மிகவும் வெளல்ப்படையானது. அரசுத்துறையில் பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் முழுமையாக சென்றடைய வெளிப்படையாக உரியவரின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படுவது வரவேற்கத்தக்கது.

    மாதக்கடைசியில் ஒரு  அலுவலகத்திற்கு சென்று இருந்தேன். கதவில் ஒரு செலவு விபர அறிக்கை ஒட்டப்பட்டு இருந்தது. இன்னாரின் பணி ஒய்வு விழாவிற்கு சங்க உறுப்பினர்களிடம் வசூல் செய்த தொகை இவ்வளவு. சந்தன மாலை, சால்வை, பரிசுப்பொருட்கள் மற்றும் இனிப்பு, கார வகை மற்றும் தேனீர் வாங்கிய செலவு விபரம் மற்றும் மீதத்தொகை தொடர்பான விபரங்கள் இருந்தது. செலவு தொடர்பாக ரசீதுகள் பதிவேட்டில் முறையாக பராமரிக்கப்படுகிறது. இது சங்கப் பொருளாளரின் வெளிப்படைத்தன்மையை நேர்மையை காட்டுகிறது.

    கிரிக்கெட் போட்டியை பார்க்கிறோம். விளையாட்டு வீரர் அவுட் ஆகிவிட்டாரா என்பதை துல்லியமாக எலக்ட்ரானிக் மின்திரையில் வெளிப்படையாக காட்டுகிறார்கள். இதில் யாரையும் குறை சொல்ல மடியாது.

    ஒய்வு பெற்ற காவல்துறை அதிகாரி திரு. கலியமூர்த்தி அவர்கள் சொல்வார்கள். குற்றவாளிகளால் தடயமில்லாமல் தவறு செய்யவே முடியாது. பலநாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான். யாருக்கும் தெரியாமல் ஒரு செயலை செய்கிறோம் என்றால், அது தகாத செயலாக இருக்கலாம். ஒரு நாள் சாயம் வெளுக்கும்.

    பள்ளி அல்லது கல்லூரி தேர்வு எழுதும் மாணவன் அல்லது மாணவிக்கு விடை தெரியவில்லை. சரியாகப் படிக்கவில்லை. காப்பி அடிப்பது, பிட் அடிப்பது போன்ற தவறான விஷயங்களை வெளிப்படைத்தன்மையோடு செய்ய முடியுமா?

    தவறு செய்பவர்கள் யாருக்கும் தெரியாமல் ரகசியமாகவே செய்கிறார்கள்.

    திருடன் பூட்டிய வீட்டை உடைத்து நகைகளை திருடுகிறான். ஏன் முகமூடி அணிகிறான். ஏன் ரகசிய காமிரா பொருத்தப்பட்டு இருந்தால் அதை சிதைக்க முற்படுகிறான். சாலையில் செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பவர்கள் ஹெல்மெட் அணிந்து கொண்டு தங்கள் முகத்தை மறைத்துக் கொள்வது ஏன்?

    பிரபல துணிக்கடையில் ஒரு நாற்பது வயதைக் கடந்த ஒருவர் புடவை மற்றும் வுல்லன் ஸ்வெட்டர் தேர்வு செய்து பில் போடச் சொல்லிவிட்டு தற்செயலாக கண்காணிப்பு கேமரா அந்தக் கடையில் இருப்பதைப் பார்த்துவிட்டு திகைத்துப் போனார். சிப்பந்தியிடம் ஏன்யா, கேமரா எல்லாம் பொருத்தி உயிரை எடுக்கிறீர்கள் எனக் கேட்டு விட்டார். அதற்கு சிப்பந்தியோ, உங்களைப் போல துணி திருடாமல் பணம் செலுத்தி வீட்டிற்கு துணி வாங்கிச் செல்லும் வாடிக்கையாளர்களாகவே எல்லோரும் இருந்து விட்டால் காமிராவோ, காவலாளிகளோ  தேவையில்லை. எங்களுக்கும் செலவு மிச்சம் என்றார். அது சரி நீங்கள் ஏன் திகைக்கிறீர்கள் என்று சிப்பந்தி கேட்டபோது, நான் எனது சின்ன வீட்டிற்கு அல்லவா வாங்கிச் செல்கிறேன் என்றாராம். என் மனைவிக்கு, பிள்ளைகளுக்கு தெரிந்து விட்டால் என் பாடு திண்டாட்டம்தான் என்றாராம். முறை தவறிய உறவுக்கு ஓத்துழைப்பவருக்கு பரிசு தருகிறார். பகிரங்கமாக வெளிப்படைத்தன்மையுடன் தர முடியுமா?

    ஒப்பந்ததாரர்களிடம் கமிஷன் வாங்குவது, பயனாளிகளிடம் லஞ்சம் வாங்குவது, உள்ளிட்ட சட்டத்திற்குப் புறம்பான செயல்களை வெளிப்படைத்தன்மையுடன் ஒரு போதும் செய்ய முடியாது. காவலர்களிடம் சிக்கிய குற்றவாளிகள் தொலைக்காட்சியில் காட்டப்படும் போது, தங்கள் முகத்தை ஏன் மறைத்துக் கொள்கிறார்கள்.

    வாடிக்கையாளர்களுக்கு அதிக வட்டி தருவதாக கூறி  நிதி நிறுவனம் நடத்தி தலைமறைவானவர்கள் உள்ளனர். வெளிப்படையாக நடமாட முடிவதில்லை.

    கணக்கில் வராத கருப்புப் பணத்தை பாதுகாக்க சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கிறார்கள் என சொல்கிறார்கள் அல்லவா. ஜெர்மனியில் யூதர்கள் ஹிட்லர் ஆட்சிக்காலத்தில் வேட்டையாடப்பட்டார்கள். அவர்களிடம் இருந்து தப்பிக்க  யூதர்கள் தங்கள் பணத்தை செல்வத்தை பாதுகாக்க சுவிஸ் வங்கியை அணுகினர். 15 இலக்க எண் மட்டுமே வழங்கப்படும். யார்  பெயரில் எவ்வளவு பணம் உள்ளது என்பது தெரிவிக்க மாட்டார்கள். ரகசியத்தன்மை காக்கப்படும். மேலும் பணத்தை சேமிப்பவர்களுக்கு சேமிப்புத் தொகைக்கு உரிய வட்டி கிடையாது. கணக்கு வைத்திருப்பவர் சேவைக் கட்டணம் செலுத்த வேண்டும். பல நாடுகளில் தவறான வழியில் பணம் சேர்த்தவர்கள் வருமான வரித்துறையினரிடம் இருந்து தப்பிக்க சுவிஸ் வங்கியில் ரகசிய கணக்கு வைக்க முயல்கிறார்கள்.

    சமீபத்தில் ஒரு இளம் பெண் கும்பகோணம் ரயில்வே ஸ்டேஷனில் நள்ளிரவில் வந்து இறங்குகிறார். தனியார் வங்கியில் வேலையில் சேர்வதற்கு தனியாக வந்தவர் சமூக விரோதிகளிடம் சிக்கி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிய செய்தி கொடூரமானது. இப்படிப்பட்ட குற்றவாளிகள் வெளிப்படைத் தன்மையுடன் இருப்பார்களா?

    திரு. இறையன்பு இஆப அவர்கள்  அழகாகச் சொல்வார். சிலர் இரண்டு மொபைல் வைத்திருப்பார்கள். பர்சனல் நம்பரை எல்லோருக்கும் தர மாட்டார்கள். அழைப்பு வந்தால் வெளியே சென்று பேசுவது, முனு முனுவென்று மெதுவாக பேசுவது சிலரது பழக்கம். நாம் எதை பார்க்கிறோம் யாரிடம் பேசுகிறோம் என்பதெல்லாம் மிகவும் வெளிப்படையானவை என்பதை உணராதவர்கள். பூணை கண்களை மூடிக்கொண்டால் உலகம் இருண்டு விடுவதில்லை.

    பல குற்றவாளிகள் சிறை செல்வதற்கு முக்கிய ஆதாரமாக இருப்பவை மொபைலில் யாரிடம் பேசிக் கொண்டு இருந்தார் என்கிற தகவல்தான்.

    விலங்குகள் தன் முகத்தை கண்ணாடியில் பார்த்து ரசிப்பதில்லை. நாம் வெளிப்படைத்தன்மையுடன் நேர்மையாக நடந்து கொள்ளும் போது நம் முகம் கண்ணாடியில் பிரகாசிக்கிறது.

    தகாத செயல் செய்பவர்கள்தான் வெளிப்படைத்தன்மையை விரும்புவதில்லை. தகுந்த செயல் செய்பவர்களுக்கு ஓளிவு மறைவு ரகசியத்தன்மை தேவையே இல்லை.

    நாம் சிறந்த மகனாக, சிறந்த மாணவனாக, சிறந்த குடும்பத் தலைவனாக, சிறந்த ஆசிரியனாக, சிறந்த காவலர்களாக, சிறந்த குடிமகனாக விளங்க வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவது அவசியம்.

    சிலர்மதுஅருந்தும்போது, புகை பிடிக்கும் போது, மறைவான இடங்களை நாடுவது அவர்களது வழக்கம். ஏனெனில், தமது செயல் சரியானதல்ல என்ற குற்ற உணர்வுதான்.

    வெளிப்படைத்தன்மை என்பது ஒரு சிறந்த பண்பு. உன்னதமானவர்கள், மேன்மையானவர்கள், தங்கள் வாழ்வில் கடைபிடிக்கும் நற்செயல். அதை நாமும் கடைப்பிடிப்போம். யாருக்கும் தெரியாமல் ஏதும் தவறான காரியங்களை செய்ய மனம் எண்ணினால் அதை அறிவு என்ற அங்குசத்தால் அடக்குவோம். பிறருக்கு முன்மாதிரியாக இருப்போம். சிறந்த இளைய தலைமுறை உருவாகட்டும்.

    இந்த இதழை மேலும்

    பசுமை பென்சில்

    வளர்ந்து வரும் இந்நாகரீக காலகட்டத்தில் அனைத்திலும் புதுமை புகுந்து விட்டது. ஒரு புறம் அது வளர்ச்சி என்றாலும், மறுபுறம் அழிவும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. அதை நாம் ஒத்துக் கொள்ள வேண்டும்.

    பிளாஸ்டிக் பெருக்கம், நகரமயமாதல் போன்ற காரணத்தால் நாம் பழமையை மறந்து புதுமையை நோக்கி புறப்பட்டு கொண்டிருக்கிறோம்.

    வீட்டுக்கு ஒரு மரம் வைக்க வேண்டும் என்று சொல்கிறார்கள், அதை சிலர் செவி கொடுத்துக் கூட கேட்பதில்லை. மரத்தை வைத்து பராமரிக்க வில்லை என்றாலும் சரி, இருக்கும் மரத்தை அழிக்காமல் பார்த்துக் கொண்டாலே போதும் நாடு பசுமையானதாக மாறிவிடும்.

    நம் நாட்டில் நிறைய பேர் தங்களால் முடித்தளவிற்கு மரத்தை பாதுக்காத்தும் பசுமையைப் பேணிகாத்தும் வருகிறார்கள். அதில் ஒரு சிலர் நன்றாக கவனிக்கப்படுகிறார்கள். அதில் ஒருவர் பசுமை பென்சில் என்றொரு முறையை நடைமுறை படுத்தி வருகிறார்.  அதில்  100 சதவீதம் மறு சுழற்சி செய்த பேப்பரைக் கொண்டு பென்சில் தயாரிக்கப்படுகிறது. இதன் முதன்மையான நோக்கமே மரம் வெட்டுவதை தடுக்க வேண்டும் என்பதாகவே இருக்கிறது.

    இந்தப் பென்சிலில் சிறப்பம்சம் என்னவென்றால் பின்புறம் இயற்கை காய்கறி விதைகள் வைக்கப்பட்டுள்ளது. அந்தப் பென்சிலை முழுமையாகப் பயன்படுத்திய பின்பு இந்தப் பென்சிலின் பின்புறத்திலுள்ள விதைகளை விதைக்கலாம்.

    ஒவ்வொரு பென்சிலிலும் 10 முதல் 20க்கும் மேற்பட்ட  காய்கறி விதைகள் உள்ளன. அதில் தக்காளி, கத்திரிக்காய், கீரைகள், மிளகாய்,  வெங்காயம், முள்ளங்கி, கடுகு, மல்லி, வெண்டைக்காய், வெள்ளிரிக்காய் போன்ற விதைகள் உள்ளன.

    இதை வாங்கி பயன்படுத்தும் மாணவர்கள் மத்தியில் விதைத்தல், செடி கொடிகளை வளர்த்தல் போன்ற எண்ணங்களை உருவாக்கவே இந்த விதைகள் வைக்கப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு பென்சிலிலும் திருக்குறள், ஆத்திச்சூடி, பொன்மொழிகள் எழுதப்பட்டிருக்கும். வாங்குபவர்கள் வசதிக்கேற்ப அவர்கள் கேட்கும் பெயரும் வாசகமும் அச்சு செய்து தரப்படுகிறது.

    இந்தப் புதுமையான முயற்சியால் தற்போதைய உள்ள இளைய சமுதாயம் விதைகள் சார்ந்த விழிப்புணர்வுவை பெரிய அளவில் தெரிந்து கொள்கிறார்கள். இதை அனைவரும் வாங்கி ஒரு பசுமைமிக்க பாரதத்தைப் படைப்போம்இந்த நல்லதொரு முயற்சியை வாழ்த்துகிறது தன்னம்பிக்கை மாத இதழ்.

    இந்த இதழை மேலும்

    வெற்றி உங்கள் கையில்- 61

    விமர்சனங்களை எதிர்கொள்வோம்

    வெற்றிப் படிகளில் முன்னேறி வாழ்க்கையில் சிறப்பை அடைய விரும்புபவர்கள், விமர்சனக் கணைகளை தைரியமுடன் எதிர்கொள்வது சிறந்ததாகும்.

    ஒரு துறையில் ஒருவர் முன்னேறும் போது அவரைப் பற்றிய பல்வேறு விமர்சனங்கள் அம்புகளாய் அவரை நோக்கி வரும்.

    இவர் என்ன பெரிய மனிதரா?. இவரைப்போய் மேடையில் வைத்திருக்கிறீர்களே?”.

    இந்தப் பயலையெல்லாம் வைக்க வேண்டிய இடத்தில் வைக்க வேண்டும். இல்லையென்றால் நம்மை வீழ்த்திவிடுவான்”.

    இவள் ஒரு அரக்கி. யாரிடமும் சண்டைக்கு வந்துவிடுவாள்”.

    இவர்கள் குடும்பம் சரியில்லை”.

    என ஒரு மனிதரின் நிலையைக்கண்டு எள்ளி நகையாடி விமர்சனம் செய்பவர்கள் உண்டு.

    மற்றவர்கள் செய்யும் விமர்சனங்களையெல்லாம் காதுகொடுத்து கேட்டு, அதற்கு சிலர் விளக்கம் கொடுப்பார்கள். வேறுசிலர், விமர்சனம் செய்பவர்களைப்பார்த்து, கோபப்படுவார்கள். இன்னும் சிலர், விமர்சனங்களைக்கண்டு பயப்படுவார்கள்.

    இந்த விமர்சனங்களே இல்லாமல் இருந்தால், நாம் மகிழ்ச்சியாக வாழலாம்என்றும் சிலர் நினைக்கிறார்கள்.

    ஒருவரைப் பற்றிய விமர்சனங்கள் எல்லா நேரங்களிலும், எல்லா நிலைகளிலும் எழுப்பப்படுவதுண்டு. அந்த விமர்சனங்களில் சில உண்மையாக இருக்கலாம். மற்றவர்களைக் காயப்படுத்துவதற்காகவே சில விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதுண்டு. பொறாமை உணர்ச்சியாலும், பொங்கிவரும் வெறுப்பாலும், விமர்சனத் தீயை சிலர் வளர்ப்பார்கள்.

    இந்த விமர்சனங்களை நிரந்தரமாக தவிர்க்க முடியுமா?” என்றுகூட சிலர் எண்ணுவதுண்டு.

    அவன் ஒரு பக்தன்.

    கடவுள் வழிபாட்டில் சிறந்து விளங்கினான். நாள்தோறும் கடவுளை வணங்கி, தவம் மேற்கொள்வதை வாடிக்கையான செயலாக வைத்திருந்தான்.

    ஒருநாள், அவன் தவத்தில் இருந்தபோது, கடவுள் அவனது தவத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டார். அவன் முன்னால், திடீரென தோன்றினார்.

    பக்தாஉனது உண்மையான தவத்தை போற்றினோம். உனக்கு என்ன வரம் வேண்டும்?” என்று கடவுள் கேட்டார். திடீரென கடவுள் கேட்டதால் என்ன பதில் சொல்வது?” என தெரியாமல் திண்டாடினான் பக்தன்.

    என்னைப்பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள்? என்பதை நான் உணர்ந்துகொள்ளும் ஒரு வாய்ப்பை எனக்கு வரமாகத் தர வேண்டும்என்று கேட்டான் பக்தன்.

    பக்தன் கேட்ட வரத்தை வழங்கினார் கடவுள்.

    சிலநாட்கள் சென்றது. பக்தன் கண்ணீரோடு அழுது புலம்பிக்கொண்டே கடவுளை நோக்கி மீண்டும் தவம் செய்தான். கடவுள் அவன்முன் தோன்றினார்.

    பக்தாஉனக்கு வரம் தந்துவிட்டேன். மீண்டும் உனக்கு என்ன வேண்டும்?” என்றார்.

    கடவுளேநீங்கள் எனக்கு வழங்கிய வரத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளுங்கள்என்று கடவுளிடம் கெஞ்சினான் பக்தன். கடவுள் ஆச்சரியப்பட்டார்.

    உனக்கு என்ன பிரச்சினை?” என்று கேட்டார்.

    என்னோடு பழகுகிறவர்கள் அத்தனைபேரும் என்னைப்பார்த்து பொய்யன் என்கிறார்கள். பொறாமைக்கொண்டவன் என்று சொல்கிறார்கள். சோம்பேறி, நயவஞ்சகன், எத்தன் என்றும் பட்டம் சூட்டுகிறார்கள். இவற்றையெல்லாம் நான் கேட்க வேண்டும் என்று விதி இருக்கிறது. இத்தனை பிரச்சினைக்கும் காரணம் நீங்கள் கொடுத்த வரம்தான்என்றான்.

    கடவுள் அதிர்ந்துபோனார்.

    நான் என்ன செய்தேன்? மற்றவர்கள் நினைப்பது உனக்குத் தெரியவேண்டும் என்று வரம் கேட்டாய். கொடுத்தேன். இப்போது துடிக்கிறாயே! சரிஉனக்கு ஒரு வாய்ப்பு தருகிறேன். அந்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திக்கொள். உனது ஊரிலுள்ள பெரிய ஆலமரத்தின்கீழ் சென்று கண்ணை மூடி படுத்துக்கொள். பின்னர், மற்றவர்களெல்லாம் உன்னைப் பார்த்து என்ன சொல்கிறார்கள்? என்பதை கூர்மையாக கவனித்துக்கொண்டு, பின் என்னிடம் வந்து சொல்என்றார் கடவுள்.

    கடவுளின் வழிகாட்டல்படி பக்தன் ஆலமரத்தடியின்கீழ் வந்து படுத்துக்கொண்டான். அங்கு சிறிதுநேரத்தில் ஒரு குடிகாரன் வந்து சேர்ந்தான்.

    பாவம்நம்மைப்போல் ஒரு குடிகாரப் பயல் படுத்துத் தூங்குகிறான். நன்றாகத் தூங்கட்டும்” – என்று சொல்லிவிட்டு அந்த இடத்தைவிட்டு நகர்ந்தான்.

    அடுத்ததாக, ஒரு கொள்ளைக்காரன் ஆலமரத்தின் வழியாகச் சென்றான். தூங்கும் பக்தனைக் கவனித்தான்.

    இவன் ஒரு கொள்ளைக்காரனாக இருப்பான்போல் தெரிகிறது. இரவு முழுவதும் விழித்துக்கொண்டு கொள்ளையடித்தவன் இங்கேவந்து சுருண்டுப் படுத்துத் தூங்குகிறான்என்று எண்ணிக்கொண்டே அவனை கடந்து சென்றான்.

    சிறிதுநேரத்தில் வயிற்று வ|யால் துடித்துக்கொண்டே ஒருவன் வந்தான்.

    இவன் நிச்சயம் ஒரு நோயாளியாகத்தான் இருப்பான். அதனால்தான், வயிற்று வலிக்குப்பிறகு இப்படி படுத்துத் தூங்குகிறான்என்று நினைத்து அந்த ஆலமரத்தை கடந்து, நகர்ந்தான்.

    பின்னர், ஒரு முனிவர் அந்த இடத்திற்கு வந்தார். “இவனும் நம்மைப்போல குறட்டைவிட்டு தூங்குகிறான். கவலையில்லாத முற்றும் துறந்த முனிவராக இருப்பாரோ?” என்று முணுமுணுத்துக்கொண்டு அந்த இடத்தைவிட்டு அகன்றான்.

    இப்போது, திடீரென மீண்டும் பக்தர்முன் தோன்றினார் கடவுள்.

    பக்தாநீ இங்குவந்து படுக்க ஆரம்பித்து அரைமணி நேரம்கூட முழுவதாய் முடியவில்லை. அதற்குள் உன்னைப்பற்றி ஒவ்வொருவரும் வெவ்வேறு பார்வையில் பலவாறு பேசிக்கொள்கிறார்கள். உன்னை சரியாகப் புரிந்துகொள்ளாமல், பல கோணங்களில் விமர்சனங்களை வைக்கிறார்கள். நீ அவர்களின் வீணான விமர்சனத்தைக்கண்டு பயப்படாதே! ஓவ்வொருவரின் புரிந்துகொள்ளும் திறனுக்கு ஏற்ப விமர்சனங்கள் மாறுதல் பெறும். எனவே, நீ மன தைரியத்தோடு செயலாற்ற வேண்டும். உன்னுடைய லட்சியப் பாதையில் நீ நடந்து செல்லும்போது ஏராளமான விமர்சனங்கள் உன்னை நோக்கி வீசப்படும். வீணான விமர்சனங்களைப்பற்றி கவலைப்படாமல் உன்னுடைய பயணத்தை தொடர்ந்து மேற்கொண்டால் உனக்கு வெற்றி கிடைக்கும்என கடவுள் விளக்கமாக அவனுக்குப் புரிய வைத்தார்.

    இதைக்கேட்ட பக்தன் அமைதியடைந்தான். தனக்கு கடவுள் தந்த வரத்தை கடவுளிடமே திரும்ப எடுத்துக்கொள்ள வேண்டினான்.

    நான் இனிமேல் மற்றவர்கள் என்னைப்பற்றி என்ன நினைப்பார்கள்? என்பதைப்பற்றி சிந்திக்க மாட்டேன்” – என உறுதியளித்து திரும்பினான்.

    பொதுவாக விமர்சனங்கள் நம்மை நோக்கி வருகின்றபொழுது, அந்த விமர்சனத்தின் தன்மையைப் புரிந்துகொள்ள வேண்டும். அந்த விமர்சனம்நம்மை நோக்கி வீசப்பட்ட அம்புஎன்று நினைக்காமல், “அது நம்மைப்பற்றி தெரிந்துகொள்ள உதவும் கருத்துஎன்று எண்ணிக்கொள்ள வேண்டும். விமர்சனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியமான தகவல்களை சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். தேவையற்ற விமர்சனம் என்றால், அந்த விமர்சனத்தைக் கண்டுகொள்ளாமல் தவிர்ப்பது நல்லது.

    கட் செல்லுகின்ற கப்பல், அலைகளுக்கு நடுவே பயணம் செய்துதான் ஆக வேண்டும். இதைப்போலவே, வெற்றி வாழ்க்கையை நோக்கி பயணம் செய்பவர்கள் விமர்சனங்களுக்கு நடுவே துணிவுடன் பயணத்தைத் தொடர வேண்டும். அலை அதிகமாக இருக்கிறது என்பதற்காக அந்த அலைகளின் நீரை எதிர் கொள்ளாமல் கடல்நீரை அந்தக் கப்பல் உள்வாங்கிக்கொண்டால், கப்பல் கட|ல் மூழ்கிவிடும்.

    இதைப்போலவே, விமர்சனங்கள் அதிகமாக இருக்கிறது என்பதற்காக அத்தனை விமர்சனங்களையும் உள்வாங்கி பதில் சொல்வதற்கு தயாராகிக் கொண்டிருந்தால், வாழ்க்கை மூழ்கிவிடும். வெற்றி காணாமல் போய்விடும்.

    எனவே, வெற்றிப் பயணத்தில் தேவையற்ற விமர்சனத்தை தவிர்க்கப் பழகிக்கொள்வது நல்லது.

    தொடரும்.

    இந்த இதழை மேலும்

    வாசியுங்கள்! வாகை சூடலாம்! – 4

    பணக்காரத் தந்தை, ஏழைத் தந்தை (Rich Dad & Poor Dad)

    இந்த நூலின் ஆசிரியருக்கு இரண்டுதந்தையர். இவர்கள் இருவரிடம் தான் வளர்ந்த விதத்தை இந்நூலின் முன்னுரையில் வருமாறு பதிவு செய்கிறார் ஆசிரியர். ஒருவர் பணக்காரர், மற்றொருவர் ஏழை. ஏழைத் தந்தை டாக்டர் பட்டம் பெற்ற பெரிய கல்வியாளர். பணக்காரத் தந்தை எட்டாம் வகுப்பைக் கூட தாண்டாதவர். இவர்கள் இருவருமே தங்கள் வாழ்நாள் முழுவதும் கடினமாக உழைத்தபோதிலும் அரசு பணியிலிருந்த ஏழைத் தந்தை எப்போதுமே பணத்திற்காகக் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார். பணக்காரத் தந்தை ஹவாய் மாநிலத்தின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவராக ஆனார். ஆனால் பணக்காரத் தந்தை நான் சிறுவனாக இருந்தபோது சாதாரண நிலையில் இருந்தவர்தான். ஆனால் அவரின் பணம் பற்றிய சிந்தனை அவரைப் பணக்காரராக ஆக்கியது. இந்த இரண்டு பேரிடமும் நான் வளரும் வாய்ப்புக் கிடைத்தது. இந்த இரண்டு பேருமே என்னை ஆளுமை செலுத்தினர். ஆனால் இருவரின் ஆலோசனைகளும் ஒன்றுபோல் இல்லை. இரண்டு பேரின் பணம் பற்றிய கண்ணோட்டம் வேறு வேறானது. தொடக்கக் காலத்தில் இருவருமே ஒரே மாதிரியாகத்தான் தம் தம் தொழில் வாழ்க்கையைத் தொடர்ந்தனர்.

    ஒரு தந்தைபணத்தின் மீதான காதல்தான் தீயவை அனைத்திற்கும் மூல காரணம்என்று கூறுவார். இன்னொருவர்பணமின்மைதான் தீயவை அனைத்திற்கும் மூல காரணம்என்று கூறுவார்.

    ஒரு நல்ல நிறுவனத்தில் ஒரு வேலையைத் தேடிக்கொள்ளும் விதத்தில் கடினமாகப் படிஎன்று ஒரு தந்தை பரிந்துரைத்தார். “ஒரு நல்ல நிறுவனத்தை விலைக்கு வாங்கும் விதத்தில் நன்றாகப் படிஎன்று இன்னொருவர் பரிந்துரைத்தார்.

    ஒருவர்பணம் என்று வரும்போது, பாதுகாப்பாக நடந்துகொள். தேவையின்றி சவாலான காரியங்களில் இறங்காதேஎன்று கூறினார். இன்னொருவர். “சவாலான முயற்சிகளை நிர்வகிக்கக் கற்றுக் கொள்என்று கூறினார்.

    ஒருவர்வீடுதான் நமது மிகப்பெரிய முதலீடு, நமது மிகப் பெரிய சொத்துஎன்று நம்பினார். இன்னொருவர்உன் வீடுதான் உனக்குச் சுமை. உன் வீடுதான் உனது மிகப்பெரிய முதலீடாக இருந்தால், நீ பிரச்சனையில் சிக்கியிருக்கிறாய் என்று அர்த்தம்என்று கூறினார்.

    ஒரு தந்தை ஒரு சில டாலர்களைச் சேமிப்பதற்குத் திணறினார். இன்னொருவர் முதலீடுகளை உருவாக்கினார்.

    ஒரு நல்லவேலை கிடைப்பதற்காக ஒரு சுயதகவல் தொகுப்பை எவ்வாறு எழுத வேண்டும் என்று ஒரு தந்தை எனக்குக் கற்றுக் கொடுத்தார். பல நிறுவனங்களை உருவாக்கும் திட்டங்களை எவ்வாறு எழுத வேண்டும் என்று இன்னொரு தந்தை கற்றுக் கொடுத்தார்.

    இரண்டு வித்தியாசமான தந்தையினரின் கீழ்வளர்ந்தது, வெவ்வேறு எண்ணங்கள் எனது வாழ்க்கையில் ஏற்படுத்தக்கூடிய விளைவுகளைக் கண்காணிப்பதற்கு எனக்கு வாய்ப்புக் கொடுத்தது. மக்கள் உண்மையிலேயே தங்கள் எண்ணங்கள் மூலமாகத் தங்கள் வாழ்க்கையை வடிவமைத்ததை நான் கவனித்தேன்.

    எடுத்துக்காட்டாக எனது ஏழைத் தந்தை எப்போதும்நான் ஒரு பணக்காரனாக ஆகப் போவதில்லைஎன்று கூறினார். எனது பணக்காரத் தந்தை எப்போதும் தன்னை பணக்காரனாகவே குறிப்பிட்டார். ஏழைத் தந்தை எனக்குப் பணத்தில் ஆர்வம் இல்லை என்று கூறுவார். என் பணக்காரத் தந்தைஎப்போதும் பணம்தான் சக்திஎன்று கூறுவார்.

    இப்படியாக வளர்ந்த நான் எனது ஒன்பதாவது வயதில் வாழ்வில் முன்னேற பணக்காரத் தந்தையின் கருத்தை ஏற்பதென்று தீர்மானித்தேன். ஏழைத் தந்தை பெரிய கல்வியாளர்தான். ஆனால் அவர் பணம் குறித்துக் கூறுவதைக் கேட்கக் கூடாது என்று முடிவு செய்தேன். என் பணக்காரத் தந்தை எனக்கு 39 வயதாகும் வரை அதாவது 9 வயதிலிருந்து 39 வயது 30 ஆண்டுகள் பணம் பற்றி கற்றுக் கொடுத்தார். நான் அவரிடம் கற்றதே இந்நூலில் இடம்பெறும் செய்திகள் என்று ராபர்ட் டி.கியோசகி குறிப்பிடுகின்றார். பணம் பற்றி அறிய படிக்க வேண்டிய முக்கியமான நூல்களில் ஒன்று இந்நூல். இந்நூலில் சொல்லப்பட்டுள்ள சில முக்கியச் செய்திகள்பணம் என்றால் என்ன? பணக்காரர்கள் ஏன் பணக்காரர்களாக இருக்கிறார்கள். ஏழைகள் ஏன் ஏழைகளாக இருக்கிறார்கள் என்பதை அறிய உதவியாக அமையும். அவை வருமாறு.

    • பணக்காரர்கள் பணத்திற்காக வேலை செய்வதில்லை. ஏழைகளும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மக்களும் பணத்திற்காக வேலை செய்கின்றனர். பணக்காரர்கள் பணத்தைத் தங்களுக்காக வேலை செய்ய வைக்கின்றனர்.
    • நீங்கள் எவ்வளவு பணம் சம்பாதிக்கிறீர்கள் என்பது ஒரு பொருட்டல்ல. எவ்வளவு பணத்தைத் தக்க வைத்துக் கொள்கிறீர்கள் என்பது முக்கியம்.
    • பணக்காரர்கள் தங்கள் சொத்துக்கள் மீது கவனம் செலுத்துகின்றனர். மற்றவர்கள் தங்களது வருமான அறிக்கைகளில் கவனம் செலுத்துகின்றனர்.
    • பணக்காரர்கள் சொத்துக்களை வாங்குகின்றனர். ஏழைகளுக்குச் செலவுகள் மட்டுமே இருக்கின்றன.
    • பணக்காரர்கள் பணத்தைக் கண்டுபிடிக்கின்றனர்.
    • நிஜ உலகில், சாமர்த்தியமானவர்கள் முன்னேறுவதில்லை, துணிச்சல்காரர்கள்தான் முன்னேறுகின்றனர்.
    • பணம் உண்மையானதல்ல.
    • நம்மிடம் இருக்கும் தனிப்பெரும் சக்திவாய்ந்த சொத்து நம் மனம்தான். அதைச் சிறப்பாகப் பயிற்றுவித்தால், ஏராளமான செல்வத்தை அதனால் உருவாக்க முடியும்.
    • பெரும்பாலான மக்கள் பொருளாதார ரீதியாக வெற்றி பெறாததற்குக் காரணம், பணத்தை இழப்பது குறித்து அவர்கள் கொண்டுள்ள பயமானது, பணக்காரராக இருப்பதில் உள்ள மகிழ்ச்சியை விட அதிகமாக இருப்பதுதான்.
    • பொருளாதாரக் கல்வியறிவைப் பெற்ற மக்கள் கூட அதிகப் பணத்தை உருவாக்கக்கூடிய சொத்துக்களைப் பெறாமல் போவதற்கு அவர்களிடமுள்ள பயம், சந்தேகம், சோம்பேறித்தனம், மோசமான பழக்கங்கள், ஆணவம் போன்றன காரணமாக அமைவதாக இந்நூல் சொல்லுகிறது.
    • தோற்பதற்கு பயப்படாமல் இருப்பதுதான் வெற்றி, வெற்றி பெறும்வரை ஒரு விஜயத்தைப் பின்தொடர்ந்து செல்லுங்கள்.
    • அவர்களால் முடியும் என்றால் என்னாலும் முடியும் என்று நம்புங்கள்.
    • பணத்தை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்றால், நீங்கள் பணத்தைவிட அதிக சாமர்த்தியமானவராக இருக்க வேண்டும். அப்போது அது உங்கள் கட்டளைக்கு அடிபணிந்து நடக்கும். நீங்கள் கூறுவதை அது செய்யும். பணத்திற்கு நீங்கள் அடிமையாக இருப்பதற்குப் பதிலாக அது உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும். அதுதான்  பொருளாதாரரீதியான அறிவு.

    பணம் ஒரு யோசனை

    பணம் ஒரு யோசனை மட்டுமே. பணம் என்பது உண்மையானதல்ல. இதனைப் புரிந்து கொண்டால் நீங்கள் வெகுசீக்கிரம் பணக்காரராக உருவாகிவிடுவீர்கள் என்ற சிந்தனையைச் சொல்வதுதான்  இந்த நூலின் முதன்மையான நோக்கம். உலகில் மிகப்பெரிய பணக்காரர்களாகத் திகழும் அனைவருமே பணத்திற்காக வேலை செய்யவில்லை. அவர்களின் யோசனைகள்தான் பணத்தைக் கொண்டுவந்து சேர்த்தது. பில்கேட்சின் கணினி பற்றிய யோசனை, ராக்பெல்லரின் பெட்ரோல், டீசல் பற்றிய யோசனை, ஜேப்பெல்ஸின் அமேசான் எனும் ஈ வர்த்தக யோசனை, எடிசனின் நவீன கண்டுபிடிப்புகள் பற்றிய யோசனை, ஹென்றி போர்டின் மோட்டார் பற்றிய யோசனை என்று எல்லாமே அவரவரின் எண்ணத்தில் உதித்த யோசனையை விடாமல் பின்தொடர்ந்ததே செல்வமாக மாறியது என்பதை இங்கே நாம் ஒரு புரிதலுக்காக நினைத்துக் கொள்ளலாம். எத்தகைய யோசனையும் அது சிறியதோ, பெரியதோ அது சரியாகச் செயல்படுகையில் பணமாக மாறியே தீரும்.

    பணம் வாழ்க்கையின் ஓர் இன்றியமையாத அம்சமே. உங்களுக்கு மேலும் பணம் வேண்டுமென்றால், உங்கள் எண்ணப்போக்கை மாற்றிக் கொள்ளுங்கள். தன்னைத்தானே உயர்த்திக் கொண்ட எந்த ஒரு மனிதனும் ஒரு சிறு யோசனையில் தான் ஆரம்பிக்கின்றான். அதையே பெரிய திட்டமாக மாற்றி உயர்கிறான். இதுவே பணம் முதலீடு செய்வதற்கும் பொருந்தும். ஒரு சில டாலர்களே தேவை ஆரம்பிப்பதற்கு. அதை பெரிதாக உயர்த்துவதற்கு அதுவே போதும்.

    சரித்திரம் சொல்வதைக் கேளுங்கள். பங்குச் சந்தையில் பட்டியிலிடப்பட்ட நிறுவனங்கள் யாவும் சிறு சிறு நிறுவனங்களாகத்தான் ஆரம்பத்தில் இருந்தன. செயல்படுபவர் செயல்படாமலிருப்பவரை முந்திக் கொள்கிறார்.

    நிறைவாக இந்நூல் முன் வைக்கும் கருத்து

    பணம் என்ற ஒன்று உண்மையில் இல்லை. அது வெறும் யோசனை என்பதுதான். பள்ளிப் படிப்புக்கும், பணத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஒருவன் வாழும் சூழலே அவனுக்கு பணம் என்றால் என்ன? என்று கற்றுத் தருகிறது. இந்த நூலின் ஆசிரியர் ராபர்ட் கியோசகி தனது பணக்காரத் தந்தை, ஏழைத் தந்தை ஆகிய இருவரிடம் பணம் பற்றிக் கற்ற விஜயங்களை இன்றைய பணமுதலீடு, தொழில் முதலீடு போன்றவற்றுடன் இணைத்து பணக்காரர்கள் பணத்தை உருவாக்குகிறார்கள். ஏழைகள் பணத்தைச் சம்பாதிக்கிறார்கள். எந்தப் பணக்காரனும் பணத்திற்காகக் கடுமையாக உழைப்பதில்லை. ஆனால் பணத்தை ஒன்றிலிருந்து ஒன்றாகப் பெருக்க அவர்கள் யோசனை செய்கிறார்கள். இவர்களின் யோசனையைப் பணமாக்கிட சிலர் கடுமையாக உழைக்கிறார்கள். எப்பொழுதும் பணத்திற்காகப் பணக்காரர்கள் உழைப்பதில்லை. பணம்தான் அவர்களுக்காக உழைக்கின்றது. இந்த நூலைப் படிக்கும்போதுதான் ஆமாம் எந்தப் பணக்காரன் கோடாரியை எடுத்துக்கொண்டு காட்டிற்குப் போய் விறகு வெட்டினான் என்ற சிந்தனை நமக்குள் ஒரு தீப்பொறியாய் கிழம்பத் தொடங்குகிறது.

    தொடர்ந்து வாசிப்போம்

    இந்த இதழை மேலும்

    நினைப்பதே நடக்கும் (பாகம் – 2)

    எங்கேனும் வெளியே மகிழுந்தில் பயணிக்கையில், “இப்போ பார்றேன், இங்க எனக்கு கண்டிப்பா பார்க்கிங் கிடைக்கும் பார்றேன்என்பேன் மகனிடம். சொன்னால் நம்பமாட்டீர்கள், உண்மையிலேயே எனது கார் சென்று எங்கே நிற்கிறதோ அங்கே ஒரு பார்க்கிங் எனக்காக காத்துகிடக்கும் அல்லது இருக்கும் கார் ஒன்றை எவரேனும் ஒருவர்  அந்நேரம் பார்த்து அங்கிருந்து எடுப்பர், பார்க்கிங் கிடைத்ததும் மகன் உடனே அதிர்ச்சியாவான், உற்சாகமாக கத்துவான், எப்படிப்பா இதெல்லாம் என்பான்.

    அதலாம் அப்டித்தான்டா, நீ கூட வேணும்னா எதையேனும் நினைத்துக்கொள், நினைத்தால் நடக்கும்என்பேன். ஆனால் நல்லதை நினை என்பேன். எது நல்லது என்பான், பிறருக்கும் உனக்கும் எது நன்மையை பயக்குமோ அது நல்லது தானே என்பேன். அப்போ எது நினைத்தாலும் நடக்குமா என்பான், எண்ணங்களே செயல் என்பேன். எதுவாக நினைக்கிறோமோ அதுவாகவே ஆகிறோம் என்பதை அடிக்கடி அவனிடம் சொல்வேன். உண்மையை சொன்னால் இப்போதெல்லாம் அவனுடைய அதிர்ச்சி எனக்கே வந்துவிடுகிறது, காரணம் எங்கு எப்போது நான் காரோட்டிச் சென்றாலும் அங்கு எனக்கான ஒரு பார்க்கிங் மிக இயல்பாகவே அமைந்துவிடுகிறது.

    என்றாலும், இதுபோன்ற பல ஆச்சர்யங்கள் நடக்காமலில்லை நமது வாழ்விலென பல நிகழ்கால ஆச்சர்யங்களைப் பற்றி நண்பர் ஒருவரிடம் பகிர்ந்துக் கொண்டிருந்தேன். அவர் மிக ஆர்வமாக எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு அவ்வளவு பெரிதாக நம்பிக்கொள்ளாமலே விடைபெற்றார். பிறகொரு மாதம் சென்றதும் திடீரென ஒரு கைப்பேசி அழைப்பு அவரிடமிருந்து வந்தது. உடனே என்னை சந்திக்கவேண்டுமென்றும், ஏதோ ஒரு பெரிய ஆச்சர்யமும் மகிழ்வான கதையும் உண்டு என்றார். உடனேயே திட்டமிட்டு, அன்று மாலையிலேயே சந்தித்தோம்.

    அவரிடம் அப்படி என்ன ஜிஎஸ்டி குறைந்துவிட்ட செய்தி இருந்துவிடப் போகிறதென  எனக்கும் மிக்க ஆவலிருந்தது அவரைக் காண,  மீண்டும் சந்திக்கையில் எப்படியேனும், இந்த மாதத்தில் நினைத்ததைப் பற்றியும் பல அவ்வாறே நடந்ததைப் பற்றியுமெல்லாம் கூறிவிடவேண்டும், மிகக் குறிப்பிட்டு; காரோட்டுகையில் யாரோ டம்மென்று பின்னே வந்து இடிப்பதாக அடிக்கடி நினைத்திருந்ததும், அவ்வாறே ஒருநாள் ஒரு ஆள் பெரிய கார் கொண்டு வந்து நேரே டம்மென சப்தத்தோடு எனது புதிதாக வாங்கிய கிய்யா ஆப்டிமா மீது இடித்ததும் வரை எல்லாவற்றையுமே அவரிடம் சொல்லிவிட மனதில் பல எண்ணங்கள் திரையோடிக் கொண்டிருந்தது.

    என்றாலும், அவரைக் கண்டதும், பேசுவதற்கு ஒன்றுமில்லாதவனைப் போல, என்ன என்ன மன்னரே ஏன் இத்தனைப் பரவசம் என்றேன், இல்லை நீங்கள் சொன்னது உண்மை, எனக்கொரு சம்பவம் நடந்தது என்றார். சம்பவமா? என்ன, யாரை? எப்போ? நான் தவிப்பதற்குள் அவரே சுதாரித்துக்கொண்டு, அப்படிப்பட்ட சம்பவமெல்லாமில்ல ஒரு நல்லது நடந்தது என்று சொல்லி சிரித்தார்.

    பொறுமை தாங்கமாட்டாமல் நான்என்ன நடந்தது ஒய் அதை முதலில் சொல்லும் என்றேன்.  அவருடைய நண்பர் அவரை அழைத்தாராம், வேலையே கிடைக்கவில்லை, ஊர் திரும்பி போகிறேன் என்றாராம், இரண்டு லட்சம் பணம் கட்டி வந்ததெல்லாம் வீணாகப் போனதென்று புலம்பினாராம். என்றாலும், இன்னும் ஒரு வாய்ப்பு உண்டு, நாளைக்கு கடைசி திகதி, அதுவும் போனால் இனி ஊர்போய் இட்டிலியோ தோசையோ சுடவேண்டியது தான், எனவே எப்படியேனும் நாளைக்கு எனக்கு வேலை கிடைத்தேயாக வேண்டும் என்று வேண்டிக்கொள்வாயா என்று புலம்பி தீர்த்தாராம்.

    அவரும் மனதிற்குள்கடவுளே எப்படியாயினும் மோசசுக்கு வேலை கிடைக்கவேண்டும் என்று ஆழ்மனதில் மிக அழுத்தமாக எண்ணிக்கொண்டு அப்படியே உறங்கியும்போனாராம். மறுநாள் அதுபற்றி அத்தனை நினைவின்றி அவரும் சகஜ வாழ்க்கைக்கு திரும்பி விட்டிருக்கிறார். திடீரென அந்த மோசசிடமிருந்து எனது நண்பருக்கு கைப்பேசியில் ஒரு அழைப்பு வந்திருக்கிறது. எடுத்துப் பேசினால், இத்தனை நாள் அழைக்காத நிறுவனம் இன்று என்னவோ அதிசயமாய் அவரையழைத்து, கிடைக்காது என்றிருந்த வேலையை உடனே கிடைத்துவிட்டதாக சொல்லி, உடனே வந்து சேர்ந்துக்கொள்ளச் சொல்லி ஆபர் லெட்டரும் அனுப்பிவிட்டதாய் சொன்னதாம். அது தவிர, அதிக சம்பளமும், நல்ல வேலையும் கூட என்பதால் மோசஸ் கட்டிப்பிடித்து எனது நண்பருக்கு முத்தமிட்டேமகிழ்ந்தாராம். நண்பருக்கு ஒரே கொண்டாட்டமும் சந்தோஷமும் தாளமுடியாமல் ஓடோடி நேரே என்னிடமே வந்து விட்டார்.

    எனக்கு மனசெல்லாம் சில்லென்று இனித்தது. இது ஒரு வித்தையைப் போலத்தான். இறை விளையாட்டு போல. எண்ணங்களால் உலகைக் கட்டிப்போடும் உயரிய பயிற்சி இது. நல்லது செய்து நல்லது செய்து தன்னோட உள்ளவங்க எல்லோருக்கும் நல்லது மட்டுமே நடக்கவேண்டும் இறைவான்னு எண்ணி எண்ணி இவ்வுலக உயிர்கள் அனைத்திற்கும் வேண்டுகையில் தனக்கும் தானே சேர்த்து வேண்டுதலை வைத்துவிடும் அழகிய பயிற்சி இது. ஆனால் அந்த நண்பருக்கு ஒரு கேள்வி வந்தது பாருங்க, அது தான் சிந்தனையின் உச்சம். அது ஏன், எனக்கு நடந்தது? அவருக்கு ஏன் நடக்கவில்லை? என்கிறார் குபுக்கென. ஏன் நான் நினைத்து அவருக்கு நடக்கவேண்டும்? அவரே நினைத்து அவருக்கே அது நடந்திருக்கக்கூடாதா? என்றார்.

    அங்கு தான் நம்மை நாம் சற்று ஆழமாக திரும்பிப் பார்க்கவேண்டியுள்ளது. ஒருவருக்கு ஒருவர் நம்மில் அறிவிலோ பலத்திலோ தக்க வேறுபாடு உண்டு இல்லையா? ஒரு பொருளை சுமப்பதில், தூங்குவதில் சாப்பிடுவதில் கூட நமக்குள் வேறுபாடு உண்டில்லையா? கத்துவதில், உரக்கப் பேசுவதில், அழகில், தோற்றத்திலென பல வேறுபாடுகள் நமக்குள் இருக்கத்தானே செய்கிறது? அப்படித்தான் இந்த எண்ணுவதிலும், நினைப்பதிலும், நம்புவதிலும், மிக உறுதியாக உண்மையை உண்மையாக உள்ளவாறு ஏற்பதிலும் ஆளுக்கு ஆள் வேற்றுமை உண்டு. பழுத்த பலாப்பழம் மணப்பதும், பழுக்காதது மணக்க இருப்பதுமாய் வெவ்வேறுபட்ட வேறுபாடுகள் நமக்குள் நம்முடைய வாழ்வுநிலை பொறுத்து இருக்கத்தான் செய்கிறது. சிந்தித்துப் பாருங்கள், எல்லோராலும், எல்லாமே நடந்துவிடுமாயின் யாருக்கும் எதன்பொருட்டும் எதன் மீதும் அக்கறையோ எதுகுறித்தும் அவசியமோ ஆசையோ எதுபற்றிய ஆழமான கேள்விகளோ இவரின் முக்கியத்துவமோ வாழ்வின் அதிசயதின் ஆர்பாட்டமோ இல்லாமலே போய்விடும் இல்லையா?

    காரணம், ஒரு பொருள் கிடைக்காத பட்சத்தில் தான் அதன் மீதான ஈர்ப்பும் காதலும் ஆசையும் எதிர்பார்ப்புகளும் இரட்டிப்பாகி விடுகிறது. அன்று எனக்கும் அப்படித்தான் ஆனது. ஒரு மருத்துவமனையைக் கங்கையில் அது எனக்கு வணங்கத்தக்கவொரு கோயிலுக்கு நிகராக கண்ணில் பட்டது. காரணம் இரண்டாம் மகள் சுகமின்றி மருத்துவமனையில் இருந்தாள். அலுவல் போய் சாய்விருக்கையில் அமர, இரண்டே வினாடிக்குள் வீட்டிலிருந்து ஒரு அழைப்பு வந்தது. எழிலி ஆபத்தில் இருக்கிறாள் உடனே புறப்பட்டு வாங்கயென்று.

    வேறென்ன செய்ய, உடனே வீட்டிற்கு ஓடி, அவளை தூக்கிக் கொண்டு ஒவ்வொரு மருத்துவமனையாக ஏறி ஏறி இறங்கினோம். கருணை கொண்ட யாருமே மகளைக் கண்டு அஞ்சினர். நட்பு கொண்ட நண்பர்கள் கூட கைகழுவிக்கொண்டு வேறு மருத்துவமனைக்கு கொண்டு போ என்றனர். எழிலி எப்படியோ உடைந்த ஒரு ஆப்பிள் துண்டை எடுத்து மூக்கிற்குள் நுழைத்துக்கொண்டாள். மனைவி பதறிப்போய் அழைக்க, மகள் என்றதும் நன்றாக சிரித்துக்கொண்டு இயங்கிய இதயம் ஒருநொடி எனக்கு அதிர்ச்சியில் நின்றேபோனது. அதிலும், விரைந்து சென்று உள்ளே புகும் ஒவ்வொரு மருத்துவமனையும் உடனே எங்களை வெளியில் அனுப்பி வேறு இடம் பாரென்று சொல்ல சொல்ல மகள் பற்றிய பயம் பலமடங்கு ஏறிக்கொண்டே போனது.

    இந்த இதழை மேலும்

    மந்திரப் புன்னகை!

    எலிப்பெட்டி ராணி பாத்துக்கிறியா நீ!  நான் பாத்திக்கீறேன்!  தெரிமா

    என்றார் முருகன்.

    வயது அறுபதுக்கும் எழுபதுக்கும் இடையில் இருக்கலாம்

    நீல நிற யூனிஃபார்மில்அதை தாங்கிப்பிடிக்க திராணி இருக்கிறதா? என்று சந்தேகப்படும் அளவிற்குஒடிசலாக கன்னங்கள் ஒட்டிப்போய் இருந்தார்

    உழைத்து சாப்பிடணும்என் பேர் பழனி!  அதான் அங்கேருக்கிற ஆள்முருகன்பழனி முருகன்!  என்று பாண்ட்

    ஜேம்ஸ் பாண்ட் என்று சொல்வது போல ஸ்டைலாக கூறினார்.

    வயதில் பெரியவர்கள் உடன் பேச்சுக்கொடுத்தால்உலகம் தெரிஞ்சுக்கிட்ட ஒரு ஃபீலிங்நம்மை மகிழ்ச்சியாகவும் நிறைவாகவும் வைத்துக்கொள்ள ஒரு மனப்பாங்கு தேவைப்படுகிறது.  கொடுத்தால் மட்டுமே அடையக்கூடிய விஷயம் மன அமைதி!  எனவே குழந்தைகளையும் முதியவர்களையும் பார்த்தால்ஒரு சம்பாஷணையை எந்த ஓரத்திலிருந்தாவது தொடங்கி விடுவது வழக்கம்.

    முருகனாகத்தான் தன்னிச்சையாக, எலிப்பொறி குறித்து என்னவே? சொல்கிறார்.  விநாயகருக்குத்தானே அது வாகனம்?

    இராணி என்பதால் மிக்கி மௌஸôக இருக்குமோ?  எலிப்பெட்டி இராணிக்கும் மந்திரப்புன்னகைக்கும்?  என்ன சம்பந்தம்?  ஒரு இடத்தில் பேசக்கூடிய சொல் இன்னும் பல இடங்களுக்கு செல்லுமா? யாவருக்கும் போகுமா?

    என்று ஒரு சந்தேகம் நமக்கு வரலாம்

    பதிலை கீழே உள்ள பாடல் தரலாம்  

    யாவருக்குமாம் இறைவர்க்கொரு பச்சிலை

    யாவருக்குமாம்உண்ணும்போதொருகைப்பிடி

    யாவருக்குமாம்பசுவிற்கொருவாயுறை

    யாவருக்குமாம்பிறர்க்குஇன்னுரைதானே!”

    என்று மந்திரம் போட்டிருக்கிறார் திருமூலர்.

    பரஸ்பரம் புன்னகைக்கவேண்டும் என்று நினைத்தால்தான், பரிட்சயம் இல்லாதவர்கள் முகத்தில் ஒரு சிறிய புன்னகை கீற்றையாவது, உருவாக்கி அதை பின்னர் விளக்குப் போல் சுடர்விட்டு பிரகாசிக்கச் செய்யலாம்

    சமீபத்தில்பென்ஷன்அலுவலகத்தில்மூன்றுவயதானபெரியவர்களைகந்தவேல்பார்த்தார்.  கந்தவேலுக்கு பெரியவங்களுடன் பேசுவது, பிடிக்கும்.  அவர்களோடு பேச்சுக்கொடுக்க இயல்பான வாய்ப்பு கிடைத்தால் நழுவ விட்டுவிடமாட்டாப்ல

    வி..பி. லிஃப்ட் அருகே மிக வயதான ஒரு பாட்டி இரண்டு நடுத்தர வயதை தாண்டிய உறவினர்களுடன் காத்து நின்றிருந்தார்.  வி..பி. லிஃப்ட் அந்த தளத்திற்கு வராது என்பது கந்தவேலுக்கு தெரியவந்தது.  இன்னொரு லிஃப்ட்டை பயன்படுத்த வேண்டும்.  இதை உள்ளே இருந்து (லாக் – Lock) பூட்டி வைத்து உள்ளனர்.  கந்தவேல் அங்கிருந்து நகரும்பொழுதுபாட்டி வாங்க நீங்களும் அடுத்த லிஃப்டில் போலாம் என்று அழைத்துச் செல்ல!  முற்பட்டார்.  வராத லிஃப்ட்டுக்காக அவர்கள் மூவரும் காத்திருந்து சற்று நேரம் கழித்து தெரிந்துகொள்ளப் போவதை, முன் கூட்டியே தெரிவித்தார்.

    இந்தக்குழுஇப்படியேநகர்ந்துபெரியலிஃப்டைபிடித்தது  பாட்டி வர நேரமானதால்லிஃப்டை கொஞ்சம் நிறுத்தி வைத்தனர் வேலுடன் இருந்தவர்கள்.  பொதுவாக இப்படி நிறுத்துவதில் கந்தனுக்கு உடன்பாடில்லை.  மற்ற தளங்களில் இருக்கும் நபர்களுக்கு காத்திருக்கும் நேரத்தை அதிகப்படுத்துமல்லவா?  பூமி ஆள்வதற்கான நேரம் இங்கேதான் கிடைக்கின்றது.

    எப்படிஎன்று கேட்கலாம் நீங்கள்.

    பொறுத்தார் பூமி ஆள்வார்என்று கேள்விப்பட்டதில்லையா? வாகனங்களில் பயணிக்கும் பொழுது நிதானமாக போகச் சொல்வார்.  முன்னே செல்லும் வாகனம் நின்று யாரேனும் இறங்கிக்கொண்டு இருந்தால்அந்த நேரத்தில்ஒலி எழுப்பி அவசரப்படுத்த வேண்டாம்!   என்பார்.

    சாலை என்ன வீடூகட்டி குடியிருக்கும் இடமா?

    எந்த வாகனங்காரரும் அதே இடத்தில் நிற்க வேண்டும் என்று ஆசைப்படப் போவதில்லை

    சற்றே சில கூடுதல் நிமிடங்களில்அனைவருமே!  கிளம்பி செல்லப் போகின்றோமே

    உலகம் இறைவனின் சந்தை மடம்

    அது வருவோரும் போவோரும் தங்குமிடம்

    என்ற மெல்லிசைப் பாடல்

    காதில் ஒலித்ததுஅந்த சமயங்களில்

    பலமாடி கட்டிடங்களில்லிஃப்ட்டுக்கு காத்திருப்பதுமிகவும் நேசிக்கத்தகுந்த தருணம்.  52 விநாடிகள்பயணிக்கிறது ஒரு லிஃப்ட் என்றால்அந்தக் கட்டிடத்தில் அமைக்கப்பட்டு, உள்ள மூன்று மின் தூக்கிகளையும் அமுக்கிஎது முதலில் வருகிறது என்று கண்களை அலைபாய விடுவது  மனதையும் அப்படித்தான் செய்கின்றது.  கந்தவேல் வசிக்கிற கட்டிடத்தில் கிட்டத்தட்ட இருபது மாடிகள் இருக்கிறது அதில் மூன்று லிப்ட்கள்.  லிஃப்டுக்கு காத்திருக்கும் நேரத்தில்ஒரு மூக்குத்துளையை மூடி இன்னொரு துளையில் ஆழமாக மூச்சை உள்ளே இழுத்துபிராணாயாமம் செய்வது உண்டு.  நல்ல ஆக்ஸிஜன் கிடைக்கட்டுமே!  நாகூர் ரூமி!  அவர்கள் சொல்லும் மூச்சுப் பயிற்சி அவ்வப்போது செய்ய மின்தூக்கிகள் உதவுகின்றன.  அடிக்கடி செய்ய அவர் புத்தகம் உதவுகிறது.

    லிஃப்டைபிடித்துநிறுத்தியவர்களைவிட்டுவிடுங்கள் என்று சொல்ல அவகாசம் இல்லைபாட்டி மெதுவாக நடந்து வந்து சேர்ந்தார்.  அவருக்கு அந்த இருபது அடி தூரநடையே இரண்டு மைல் போல.  ஆரோக்கியமான பாட்டிதான், ஆனாலும் தள்ளாத வயது.  லிஃப்டுக்குள் எதாவது பேச்சுக் வந்து சேர்ந்ததும்  பரஸ்பர புன்னகைஇயல்பாகஓரிரு சொற்கள் என முன்னேறியது

    பாட்டி வந்த காரியம் ஆச்சா?  பென்ஷன் கிடைச்சதா? என்றார் கந்தன்

    ம்ம்.ம்ம்ஆச்சுகிடைச்சுடும்லைஃப் சர்ட்டிஃபிக்கேட் கேட்டாங்ககொடுத்திருக்கோம்

    என்று, உடன் வந்திருந்த இன்னொரு அம்மாள் பேசினார்

    பழைய தமிழில்  முகமன்கூறுதல் என்று அழகாக சொல்வார்கள்

    முதலில் சந்திப்பவர்களுக்கு வந்தனம் சொல்வது அற்புதமான மனவாசல்களை திறக்கும்

    பிறவிப் பயனை கொடுக்கும்.

    பாட்டி புன்னகைத்துக் கொண்டார்.

    நாங்கஎழிலகம் போய்சுத்திண்டுவந்தோம்ஆஃபீஸ் அங்கேன்னாமுன்னாடி இருந்தது!  என்றார்  சிரமம்ஆனாலும் காரியம் ஜெயமானதில்அவர்களுக்கு நிறைவு

    வயசுஎன்ன பாட்டி உங்களுக்கு?  என்றார் கந்தன்அதற்கும் முன்புஅவர் என்ன வேலை செய்தார்?  எங்கிருந்து வருகிறார் என்ற கேள்விகளில்பெயர்பாலாமணிஊர்கல்லணைதிருச்சி என்று தெரிந்தது

    எல்லா பதிலும் பக்கத்திலிருந்த அம்மாள் சொல்ல  சுருக்கம் நிறைந்த பாட்டியின் முகத்தில் புன்னகை கீற்றுகள்அவரும் கவனிக்கிறார் மகிழ்கிறார் என புரிந்து கொள்ள செய்ததுகொஞ்சம் காது கேட்காது போல

    வயசு கேள்வியை பலமாகபாட்டியை நோக்கி

    சமர்ப்பித்தார், கந்தவேல்

    அப்பொழுதுதான் அந்த மந்திரம் நிகழ்ந்தது

    பாலாமணிக்கு வெட்கம் வந்துவிட்டது

    வயசெல்லாம் நான்சொல்ல மாட்டேனாக்கும்

    கேட்கப்படாது

    என்றார்நாணம் மேலிட புன்னகைத்தார்தலையை குனிந்துகொண்டு இடதுபுறமாக திரும்பிக்கொண்டார்  அந்த லிஃப்டில் இருந்த எல்லோருமே!   நகைத்துவிட்டனர்பொதுவாக லிஃப்டில் பயணிக்கும்அறிமுகமில்லாத மனிதர்கள்எதுவும் பேசிக்கொள்வதில்லை

    இந்த இதழை மேலும்

    தீர்மானித்தல் என்ற திறனின் மகிமை

    நோக்கம் என்பதை முதலில் தீர்மானி

    அதுவே இலக்கு என்பதை உறுதி செய்து கொள்

    கையில் பணமில்லையே, உடம்பில் வலுவில்லையே

    உதவி செய்ய நண்பர்கள் இல்லையே என்றெல்லாம்

    யோசித்து நேரத்தை வீணாக்காதே. எதற்கும்

    பயப்படாதேதயங்காதே. இலக்கை நோக்கி

    அடியெடுத்துவை. தொடர்ந்து முன்னேறு சோதனைகள்

    விலகும். பாதை தெளிவாகும் நோக்கத்தை அடைந்தே

    தீருவாய் அதை யாராலும் தடுக்க முடியாது

    என்ற வரிகள் சுவாமி விவேகானந்தரின் வார்த்தைகள் தீர்மானித்தல் என்ற திறன் பற்றி எடுத்துக் காட்டுகின்றது. இத்தகைய தீர்மானங்கள் எடுக்க மனோபலம் எவ்வளவு முக்கியமானது என்ற கருத்தை வெளிப்படுத்தும் வகையில் பல கருத்துக்களும் அதன் மகிமை பற்றி தெளிவு அடையும் வகையில் உண்மை நிகழ்வு பற்றியும் இக்கட்டுரை விவரிக்கின்றது.

    மனிதர்கள் என்ற கடவுளின் படைப்பில் ஆண், பெண் என்ற இரு பிரிவு உள்ளது. வாழ்க்கை  என்ற ஒன்றை ஏற்படுத்த இந்த இருபாலர்களே காரணம் ஒவ்வொருவருக்கும் தனி கடமை உள்ளது. ஒரு நாள் என்பது 24 மணிநேரம், இந்த நேரத்தை சரியாக தங்களுது கடின உழைப்பாலும், மனோ பலத்தாலும் பயன்படுத்தி வரும் ஒவ்வொருவரும் வாழ்க்கை என்ற விளையாட்டில் வெற்றி பெற்று சாதனையாயர்கள் பட்டியலில் இடம் பெறுகின்றனர். அரிய பெரிய காரியங்களைச் செய்ய அவர்கள் தங்கள் உடல்பலத்தையும், அறிவுத்திறனையும் பயன்படுத்தினாலும் அச்செயலைச் செய்ய ஒருவரை ஊக்கப்படுத்துவது, நம் கண்களுக்கு அகப்படாத மனோபலன்  தான் காரணம்.

    நீ எந்தப் பாதையில் சென்று கொண்டிருக்கிறாய் என்று தெரிந்து கொள்ளாவிட்டாலும் ஏதோ ஒரு பாதை உன்னை சரியான இடத்தை அடையச் செய்யும். இந்த அறிவுரைக்கு எடுத்துக்காட்டாக விளக்குவார்கள். மேலும் இவர்கள் பேர் அறிஞர் சாக்ரடீஸின் உன்னையே நீ அறிவாய் என்ற தாரக மந்திரம் அறிந்தவர்களாகவும் இருப்பர். யாருக்காகவும் உன்னை மாற்றிக் கொள்ளாதே என்ற கண்ணதாசனின் வரிகள் இந்த வெற்றியாளருக்கு பொருந்தும் இப்படிப்பட்டவர்கள், எந்த வேலைக் கொடுத்தாலும் மறுக்காமல் செயல்படுவார்கள். தீர்மானித்த செயலை முடிக்கும் வரை வேறு எதிலும் தங்களை ஈடுபடுத்தமாட்டார்கள். ஆராய்ச்சியாளர்கள், தங்களுடைய ஆராய்ச்சிக்காக முடிவுகள் தெரியும் வரை வேறு எதிலும் சிந்தனையைச் சிதற விடமாட்டார்கள் இத்தகையோரது போக்கைப் புரட்சி கவிஞர் பாரதியாரின்

    மனதில் உறுதி வேண்டும்

    வாக்கினிலே இனிமை வேண்டும்

    நினைவு நல்லது வேண்டும்

    நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்.. என்ற வழிகாட்டும் வரிகளில் உள்ளது போல் இருக்கும். இவர்களிடம் ஒரு தனித்திறமையும் இருக்கும். அதே சமயம் அவர்களிடம் ஒரு பலவீனமும் இருக்கும். ஆனால் இவர்கள் பலவீனமும் முறியடிக்கப்பட்டுவிடும் இவர்களது தீர்மானித்தல் என்ற திறனால் வாழ்க்கை என்பது ஒரு முறை வருவது. அதனை சரியாகப் பயன்படுத்துவார்கள் சாதனையாளர்கள் ஆவார்கள். இக்கருத்தை வலியுறுத்தும் வகையில் சில சம்பவங்கள் இங்கு விவரிக்கப்பட்டுள்ளது.

    ஜான் ரோபிலிங் என்பவர் நீயுயார்க்கிற்கும் லாங்தீவிற்கும் இடையே ஒரு பாலம் கட்ட வேண்டும் என்பது  அவரது கனவு. தன் மகன் வாஷிங்டனில் ஒரு பொறியாளர் என்பதால் தன் விருப்பத்தைக் கூறினார். மற்றவர்கள் இந்தச் செய்தியை கேலி செய்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் தங்களது விருப்பத்துடன் இவர்கள் உடன் சிலர் நேர்ந்து அப்பணியை செய்ய உதவியாக இருந்தனர். அது சமயம் ஒரு விபத்தில் ரோபிலிங் இறந்து விட்டார். வாஷிங்க்டன் உயிரோடு இருந்தார். ஆனால் அவரால் தன்னுடைய ஆட்காட்டி விரலைத்தவிர வேறு எந்த உடல்உறுப்பும் அசைவு இன்றி இருந்தது. ஆனால் தந்தை எடுத்த தீர்மானத்தை செயல்படுத்த விரும்பினார்.  அதன்படி தன் ஒருவிரல் அசைவால் தன்னுடைய மனைவியின் தோள்பட்டையில் ஒரு குறியீடு செய்து அந்தக் குறீயிட்டிற்கான விபரத்தை அவர்களுடன் பணியாற்றிய பொறியாளர்களிடம் கூறி வர 13 ஆண்டுகளில் இப்பொழுது பிரமாண்டமாகக் கட்சியளிக்கும் பூருக்ளின் பாலம் உருவானது.

    தன் குறிக்கோளில் மட்டும் அவர் மாறவில்லை. நாம் அறியாமல் நடக்கும் சில விரும்பத் தகாத சூழ்நிலைகள் பற்றி அவர் கவலைப்படவில்லை.

    அவரைப் போலவே கிளன் கன்னிங்காம் என்ற தடகள வீரர், தன்னுடைய 8 ம் வயதில் அவனது பள்ளியில் நடந்த விபத்தால் பாதிக்கப்பட்டான். அவன் உயிர் பிழைக்கமாட்டான் என்று மருத்துவர் கூறினாலும் அவர் தன்னுடைய மனோபலத்தால் சக்கர நாற்காலியில் இருந்து கொண்டு, தன் அசைவில்லாத கால்களை முதலில் நடக்கும் அளவிற்கு கொண்டு வந்து பின் ஓடும் நிலைக்குக் கொண்டு வந்து சிறந்த உலகப்புகழ் பெற்ற தடகள ஓட்டபந்தய வீரர் ஆக மாறினார். அதனோடு தன் இறுதி காலத்தில் தன்னுடைய பெயரில் குறைபாடுகள் உள்ள குழந்தைகளை ஆதரிக்கும் வகையில் ஒரு நிறுவனம் ஒன்றை ஏற்படுத்தி அதில் 9000 குழந்தைகள் தங்கி வளர பாடுபட்டு 1988 ல் இறந்தார்.

    இத்தகைய தீர்மானித்தல் என்ற சிறப்பு தன்மை எத்தகைய காரியங்களை செயல்படுத்த உதவுகின்றது என்பதை அறிந்து நாமும் செயல்பட, மற்றவர்களையும் ஊக்குவிக்க முன் வருவோமாக….

    இந்த இதழை மேலும்

    தன்னம்பிக்கை மேடை

    நேயர் கேள்வி…?

    ஒரு நல்லதலைவன் எப்படியிருக்கவேண்டும் என்றுசொல்லுங்கள்?

    அருள்மொழிநாச்சியார்,

    மதுரை.

    ஒருதலைவன் ஒரு நல்ல மனிதனாக இருக்கவேண்டும். ஒரு நல்லமனிதனால் மட்டுமே ஒரு நல்லதலைவராக இருக்கமுடியும். நல்ல மனிதனுக்குத் தலையானது கல்வியா? செல்வமா? வீரமா? என்பது மிகப்பழமையான ஒரு விவாதம். இது மூன்றையும் மிஞ்சியது குணம் தான் என்றுஅடித்துச் சொல்லிவிடலாம்.

    தலைமையின் நோக்கம் என்பது புகழ் அல்ல; அது நேர்மைத்திறன். அதிகாரம் அல்ல;நோக்கம். பதவி அல்ல, அது திறமை .வருமானம் அல்ல அது செல்வாக்கு.

    நல்ல குணத்தை மட்டுமே நமது முன்னோர்கள் வலியுறுத்துவதற்கு சிலகாரணங்கள் உண்டு. எல்லா செல்வங்களும் ஒருங்கே பெற்ற ஒருவர் நடத்தையில் சற்று சறுக்கிவிட்டால் சிறுக சிறுக சேர்த்து வைத்த மற்ற எல்லா தலைமைப் பண்புகளும் ஒரே நாளில் அழிந்துபோகும். செல்வந்தர் ஒருவர் சூதாட்டத்தில் ஈடுபட்டால், அவரது செல்வம் ஒரேநாளில் கைவிட்டுப்போகும். அதுபோல இளைஞர் புகைப்பிடிக்க பழகினால் அவருக்கு புற்றுநோய் வந்துவிடும். ஏமாற்றும் குணம் உடையவன் தலைவனாக இருந்தாலும் அவன் சிறையில் வாடுவதை யாராலும் தடுக்கமுடியாது.

    ஒருசெயலை மீண்டும் மீண்டும் செய்யும் போது அது பழக்கம் ஆகிவிடுகிறது. அந்தப் பழக்கம்  தான் காலப்போக்கில் உறுதியாகி நமது நடத்தை ஆகிவிடுகிறது. எனவே தலைவனாகத் துடிக்கும் நீங்கள் இந்தப் பழக்கங்களைஉடனே கைவிடவேண்டும்.

    1. வழக்கமாகப் பொய் பேசுவது.
    2. மற்றவர்கள் மீதுபழிபோடுவது.
    3. பிறரைக் குறை கூறுவது.
    4. முடியாததை வாக்குறுதி வழங்குவது.
    5. வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருப்பது
    6. மற்றவர்களின் உழைப்பில் வாழ்வது
    7. கெட்ட வார்த்தை உபயோகிப்பது
    8. சகமனிதர் மீது வெறுப்புணர்வுகொள்வது.
    9. எளியவர்களிடம் கடுமையாக நடந்துகொள்வது.
    10. பெண்களையும் குழந்தைகளையும் கொடுமைப்படுத்துவது.

    சில நல்ல பண்புகள் ஒரு மனிதனுக்கு தலைமை ஏற்கும் வாய்ப்பைபெற்றுத் தரும்.

    தைரியம்: தைரியமாக கடினமான போட்டித் தேர்வை எழுத துணிய வேண்டும். 10 கி.மீ தூரம் ஓடவும், கட்டுரைஎழுதவும்,மேடை ஏறிபேசவும் வேண்டும். மற்றவர்கள் குறை கூறுவார்களோ என்றுகூச்சப்படக்கூடாது.

    உண்மை: பேசுகின்ற பேச்சிலும்,செய்யும் செயலிலும்,உண்மை வெளிப்படையாகத் தெரியவேண்டும். நாம் செய்ததை செய்தோம் என்று ஒப்புக் கொள்வதும்,தெரியாததைத் தெரியாது என்று ஏற்றுக் கொள்வதும் உண்மையின் வெளிப்பாடு. எல்லாம் தெரியும் என்று நடிப்பது நேர்மையற்ற செயல், எல்லாம் தெரிந்தவர் இவ்வுலகில் யாருமில்லை.

    நேர்வழி: நேர்மையற்றவர்கள் சிலர் செல்வந்தர்களாகவும் அதிகாரத்தில் தலைமை பதவிகளில் உள்ளவர்களாகவும் இருப்பதால்  நேர்மைக்கு மதிப்பில்லை என்று பலரும் நினைக்கக்கூடும். ஆனால் நேர்மைக்கு மதிப்பும் மரியாதையும் எப்போதும் இருக்கும். காமராஜரைப் பற்றி மட்டும் ஏன் எல்லாமக்களும் இன்னும் உயர்வாகப் பேசுகிறார்கள்? நேர்மையால் தானே! நேர்வழியில் பயணிப்பது பெரிய தலைமைப்பண்பு.

    மதிப்பளிப்பது: நமக்கு மற்றவர் எவ்வளவு மதிப்பளிக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ அதே அளவு மதிப்பு நாம் மற்றவர்களுக்கு அளிக்க வேண்டும். எந்த உதவியும் திருப்பி செய்ய முடியாதவரிடம் ஒருவர் எப்படி நடந்து கொள்கிறார் என்பதை வைத்து அவரது தலைமையை அளவிடலாம்..

    அன்பு: நல்லமனிதர்கள் என்பது மதம், இனம்,சாதி,மொழி சார்ந்ததுஅல்ல. அது மற்றவர்களை எப்படி நடத்துகிறோம் என்பதில் இருக்கிறது. பிறமக்கள் இழிவானவர்கள் என்று தத்துவ ரீதியாக நம்பிவிட்டவனுக்கு பிறரிடத்தில் அன்பு காட்ட முடியாமல் போய்விடும், நானும் அன்பானவன் என்ற பொய்யை அவன்; மீண்டும் மீண்டும் சொல்லநேரிடும்.

    எளிமை: ஆடம்பரமில்லாமல் வாழ்வது நல்ல தலைமைக் குணம்.  சொகுசை விரும்புபவர்கள் எல்லா இடங்களுக்குப் போய் வரமுடியாது, அங்கு அவர்களுக்கு சொகுசு அறைகள் கிடைக்காது. ஆடம்பரம் விரும்பியின் வருமானமும் சூரியன் உதித்த பின் மாயும் பனியைப்போல் மறைந்துவிடும். வாரன் பஃபே போன்ற உலகின் மிகப்பெரியசெல்வந்தவர்கள் கூட எளிமையாகவாழ்கிறார்கள்.

    அக்கரை: காந்தி ஒருநாள் ரயிலில் பயணம் செய்தார். ரயில் நிலையத்தின் போது அவரது ஒருகாலணி கீழே தண்டவாளத்தில் விழுந்து விட்டது. அதை எடுக்க முயற்சி செய்தும் முடியவில்லை, ரயில் புறப்பட்டு விட்டது. உடனே அவர் செய்த காரியம் அனைவரையும் திடுக்கிட வைத்தது. அவரிடம் இருந்த மற்றொரு காலணியைக் கழட்டி கீழேபோட்டு விட்டார். ஏன் இதைசெய்தீர்கள் என்று கேட்ட போது, ஒரு காலணியை எடுக்கும் ஏழைக்கு ஒரு ஜோடியாக இருந்தால் பயன்படும் அல்லவா? என்றாராம்.

    கருணை: விலங்குகள் கூட பலவீனமான உயிரினங்கள் மீது கருணை காட்டுகின்றன. மனிதன் மட்டும், பலவீனமானவர்களைத் தண்டிக்க வேண்டும் என்று துடிக்கின்றனர். சிறு தவறுக்குக்கூட கடும் தண்டனை வழங்க வேண்டும் என்பதுஅதிகாரத்தில் இருக்கும் சிலரது கருத்து. மதவாதம் அரசாட்சி செய்யும் நாடுகளில் தலையை வெட்டுதல்,உடல் உறுப்புகளைத் துண்டித்தல் போன்ற காட்டு மிராண்டி தண்டனை முறை உள்ளது. இங்கு கருணைக்கு இடமில்லை. உண்மையில் அவன் தப்பு செய்தவனா? என்று கண்டுபிடிக்கவும் வழியும் இல்லை. ஆனால் அறிவியல் நம்பும் நாகரீக மக்கள் வாழும் நாடுகளில் சாட்டப்பட்ட குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்தால் மட்டுமே குற்றவாளிக்கு தண்டனை. குற்றவாளி திருந்த வழி வகுக்கும் வகையில் இங்கு தண்டனை வழங்கப்படுகிறது. அறிவியல் கற்ற இளைஞராகிய நீங்கள் மனிதர்கள் மீதும் ஜ÷விகள் மீதும் கருணை உள்ளவர்களாக இருத்தல் வேண்டும்.

    கல்வி: நற்குணங்களை ஏற்படுத்துவது கல்வி. ஆனால் கல்விகற்ற பின்னரும் நல்ல குணங்கள் சிலரிடம் ஏற்பட்டுவிடவில்லை. நல்ல குணங்களை உடையவன் எனகாட்டிக் கொள்பவர்ளே போலி மனிதர்களாக உள்ளார்கள். இளைஞர்களாகிய நீங்கள் தான் உலக சிந்தனையாளர்களின் நூல்களைக் கற்று நல்ல குணம் படைத்தவர்களாக ஒரு முன் மாதிரியாக விளங்க வேண்டும். மற்றவர்கள் கவனிக்காமல் இருக்கும் போது ஒருவர் என்ன செய்கிறார் என்பதை வைத்துத்தான் ஒருவரை நல்லமனிதன் என்று சொல்லமுடியும்.

    நன்றியுணர்வு: 

    சிலருக்கு அதிகாரம் கையில் வந்ததும், அதிகாரமமதை ஏற்பட்டு விடுகிறது. கர்வம் தலைக்கேறி துன்பப்படுகிறார்கள், மற்றவர்களையும் அவமதிக்கிறார்கள். ஒருவனுக்கு பணமோ அதிகார மோகையில் வந்தால் அவன் உண்மையான குணம் வெளிப்படும். ஆனால் நீங்கள் இறுதிவரை இயற்கையாக,நன்றியுள்ளவராக இருக்கவேண்டும்.

    சிந்தனையில் பிறப்பது நடத்தை, நடத்தையில் பிறப்பது ஒருவரின் குணம். பேசும் வார்த்தை, பேசும் விதம், முகபாவம், கண்களின் அசைவு ஆகியவற்றை வைத்து குணத்தை கணக்கிடலாம். வளரும் நீங்கள் இந்தக் கலையையும் கற்றுக் கொள்ளுதல் வேண்டும்.

    நமது நடத்தையைப் பற்றி கவலைப்பட வேண்டும்,நாம் யாரின் தலைமையை ஏற்கிறோமோஅவர்களின் பண்புகளை பற்றியும் கவலைப்பட வேண்டும். நடத்தை சரியில்லாதவரின் பின் அணிவகுத்தல் ஆகாது. அதுதேசவிரோதச் செயலன்றி வேறில்லை.

    முகத்திற்குப் பதிலாக உங்களது நடத்தையை கண்ணாடியில் பார்த்துப் பழகுங்கள். தவறுகளைத் திருத்திக் கொள்ளுங்கள். உங்களைப் பற்றி ஒருசில அவதுறு பேசினால் கூட அதை மற்றவர்கள் நம்பாத வகையில் உண்மையான அப்பழுக்கற்ற வாழ்க்கையை வாழ முயற்சி செய்யுங்கள்.

    உங்கள் வாழ்வில் என்னதான் நடந்திருந்தாலும்,மற்றவர்களுக்கு நல்லவர்களாகவே இருந்துவிடுங்கள். அப்படி ஒரு பாரம்பரியம் ஏற்படுத்தினால் தலைமை குணங்களும், தலைமைப்பதவியும் உங்களைத் தேடிவரும்.

    இந்த இதழை மேலும்