October, 2019 | தன்னம்பிக்கை

Home » 2019 » October

 
  • Categories


  • Archives


    Follow us on

    சமத்துவம் எனும் சாட்டை எடு…

    தமிழன்சபரி
      கோபிசெட்டிபாளைம்.

    பலநூற்றாண்டு பண்பாட்ட பண்பாடு எங்கே?

    பச்சிளம்பிள்ளைக்கும் பாலியல் தொந்தரவு இங்கே!

    உணவையே மருந்தாக்கிய உணவுமுறை எங்கே?

    உணவுக்கு முன்பின் மருந்துகள் உண்பது தான் இங்கே!

    சமத்துவம் மேலோங்கிய சமுதாயம் எங்கே?

    சாதிகளை காரணங்காட்டி சண்டைகள் தான் இங்கே!

    நெற்பயிர் முளைத்த விளைநிலங்கள் எங்கே?

    பல மாடிக்கட்டிடங்கள் மட்டும் தான் இங்கே!

    ஆறுகள் சங்கமிக்க கடலொன்று பிறக்கும்!

    இளைஞர்கள் ஒன்றிணைந்தால் நல்ல சமூகம் பிறக்கும்!

    கண்ணியத்தின் கட்டுப்பாட்டால் பெண்ணியத்தை வளர விடு!

    கனவுகளை நினைவாக்கக் குழந்தைத் தொழிலாளர்களுக்கு விடுதலை கொடு!

    கவனமில்லா பயணத்தைக் கனிவோடு நிறுத்திவிடு!

    கனத்த இதயத்தையும் கருணையால் மாற்றிவிடு!

    பட்டினியில்லா சமூகத்தைப் பக்குவமாய்ப் பரப்பிவிடு!

    பூவுலகின் நலன்காக்க புதுமை பல படைத்துவிடு!

    பெற்றவர்கள் நலன்காக்க முதியோரில்லத்தை மூடிவிடு!

    சாதி மத பேதமின்மையை சமூகத்தில் மூடிவிடு!

    செய்யும் தொழில் தெய்வமென்று சத்தமாக உரைத்துவிடு!

    நகோதரத்துவம் நாளும்வளர சமத்துவத்தைப் புகுத்திவிடு!

    விவசாயிகளின் வேதனையை விரல் கொண்டு துடைத்துவிடு!

    விண்ணுலகிலும் நம்கொடியை பட்டொளிவீசிப் பறக்கவிடு…!

    சொந்தங்களும் பந்தங்களும் மனித நேயத்தின் மலர்களே!

    ந. உமாதாணு

    கணித மேதை,

    பொது செயலாளர், மனித நேயப் பேரவையின் உலக சமாதான நட்புறவுப் பூங்கா,

    தலைவர், கணிதம் இனிக்கும் ஆய்வு மையம்,

    கோவை.

    நம் அனைவருக்கும் ஒரே மாதிரி

    திறமை இல்லாமல் இருக்கலாம், ஆனால்

    அனைவருக்கும் திறமையை வளர்க்க

    ஒரே மாதிரியான வாய்ப்புகள் உள்ளன.

    என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் ஐயா அவர்களின் கூற்று. இக்கூற்றை தனது வாழ்வில் பேணிக்காத்து வருபவர்.

    ஏழ்மைக் காற்றை எப்போதும் சுவாசிக்கும் குடும்பப் பின்னணியிலிருந்து பிறந்து தனது அசாத்திய கணித அறிவால் இன்று அகிலமெங்கும் அசத்தி வரும் கணித மேதை இவர்.

    ஐ.நா. பொது செயலாளர் பான்.கீ.மூன், இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர், நெல்சன் மண்டேலா, போப் ஜான் பால், ராஜிவ் காந்தி, சோனியாகாந்தி போன்ற உலகத் தலைவர்களின் பாராட்டுப் பெற்றவர்.

    தான், தனது குடும்பம், தனது பிள்ளைகள் என்று வாழ்வோர் மத்தியில் இந்த சமூகம் சுமூகமாக இருக்க வேண்டும் என்று மனித நேயப் பேரவை என்ற ஒரு அமைப்பைத் தொடங்கி அதன் மூலம் பல சேவைகள் செய்து வருகிறார்.

    ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பார் என்பதை நிதர்சனப்படுத்தும் விதமாக இவரின் வெற்றிக்குப் பின்னால் இவரின் மனைவி கனகம் அவர்கள் ஒரு உந்து சக்தியாக இருந்து வருகிறார்.

    கணித மேதை, சிறந்த ஆசிரியர், நல்ல மனிதர், சமூக சேவகர், இயற்கை ஆர்வலர் கணித ஆராய்ச்சியாளர், தலை சிறந்த நிர்வாகி என பன்முகத் திறமையுடைய ஐயா திரு. ந. உமாதாணு அவர்களின் நேர்முகம் இனி நம்மோடு.

    கே: நீங்கள் பிறந்தது வளர்ந்தது பற்றிச் சொல்லுங்கள்?

    சூரியனின் பிறப்பும் வள்ளுவரின் சிறப்பும் கொண்ட தலமான கன்னியாகுமரி மாவட்டத்தில் அஞ்சுகிராமம் என்றும் சிற்றூரிலுள்ள சிவராமபுரம் என்னும் குக்கிராமத்தில் பிறந்தேன். பெற்றோர் திரு. நல்லசிவம் செட்டியார்-சரஸ்வதி அம்மமாள் அவர்களின் மூத்த மகனாகப் பிறந்தேன். விவசாயப் பின்னணியுடைய குடும்பம் என்பதால் மிகவும் வறுமையான குடும்பம் தான். அந்த வறுமையிலும் என் பெற்றோர்கள் எங்களை நன்றாகப் படிக்க வைத்தார்கள். இதனால் அருகிலுள்ள அரசுப் பள்ளியில் தமிழ்வழிக் கல்வியில் நான் படித்தேன். குடும்ப சூழலின் காரணமாக என்னுடைய சிந்தனைகள், செயல்பாடுகள் அனைத்தும் படிப்பு சார்ந்ததாகவே இருந்தது. இதனால் பள்ளியில் நன்றாகப் படிக்கும் மாணவன் என்ற பெயரை எடுத்தேன்.

    கே: நீங்கள் கணிதத் துறையைத் தேர்ந்தெடுத்தது பற்றி?

    என்னுடன் பிறந்தவர்கள் நான்கு பேர், நான் தான் மூத்த மகன் எங்கள் குடும்பத்தின் முதல் நிலைப்பட்டதாரி. நான் பட்டப்படிப்பு படிக்கப் போகிறேன் என்று சொன்னவுடன் என் பெற்றோர்கள் யோசித்தார்கள். நமது குடும்பம் ஏற்கனவே வறுமையில் இருக்கிறது, அப்படியிருக்கும் போது அதிக பணம் கொடுத்து படிக்க வைக்க முடியாது என்று சொன்னார்கள். ஆனாலும் என்னுடைய ஆசையை அவர்களால் நிராகரிக்க முடியவில்லை. உடனே, சரி என்று சொல்லியதுடன் ஒரு கட்டளையும் இட்டார்கள். அது என்ன வென்றால் எந்தப் பிரிவில் கட்டணம் குறைவாக இருக்கிறதோ அதைத் தேர்ந்தெடுத்து படி என்று சொன்னார்கள். நானும் அவர்களின் வாக்கை ஏற்றுக்கொண்டு கட்டணத்தைப் பார்க்கும் பொழுது கணிதத் துறையில் குறைவாக இருந்ததால் அதைத் தேர்ந்தெடுத்தேன். ஸ்காட் கிருத்துவக் கல்லூயில் பயின்றேன். என் தாய்வழித் தாத்தா திரு. முத்தசாமி செட்டியார் உதவியால் தான் என்னால் படிக்க முடிந்தது.

    இப்படி சேர்ந்தது பிற்காலத்தில் அதுவே என்னுடைய வாழ்க்கையாக வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இப்படித்தான் கணிதத் துறையைத் தேர்ந்தெடுத்துப் படித்தேன்.

    கே: உங்களின் முதல் ஆசிரியர் பணி குறித்துச் சொல்லுங்கள்?

    என்னுடய 21 வயதில் கல்லூரிப் படிப்பை முடித்தேன். 1962 ஆம் ஆண்டு கோவையில் ராஜலட்சுமி மில்ஸ் உயர்நிலைப் பள்ளியில் நேர்காணல் ஒன்று நடந்தது. நானும் அதில் கலந்து கொண்டேன். என்னை பள்ளி தலைமையாசிரியர் கணிதம் குறித்து ஒரு பாடத்தை எடுக்கச் சொன்னார். நான் கற்ற அனுபவத்தின் மூலம் ஒரு பாடத்தை நடத்தி காட்டினேன். இதைப் பார்த்த அடுத்த கணமே பதவி ஆணையைக் கொடுத்துவிட்டார்கள்.  ஐந்து ஆண்டுகள் இந்தப் பள்ளியில் பணியாற்றினேன்.

    அதன் பிறகு தேவாங்கா மேல்நிலைப்பள்ளியில் 30 ஆண்டு காலம் பணியாற்றினேன். மொத்தம் என்னுடைய ஆசிரியர் பயணம் 35 ஆண்டு காலம் தொடர்ந்தது.  இந்த 35 ஆண்டு காலத்தில் பணியாற்றிக் கொண்டே எம். ஏ. ஆங்கிலம், எம். ஏ. அரசியல் அறிவியல், எம்.எட் போன்ற பட்டப்படிப்பை முடித்தேன். 1997 ஆம் ஆண்டு பணியிலிருந்து ஓய்வு பெற்றேன்.  ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் நிறைய மாணவர்களை உருவாக்கிய பெருமை எப்போதும் என்னை மகிழ்ச்சிப்படுத்தும்.

    கே: ஐ.நா வுடன் பணியாற்றிய அனுபவம் பற்றிச் சொல்லுங்கள்?

    அப்போது இந்தியா சோவித் யூனியன் கலாச்சார கழகம் என்ற ஒரு அமைப்பு இருந்தது. அதில் நான் பொதுச் செயலாளராகப் பணியாற்றினேன். அப்போது உலக சமாதானம் என்ற பெயரில் கோவை மாவட்டத்திலுள்ள எல்லா பள்ளிகளையும் ஒருங்கிணைத்து சமாதான ஓட்டம் ஒன்றை ஏற்படுத்தினோம். அக்காலக்கட்டத்தில் மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது.

    அப்போது ஐ.நா சபையின் பொன் விழா ஆண்டு கொண்டாடப்பட்டது. அதில் கோவை அவிநாசிலிங்கம் மற்றும் லைன்ஸ் கிளப் போன்ற அமைப்புகளுடன் இணைந்து பெரிய அளவில் விழா ஏற்பாடு செய்தோம். அதே போல் ஐ.நாவின் வைர விழாவையும் மருத மலை தேவஸ்தானப்பள்ளியில் நடத்தினோம். இதில் பல்வேறு நாட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், போட்டிகள் நடத்தப்பட்டது.  இதையெல்லாம் பாராட்டி சோவியத் நாட்டிற்கு என்னை அழைத்து ஒரு 15 நாட்கள் கௌரவித்தார்கள்.

    மேலும் புரட்சியாளர் லெனின் அவர்கள் எழுதிய தேசிய இனப்பிரச்சனைகளும் தீர்வுகளும் என்ற தலைப்பில் 1000 பக்கம் அளவில் புத்தகம் ஒன்றை எழுதியிருந்தார். இந்தப் புத்தகத்தை நான் தமிழில் மொழிபெயர்த்தேன். சோவித் நாட்டிற்கு தமிழ்நாட்டிலிருந்து நான் போகும் பொழுது அங்குள்ள ஒரு நூலகத்திற்கு  என்னை அழைத்துச் சென்று தமிழ்ப்புத்தகங்ளை எல்லாம் காட்டினார்கள். நான் தான் அந்தப் புத்தகத்தை எழுதினேன் என்று தெரியாமல் அந்தப்புத்தகத்தை காட்டி, தமிழர்கள் இங்கு வரும் போதெல்லாம் இந்தப்புத்தகத்தை காட்டுவார்கள் என்று சொன்னார். இந்தப் புத்தகத்தை எழுதியது நான் தான் என்று சொன்னவுடன் அவர்கள் நெகிழ்ந்து போனார்கள்.

    கே: உலகத் தலைவர்கள் முதல் உள்ளூர் தலைவர்கள் வரை நட்புறவு எப்படி ஏற்பட்டது?

    உலக சமாதானம் என்ற பெருண்மையில் நான் பல நாட்டுத் தலைவர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பினேன். அக்கடித்த்தில் போரில்லா நாடு, எங்கும் ஒற்றுமையுணர்வு, வேலைவாய்ப்பின்மை போன்றவை அடியொடு ஒழிய வேண்டும் என்பது தான் என்று எழுதினேன். அப்போது தான் நெல்சன் மண்டேலா அவர்களுக்கு Hero of humanism என்ற பட்டத்தை நீங்கள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கடிதம் எழுதினேன். அவர் எனக்கு உடனே பதில் கடிதம் எழுதினார். உங்களின் பட்டத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று எழுதினார். கிருத்தவர்களின் கடவுள் போப் ஜான் பால் அவர்கள் என்னை பாராட்டி கடிதம் எழுதினார். அவர்களைப் போல  ஐ.நாவின் பொது செயலாளர் பால்கீன் மூன் எனக்கு கடிதம் எழுதியதில் Dr. Umadhanu என்று எழுதி என்னை நெகிழ்வடைய செய்தார். இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேயர், இந்தியாவின் அப்போதைய பிரதமர் ராஜிவ் காந்தி, அவரின் மனைவி சோனியா காந்தி போன்றோர்களின் பாராட்டும் கிடைத்தது.

    அதே போல் இங்குள்ள பல்கலைக்கழக துணைவேந்தர்கள், கல்லூரி தாளாளர்கள் என பலரின் பாராட்டும் கிடைத்தது.

    இந்த இதழை மேலும்

    தன்னம்பிக்கை மேடை

     நேயர் கேள்வி…?

    விபத்தில்லா சாலை எப்படியானதாக இருக்க வேண்டும். இந்த சமுதாயத்திற்கு நீங்கள் தரும் விழிப்புணர்வு பற்றி?

    அருணா தேவி, பொள்ளாச்சி.

    சாலை விபத்துகள் இன்று பெரும் பிரச்சனையாகிவிட்டது. ஏழையும், பணக்காரனும், படித்தவரும், படிக்காதவரும், ஆணும், பெண்ணும், பெரியவர்களும், சிறியவர்களும் பரிதாபமாக சாலையில் இறந்து போகிறார்கள் அல்லது பெரும் காயங்களுக்கு ஆளாகிறார்கள். இறந்தவரோ அல்லது படுகாயமடைந்து உயிருக்குப் போராடுபவரோ எந்த தவறும் செய்யாதவர்களாகக் கூட இருப்பார். விபத்திற்குள்ளானவர்களுக்கு ஏற்படும் பல்வேறு இழப்புகள் கணக்கிடலாகாதது; ஈடு செய்ய முடியாதது.

    சென்ற ஆண்டு மட்டும் இந்தியாவில் 4,64,910 விபத்துக்கள் நடந்துள்ளன, இதில் 1,47,913 பேர் உயிரிழந்துள்ளார்கள், 4,70,975 பேர் படுகாயமடைந்துள்ளார்கள். தமிழ்நாட்டில் சென்ற ஆண்டு நடந்த விபத்துகளில் 16,157 பேர் மாண்டனர் 77,572 பேர் படுகாயமுற்றார்கள். இது தவிர இரயிலில் அடிபட்டு இறந்தவர்கள் 2600 பேர்.

    இன்று உயிர்க்கொல்லி நோயான புற்றுநோயை விட கொடியதாக இருக்கிறது சாலை விபத்துக்கள். அதிலும் பள்ளிக்கு செல்லும் பிள்ளைகள் வாகன விபத்தில் சிக்கும் செய்திகள் கேட்டால் இதயமே வெடிக்கிறது. புத்திர சோகம், பெரிய சோகம் என்பார்கள். குடும்பத்தலைவன் விபத்தில் இறந்து வருமானமிழந்த குடும்பம் நடுத்தெருவுக்கு வருவதையும் பார்க்கிறோம். இன்று பெரும்பாலும் காவல் நிலையத்தில் கூட வாகன விபத்துக்குள்ளாகி உடல் உருக்குலைந்து போன காவலர்களையும் அதிகாரிகளையும் பார்க்க முடியும். விபத்துக்கும் அதன் பாதிப்பிற்கும் உள்ளாகாத மனிதர்களே இல்லை என்று கூறும் அளவிற்கு சாலை விபத்துக்கள் சாதாரணமாகிவிட்டன எனலாம்.

    சாலை விபத்துக்கள் சமீபகால உயிர் பாதுகாப்பு பிரச்சனையே அன்று வேறில்லை. சென்னைக்கு முதல் மோட்டார் வாகனம் 1897 ஆம் ஆண்டு வந்திருக்கிறது, அதை எவரும் ஓட்ட தெரியாததால் ஸ்பென்ஸர் கட்டிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பின்னர் EID Parry நிறுவனத்தின் மேலாளர், இங்கிலாந்து சென்று வாகனம் ஓட்ட கற்றுத்தேர்ந்து 1900 ஆம் ஆண்டு அதை மவுண்ட் ரோட்டில் ஓட்டியிருக்கிறார். அந்த ஒரு கார் ஓடும்போது வாகன விபத்திற்கு வாய்ப்பில்லை, ஆனால் வாகனங்கள் பெருகிவிட்ட நிலையில் விபத்துக்களும் பெருகிவிட்டன.

    இன்று சென்னையில் மட்டும் 53,94,413 மோட்டார் வாகனங்கள், அதில் இருசக்கர வாகனங்கள் 42,54,811. தமிழகத்தில் 2,56,61,847 மோட்டார் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வாகனங்கள் பெருகியதால் விபத்துக்களும் அதிகரித்து விட்டன. விபத்துக்களுக்கு அந்த வாகனங்கள் கூட காரணமாக இருக்கின்றன. பழைய சீரற்ற வாகனங்களும் பயன்பாட்டில் இருக்கின்றன. இவற்றில்  சரியாக பிரேக் இல்லை என்றால் ரோட்டில் நடப்பவர் கதி என்ன என்று சிந்தித்துப் பாருங்கள். டயர், உதிரிபாகங்கள் கழன்று போய் விபத்துகள் நடந்துள்ளன. வாகனங்கள் பழது பாக்காமல் ஓட்டுவதாலும் விபத்துக்கள் நடக்கிறது. பேருந்துகளில் தரை தளத்திலிருந்த ஓட்டையில் விழுந்து மாணவர்கள் இறந்த நிகழ்ச்சிகளையும் செய்தித்தாள்களில் படித்தோம். பழுதடைந்த வாகனங்களை சரி செய்ய தொழில்நுட்பம் தெரிந்த தரமான பொறிமுறையாளர்கள் இன்னும் அதிகம் தேவைப்படுகிறார்கள்.

    இந்த இதழை மேலும்

    வைர வரிகள்…

    நேரம் தான் நமக்கு மிக அவசியமான தேவை. ஆனால் அதைத்தான் மிகவும் அதிகமாக வீணாக்குகிறோம் விட்மன்.

    ஒவ்வொரு தங்கச் சரிகையின் இழையில் எவ்வளவு மதிப்பு உள்ளதோ, அவ்வளவு மதிப்புள்ளது ஒவ்வொரு நிமிடமும் ஜே. மேஜன்.

    கடவுளுக்கு அடுத்தபடியாக நேரத்தை மதித்தல் ஒழுக்க முறையில் உயர்ந்த விதியாகும்.  நேரத்தைச் சரியாகப் பயன்படுத்தினால் போதிய நேரம் இருக்கத் தான் செய்யும் கதே

    கண்ணியமான புகழுக்கு எதுவழி என்றால் நீ வெளியே எப்படித் தோன்ற விரும்புகிறாயோ அப்படியே ஆகி விடப் பயிற்சி செய் சாக்ரடீஸ்.

    உடலுக்கு உயிர் எப்படியோ, மரத்திற்கு வேர் எப்படியோ, அப்படி செயல்களுக்கு சரியான நோக்கம் இன்றியமையாதவையாகும்-ஸிம்மன்ஸ்.

    கடவுள் தூபத்தையும் காணிக்கையையும் ஏற்றுக் கொள்வதில்லை. ஆனால் வணங்குபவரின் மனத்தையும் பக்தியையும் மட்டுமே ஏற்றுக் கொள்கிறார் செனிகா.

    படிப்பதைப் போல் செலவு குறைந்த பொழுது போக்கு வேறில்லை. அதைப் போல் இன்பம் அளிப்பதும் வேறு ஒன்றும் இல்லை- மாண்டெயின்.

    சிறந்தவர்களேடு மட்டும் நம்மனம் உறவாடுவதற்குச் சிறந்த புத்தகங்களையே தேர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும். பிளினி.

    பணம் அடித்தளம் காண முடியாத கடல் அதில் கௌரவம் மனசாட்சி உண்மை ஆகியவை எல்லாம் முழ்கிவிடும் கோல்லே.

    நீண்ட அனுபவங்களிலிருந்து பெறப்பட்ட சிறு வாக்கியங்களே பழமொழிகள்.பழமொழி பலருடைய ஞானத்தைப் பெற்று ஒருவருடைய புத்திநுட்பத்தால் அமைந்தது ரஸ்ஸல்.

    வியாபார உலகில் தங்க நாணயங்கள் எப்படியோ, அப்படி சிந்தனை உலகில் பழமொழிகள் இரண்டும் அளவில் சிறியவை. மக்களிடத்தில் பழக்கத்தில் உள்ளவை மாத்யூஸ்.

    மற்றவர்களுடைய நற்செயல்களைப் பற்றிச் சிந்திப்பதில் மகிழ்ச்சி அடையாதவன் எந்த வித நற்செயலையும் செய்ய முடியாது லவேட்டர்.

    பாராட்டு உன்னதமான உள்ளங்களை மேலும் ஊக்குவிக்கும். பல விதமானவர்கள் பாராட்ரோடு திருப்தி அடைந்து விடுவார்கள். பாராட்டுவது தாமதம் செய்தால் அன்பு குறையும். பொறாமை மிகும் கோல்டன்.

    பிடிவாதமும் முரண்பாடும் காகிதக் காற்றாடிகளைப் போன்றவை. அவைகளை இழுத்துக் கொண்டிருக்கும் வரை தான் அவை உயரே பறக்கும் பிராங்கலின்.

    பிரார்த்தனை என்பது சொற்களை அடுக்குவது அல்ல, மனப்பூர்வமானது. ஆதரவற்ற நிலையை விளக்குவது அன்று. உள்ளத்தின் அந்தரங்க உண்மையாகும் விக்டர் ஹியுகோ.

    கடவுளிடமத் எதை வேண்டிக் கொண்டாலும் அதற்காக உழைக்க வேண்டும். பிரார்த்தனையைச் சுருக்கமாக விளக்கினால் அது நமது விருப்பத்தைக் கடவுள் பக்கமாகத் திருப்புவதாகும்.

    கடவுள் நம்மிடமிருந்து தொலைவில் இருக்கிறார். ஆனால் பிரார்த்தனை அவரை நம்மிடம் கொண்டு வந்து நம் முயற்சிகளுடன் இணைந்து விடுகிறார் லூதர்.

    வாழ்க்கையில் அடையும் பேறுகளுள் புகழே முதன்மையானது. உடல் மண்ணுக்குள் போன பின்பு பெருமையுள்ள புகழ் மட்டும் உயிருடன் வாழ்ந்து வருகிறது ஷில்லர்.

    நல்ல எண்ணமும் பெயரும் பற்பல செயல்களை வைத்து உண்டாவது. ஆனால் இரண்டுமே ஒரே செயலில் போய்விடவும் கூடும் ஜெய்பரே.

    புத்தகங்கள் காலம் என்ற கடலின் கரையில் நிறுத்தப்பட்டுள்ள கலங்கரை விளக்குகள். நாம் பெறும் கருத்துகளின் அறிவைச் செயலில் பயன்படுத்தாவிட்டால் நூல்கள் வெறும் பழைதாள்களே விப்பின்.

    இந்த இதழை மேலும்

    தடம் பதித்த மாமனிதர்கள்..

    நம் பாரத நாடு சுதந்திரம் அடைய பாடுபட்ட மாமனிதர்களை நாம் விரல்விட்டு எண்ண முடியாது. ஆனாலும் இந்திய வரலாற்றில் இடம் பெற்றவர்களைப் பற்றி அறிய இயலும். அந்த வகையில் சிவகங்கைச் சீனம் என்ற சொல்லை நாம் உச்சரிக்கும் போதே நம் மனக்கண்முன் தோன்றுபவர்கள் மருது சகோதரர்கள் ஆவார்கள் சின்ன மருது, பெரிய மருது என்ற அழைக்கப்படும் சகோதரர்களைப் பற்றி இக்கட்டுரை விவரிக்கிறது.

    மருது பாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் தமிழ்நாட்டில் ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்ட முன்னோடிகளில் குறிப்பிடப்பட்டவர்கள் ஆவார்கள். 1857 ல் தோன்றிய சிப்பாய் கலகத்திற்கு முன்பே கி.பி.1785 ம் வருடம் முதல் கி.பி.1801 வரை ஆங்கிலேயரை எதிர்த்தும் இறுதிவரை ஆயுதம் ஏந்தி போராடியவர்கள் இவர்கள். சின்ன மருது, பெரிய மருது எனப்படும் இந்த சகோதரர்கள் ஆங்கிலேயருக்கு எதிராகப் பேராடிய அனைத்திந்திய குழுக்களையும் ஒன்றிணைந்து ஆங்கிலேயரின் அதிருப்த்திக்கும் கோபத்திற்கும் ஆளானார்கள்.

    இச்சகோதரர்களின் களம் சிவகங்கைச் சீமையைச் சேர்ந்த காளையார் கோவில் ஆகும். இன்றைய விருதுநகர் மாவட்டம் நரிக்குடிக்கு அருகில் உள்ள முக்குளம் என்ற கிராமத்தில் உடையார் சேர்வை என்ற மொக்க பழனியப்பன் என்பவருக்கும் ஆனந்தாயி என்ற பொன்னாத்தாள் என்பவருக்கும் 1748 ம் வருடம் டிசம்பர் 15 ம் நாள் பெரிய மருதுவும் 1753 ம் வருடம் சின்ன மருதுவும் இவர்கள் மகன்களாகப் பிறந்தனர். பெரிய மருது பாண்டியர் வெள்ளை நிறத்தில் இருந்ததால் சின்ன மருது பாண்டியர் என்று அழைக்கப்பட்டனர் இவ்விருவரும் சிவகங்கைச் சீமையின் மன்னன் முத்து வடுகநாதரின் போர்ப்படையில் சேர்ந்து, பல்வேறு போர்க்கலைகளைக் கற்று தங்கள் திறமையை பல்வேறு போர்களில் வெளிப்படுத்தினர். இதனை அறிந்து முத்துவடுகநாதர் இச்சகோதரர்கள் இருவரையும் தன் படையின் முக்கிய பொறுப்புகளில் நியமித்தனர்.

    கி.பி. 1772 ல் ஜோசப் ஸ்மித் தலைமியிலான கிழக்கிந்திய கம்பெனியின் படை, ஆற்காடு நவாப் வரிவசூலை ஆங்கிலேயரோடு பங்கிட்டு கொள்வதாக ஒப்புதல் செய்து கொண்டு இராமநாதபுரத்தைக் கைப்பற்ற சிவகங்கை மீது படையெடுத்தது. இந்த திடீர் தாக்குதலை எதிர்பாராத அரசர் முத்து வடுக நாதர் காளையார் கோவில் போரில் பலியானதால், அவரது பட்டத்தரசி வேலுநாச்சியார், மகள் வெள்ளச்சி, அமைச்சர் தாண்டவராயன் பிள்ளை, மருது பாண்டியர் இருவர் ஆகியோர் திண்டுக்கல் அருகில் உள்ள விருப்பாச்சிக் காட்டுக்குத் தப்பிச் சென்றனர். மருது சகோதரர்கள், காட்டில் இருந்து கொண்டே, தங்கள் படைபலத்தை அதிகரித்துக் கொண்டு 1779 ம் ஆண்டு தமது கிளர்ச்சியைத் தொடங்கி, ஆற்காடு நவாப், தொண்டைமான், கும்பினியார் ஆகியோர்களின் படைகளைத் தோல்வியுரச் செய்து 1780 ல் சிவகங்கைச் சீமையை மீட்டி, வேலு நாச்சியாரை மீண்டும் அரியணையில் அமர்த்தினார்கள். இந்தப் போரில் பெரிய மருது பாண்டியன் மணலூர் வாயிலிலும், தளபதி சந்தனச் சேர்வை பூவந்தி வாயிளிலும், வேலு நாச்சியார் மேலூர் வாயிலிலும் முகாமிட்டு போரிட்டனர். மேற்கில் தற்செயலாக வந்த ஹைதர் அலியும் பங்கு கொண்டு சிறப்பித்ததை வரலாறு குறிப்பிட்டுள்ளது.

    வேலு நாச்சியாருக்குப்பின் மருது பாண்டியார்கள் சிவகங்கைச் சீமையைச் சிறப்புடன் ஆண்டு வந்தனர் இவர்களின் புகழ் பற்றிய ஒரு செய்தி இவர்களின் பெருமையை இன்றும் நிலை நாட்டி வருகின்றது. இவர்கள் இருவரும் கோவில் பனியில் நாட்டம் கொண்டிருந்த சமயம் சில மரங்களை வெட்டுவதற்கான கட்டளையை வெளியிட்டனர் அது சமயம் காவலர்கள் சென்று மக்களை அணுகும் போது ஒரு குடிமகன், தான் வளர்த்த இரண்டு மரங்களை வெட்ட அனுமதிக்கவில்லை. அதற்கு பதிலாக, தன் தலையை வெட்டிக் கொள்ளும்படி வேண்டியிருக்கின்றான். இதை அறிந்த மருது பாண்டியார்கள் நேரில் சென்று பார்த்த போது அக்குடிமகன், நான் மருது பாண்டியர்  சகோதரர்களில் இது வரை பார்த்தது இல்லை. அவர்களின் நாட்டுப்பற்றையும் மக்களின் மீது அவர்கள் காட்டும் அன்பையும் அறிந்து கொண்டு இந்த மரங்கள் இரண்டையும் பெரிய மருது பாண்டியர், சின்ன மருது பாண்டியர் என வளர்த்து வருகின்றேன். இதை வெட்ட நான் ஒரு போதும் அனுமதிக்க மாட்டேன் என்று கூறியதைக் கேட்டு அச்சகோதரர்கள் இருவரும் மெய்சிலிர்த்து அந்த மரங்களை வெட்ட வேண்டாம் என்று கூறியதுடன் அந்த குடிமகனையும் கௌரவித்து, சிவகங்கையைச் சீமையை ஆங்கிலேயரிடமிருந்து காப்பாற்றம் பணியில் மேலும் தீவிரம் காட்டினர்.

    இந்த இதழை மேலும்

    நீங்கள் இரக்கமிக்கவரா? 

    இரக்கம் என்பது மனிதனை தனது வழக்கமான பாதையிலிருந்து சற்று விலகி சென்று உடல் ரீதியாக, மனரீதியாக, உணர்வுரீதியாக வலி வேதனையுடன் தவிப்பவர்களுக்கு ஆறுதல் தருகிறது. மனித சமுதாயம் உயிர் வாழ இரக்க உணர்வு ஆடம்பர தேவையல்ல. அது அத்தியாவசிய தேவை. பிறரை துன்பங்களிலிருந்து விடுவிக்க எடுக்கப்படும் முயற்சியாவும் இரக்கத்தின் சிந்தனைதான். உயிரினங்களின் நலத்தை நன்மையை விரும்புபவர்கள் இரக்க சிந்தையுள்ளவர்கள்.

    தர்ம வாழ்க்கை இரக்கத்தை பாதையாக கொண்டது. பாவ வாழ்க்கை அகந்தை, இறுமாப்பு, கர்வத்தை பாதையாக கொண்டது. ஏன் சிலர் சைவ உணவை மட்டும் உட்கொள்கிறார்கள். ஜைனர்கள் தேவையற்ற வகையில் உயிரினங்களை கொடுமைப்படுத்தி தயாரிக்கப்பட்ட அசைவ உணவு வகைகளை உண்ண மறுக்கிறார்கள். டெல்லியில் “லால் மந்திர்” என்ற இடத்தில் புகழ்பெற்ற ஜெயின் கோவில் உள்ளது. அங்கு இரண்டாவது தளத்தில் இயங்கும் “பறவைகள் மருத்துவமனை” மிகவும் பிரசித்தி பெற்றது. மனித இரக்க உணர்வுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது.

    மற்றவர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று விரும்பினால் இரக்கத்தை பின்பற்ற வேண்டும். நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால் இரக்கத்தை பின்பற்ற வேண்டும். மற்றவர்களுக்கு தீங்கு செய்து விட்டு நாம் ஓரு போதும் மகிழ்வாக வாழவே முடியாது.

    சிறு குழந்தை அழுதபடியே கிணற்றில் தவறி விழ உள்ள  நிலையில் ஒருவன் பார்க்கிறான். தாவிச்சென்று காப்பாற்றுகிறான். அந்த குழந்தையின் பெற்றோரின் நன்மதிப்பை பெறுவதற்க்காக அல்ல. அந்த கிராமத்தினரின் அல்லது நண்பர்களின் பாராட்டை பெறவும் அல்ல. குழந்தையின் அழுகுரலை விரும்பாததாலும் அல்ல. இரக்கம்தான் உண்மை காரணம்.

    குழந்தைகளின் வளர்ச்சியை, ஆரோக்கியத்தை, வலிமையை, விளையாடும் நேரத்தை, வறுமை திருடுகிறது. ஏழைக்குழந்தைகள் பள்ளியில் அமர்ந்து கல்வி கற்பதை வறுமை தடுக்கிறது. அத்தகைய குழந்தைகளை ஆதரிப்பவர்கள் நம்பிக்கையை விதைக்கிறார்கள். நல்ல செய்தியை அந்த குழந்தைகளுக்கு கொண்டு வருகிறார்கள். இரக்கம் நதியாக பிரவாகம் எடுக்கிறது. மற்றவர்கள் மீது அக்கறை காட்டுபவர்களின் இதயம் சீராக இயங்குகிறது. அதில் பாச உணர்வு சுரக்கிறது.

    பச்சிளம் குழந்தை நள்ளிரவில் அழுகிறது. குழந்தை அழுதால் அழட்டும் என்று அப்படியே விட்டு விட பெற்ற தாயின் மனம் இடங்கொடுக்காது. தாய் விழித்துக் கொள்கிறாள். அவளது துட்க்கம் கெடுகிறது. குழந்தைக்கு பால் கொடுக்கிறாள். தாலாட்டுகிறாள். உடனடியாக அந்த குழந்தையின் தேவையை கவனிக்கிறாள். எதையுமே சுயமாக செய்ய முடியாதது பச்சிளம்குழந்தை. பத்து மாதம் சுமந்து பெற்று எடுத்தவள் தாய்.

    நமக்கு பிரியமானவர்களின் பலவீனத்தையோ. கஷ்டத்தையோ பார்த்ததும் எழுகிற உணர்ச்சிதான் இரக்கம். இரக்கம் என்பது ஒருவரின் பலவீனமல்ல. ஆனால், அது அவரது பலம். அவரது இன்றியமையாத பண்பு.

    இந்தியர்கள் ஆங்கிலேயர்களால் அடிமைகளாக்கப்பட்டார்கள். கடுமையாக ஓடுக்கப்பட்டார்கள். வாழ்க்கையே கசந்து போகும்படி நடத்தப்பட்டனர்.  இந்திய மக்கள் வேதனையில் தவித்தார்கள். தத்தளித்தார்கள். அது மகாத்மா காந்தியின் இதயத்தை தொட்டது. மக்கள் படும் துன்பங்களை தன் கண்களால் கண்டார். துயரங்களை அறிந்தார். அவர்களை அகிம்சை வழியில் மீட்டார். இன்றும் ரூபாய் நோட்டில் அவரைப் பார்க்கிறோம்.

    மனிதர்கள் மூன்று வகையாக உள்ளனர். முதலாவதாக, பிறரை துன்புறுத்துபவர்கள் ஓரு வகை. பிறர் துன்புறுவதை கண்டுகொள்;ளாதவர்கள் இரண்டாவது வகை. மூன்றாவதாக, பிறரது துயரை தன் துன்பமாக நினைத்து துடைக்க முயல்பவர்கள்.

    இரக்கம், தயை, பரிவு என்றால் என்னவென்று தெரியாமல் சிலர் இருக்கிறார்கள். லட்சக்கணக்கான ஆதரவற்ற குழந்தைகள் பசிக்கு உணவு பெற, தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள, பள்ளியில் கல்வியை தொடர, மருத்துவ உதவி பெற, வழிகாட்டுதலுக்கு யாருமின்றி தவிக்கிறார்கள். அவர்களுக்கு உதவி செய்ய முடியாவிட்டாலும் அவர்களை சுரண்டாமல் இருக்கலாம் அல்லவா. சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வந்த நிதியை சுரண்டி சொகுசு கார் வாங்கியவர்கள் உள்ளனர். உண்மையற்றவர்களாக  நடந்து கொள்பவர்களால்தான் துன்பத்தை அனுபவிக்கிறோம்.

    இந்த இதழை மேலும்

    சிசு பராமரிப்பு

    குழந்தை பிறப்பு ஒவ்வொரு குடும்பத்திலும் சந்தோஷத்தைத் தரும் நல்ல நிகழ்வு. ஒவ்வொரு தாயும் குழந்தை பராமரிப்பு பற்றி தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். காரணம் சிசுவின் உடல் உறுப்புகள் போதிய வளர்ச்சி அடையாமல் இருப்பதால், முறையான கவனிப்பு குறையும் போது பல துன்பங்களுக்கு ஆளாக நேரிடுகிறது.

    சிசு பராமரிப்பின் முக்கியத்துவம்

    சிசு பருவம் என்பது பிறந்த முதல் 28 நாட்கள் ஆகும். இந்த காலகட்டத்தில் சிசு பல நிலைகளைக் கடக்க வேண்டியுள்ளது. ஒவ்வொரு தாயும் சிசுவை நோயின்றி காக்க சிசு பராமரிப்பில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும்.

    அதில் முக்கியமானவை,

    • தாய்ப்பால் ஊட்டுதல்
    • உடல் வெப்பநிலை பாதுகாத்தல்
    • சுத்தம் மற்றும் நோய் தடுப்பு முறைகளைப் பற்றி அறிந்து கொள்வது ஆகும்.

    குழந்தை பிறந்த முதல் சில மணிநேரங்களில் கவனிக்கப்பட வேண்டியவை

    சிசுவைச் சுத்தம் செய்தல்

    சிசு பிறந்தவுடன் சுத்தமான துணியால் இரத்தம் மற்றும் மலம் போன்றவற்றைத் துடைக்கவேண்டும். உடம்பில் ஒட்டியுள்ள வெண்மையான (Vernix) பொருளை துடைக்கக் கூடாது. ஏனென்றால் இது தோலுக்குப் பாதுகாப்பைக் கொடுத்து நோய் வராமல் தடுக்கும். மேலும் துடைப்பதால் தோலில் காயம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

    அடையாள அட்டை

    எல்லா சிசுவிற்கும் அடையாள அட்டை கொடுக்கப்பட வேண்டும். அந்த அடையாள அட்டையில் தாயின் பெயர், மருத்துவமனை எண், ஆணா? அல்லது பெண்ணா? பிறந்த எடை, குழந்தையின் உள்ளங்கால் ரேகையைப் பதிவு செய்ய வேண்டும்.

    சிசுவின் எடை

    சிசுவை ஒருமணி நேரத்திற்குள் எடை போட வேண்டும். மின் எடை சாதனமாக இருந்தால் நல்லது.

    வைட்டமின் ஓ1 ஊசி

    எல்லா சிசுவிற்கும் வைட்டமின் ஓ1 ஊசி போட வேண்டும். நிறை பிரசவமாக இருந்தால் 1 மில்லி கிராம் குறை பிரசவமாக இருந்தால் 0.5 மில்லி கிராம் போட வேண்டும். இதனால் குழந்தைக்குப் பின்னால் வரக்கூடிய இரத்தப்போக்கு நோயைக் கட்டுப்படுத்த முடியும்.

    வயிற்றைக் கழுவுதல்

    பிறந்த குழந்தையின் வயிற்றைக் கழுவுவது என்பது அவசியமில்லை. சில சமயம், குழந்தை பிறப்பதற்கு முன்னரே மலம் கழித்த தண்ணீரைக் குடித்தால் வாந்தி வராமல் தடுப்பதற்காக வயிற்றைக் கழுவ வேண்டும்.

    பிறந்தவுடன் கவனிக்க வேண்டியவை

    குழந்தை பிறந்தவுடன், குழந்தைக்கு இதயத்துடிப்பு மற்றும் பிறவிக்குறைபாடு ஏதேனும் உள்ளதா என்பதைக் கவனிக்க வேண்டும். குழந்தை பிறந்தவுடன் மூக்கு வழியாக கத்தீட்டர் (Catheter) போடவோ அல்லது மலவாய் மூலம் கத்தீட்டர் போடுவதைத் தவிர்க்கவேண்டும். குழந்தையின் உடலின் வெப்பநிலையை எலக்ட்ரானிக் வெப்பமானி மூலம் கண்டறிய வேண்டும். பாதரச வெப்பமானி மூலம் வெப்பநிலையைக் கண்டறிதல் தற்காலத்தில் தவிர்க்கப்படுகிறது. ஏனெனில் தவறுதலாக பாதரசம் சிந்தினால் அதிலுள்ள விஷத்தன்மையால் ஆபத்து உண்டாகும். மலக்குடல் வெப்பமானி மூலம் உடலின் வெப்பத்தைப் பார்க்கக் கூடாது.

    இரண ஜன்னியிருந்து பாதுகாத்தல்

    குழந்தையின் தாய் கர்ப்பகாலத்தில் இரண ஜன்னிக்கான தடுப்பூசி போடாமல் இருந்தால் குழந்தை பிறந்தவுடன் இரண ஜன்னிக்கான தடுப்பூசி போட வேண்டும். குழந்தையின் தாய் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டாலோ அல்லது சின்னம்மை நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலோ குழந்தை பிறந்தவுடன் இமுனோகுளோபுலின் மற்றும் அவற்றிற்கான தடுப்பூசி போட வேண்டும்.

    இந்த இதழை மேலும்

    சக்தி தரிசனம்

    ஊர் சுற்றிப்பார்க்கும் பயணமானாலும், தொழில் நிமித்தமான பயணமானாலும், விடுமுறைக் கால பயணமானாலும் நம் பயண அட்டவனையில் சக்தி வாய்ந்த ஸ்தலங்களுக்கான விஜயமும் இடம் பெற்றிருக்க வேண்டும். அப்போதுதான் நம் பயணம் சக்திமிக்க தன்மையில் முழுமை அடையும்.  ஊர்சுற்றும் பயணத்திலும் வெறும் சுற்றுலாத் தலங்களுக்கு மட்டும் விஜயம் செய்வதை தவிர்த்து சக்தி ஸ்தலங்களுக்கும் விஜயம் செய்வது சிறப்பாக இருக்கும். அதுபோலவே தொழில் முறை பயணங்களிலும் நேரம் ஒதுக்கி சக்தி ஸ்தலங்களுக்கும் போய் வருவதால் நம் பயணத்தின் பயன்பாடு அதிகமாகும். ஆன்மீக ஸ்தலங்களில் சக்தி நிலையினை கருவறையில் விஞ்ஞான பூர்வமாக நிலைநிறுத்தி வைத்திருக்கிறார்கள். அவ்வித சக்தி ஸ்தலங்களின் கருவறைக்குள் நம் பூஜை பொருட்களான தேங்காய் மற்றும் வாழைப்பழம் உள்ளே சென்று வெளி வருவதால் அவற்றில் சக்தி ஊட்டம் பெறுகின்றன.

    இன்னும் சில கோவில்களில் தேங்காய் பழங்களை கருவறைக்குள் எடுத்துச் செல்லாமலேயே வெளியேயே உடைத்து நம்மிடம் கொடுக்கிறார்கள். இவைகளால் அதிகப் பலன் கிடையாது. அதே சமயம் நம் பூஜைப் பொருட்களுக்கு பதில் நம்மையே கருவறை வரை அனுமதிக்கும் சக்தி ஸ்தலங்களுக்கு நாம் விஜயம் செய்தால் முழுமையான சக்தி கிரகிப்பை பெறலாம். அவ்வித ஸ்தலங்களில் எனக்குத் தெரிந்த சிலவற்றைப் பற்றி நாம் இப்பொழுது பார்ப்போம்.

    1. சாய்பாபா கோவில்கள்: இக்கோவில்களின் கருவறைக்குள் நம்மை அனுமதிக்கிறார்கள். அங்கேயே நாம் ஆழ்நிலை தியானத்தில் அமர்ந்து சக்தி கிரகிப்பை முழுமையாகப் பெறலாம். அனேகமாக எல்லா ஊர்களிலும் சாய்பாபா கோவில்கள் இருக்கின்றன.
    2. ஈஷா தியானலிங்கம்: கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் இருக்கும் மிக சக்தி வாய்ந்த சர்வமத சக்தி ஸ்தலமாக ஈஷா தியானலிங்கம் விளங்குகிறது. இதனுள்ளும் நாம் அமர்ந்து சக்தியை முழுமையாக கிரகிக்கலாம். இந்த ஸ்தலத்தின் விஷேசமான அம்சம் என்னவென்றால், நமக்கு தியானம் தெரியாவிட்டாலும் நம் உள்ளே சக்தி மாற்றம் நிகழும் விதமாக மிகத் தீவிர சக்திக் களமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதனுள் செல்பவர் எவரும் சக்தி ஊட்டம் பெற முடியும்.
    3. மகான்களின் ஜீவ சமாதி ஸ்தலங்கள்: இவ்வித ஸ்தலங்களில் மகான்கள் உகல மக்களின் நலன் வேண்டி தங்களின் உயிர்ச் சக்தியை உடலியேயே நிறுத்தி ஜீவ சமாதியாக நிலைகொண்டுள்ளனர். இவ்விடங்களுக்கு நாம் சென்று அங்கும் தியானம் மூலம் சக்தியாக்கம் பெறலாம்.
    4. நாகூர் தர்கா: இத்தலத்திலும் ஒரு மகான் ஜீவசமாதியாகி இருப்பதால் இதுவும் ஒரு சக்திமிக்க ஸ்தலமே ஆகும். இவ்விடத்திலும் நாம் தியானம் மூலம் முழுமையான சக்தி கிரகிப்பைப் பெற முடியும்.
    5. வேளாங்கன்னி பேராலயம்: இந்தப் பேராலய கருவறையிலும் ஆற்றல் குவிக்கப்பட்டுள்ளதால் இங்கும் நாம் விஜயம் செய்து சக்தியாக்கம் பெறலாம்.

    இந்த இதழை மேலும்

    சின்னஞ்சிறு சிந்தனைகள்…

    வாய்ப்புக்காக காத்திருப்பவர்கள் வாழ்க்கை முழுதும் காத்தே இருக்கிறார்கள். வாய்ப்புகளைத் தேடி அலைபவர்கள் நிச்சயம் வெற்றி விகரத்தை அடைத்து விடுகின்றார்கள்.

    எப்போதும் தாமதமே, சாக்குப் போக்கும், எந்த விதத்திலும் வெற்றிக்கு உதாவது.

    எப்போதும் சுயநினைவுடன் அதாவது விழிப்பு நிலையில் உள்ளவர்கள் சூழ்நிலைகளுக்கள்ளாக தங்களை கரைத்துக் கொள்வதில்லை.

    எப்போதும் உங்களுக்குள் ஏதாவது ஒரு தனித்தன்மை இருக்கும். அந்த தனித்தன்மையை வெளிப்படுத்தும் விதமாக நீங்கள் நடந்து கொள்ளுங்கள்.

    சூழ்நிலையை மாற்ற வேண்டும் என்றால் முதலில் நமது மனநிலை மாறட்டும். மனநிலை குழப்பமாக இல்லாமல் அது தெரிந்த நீரோடையாக இருக்கட்டும் இது சரியா அது சரியா என்ற எண்ணங்கள் தான் மனதை குழப்பம் அடைய செய்கின்றன.

    அறிவும் அனுபவமும் இணைந்தது தான் எண்ணம். எண்ணங்கள் நம்பிக்கைகளை உருவாக்குகின்றன. அது நமது மனத்தை நிறைத்துக்கொள்கிறது. எண்ணங்கள் தான் வாழ்க்கையை வடிவமைக்கின்றன.

    எங்கு சென்றாலும் யாரைச் சந்தித்தாலும் கூடுதலான தகவல்களை தெரிந்து கொள்ள முயற்சியுங்கள். சில சமயங்களில் அவை நீங்கள் முன் எச்சரிக்கையாக இருக்கவும் உதவக்கூடும். வாழ்க்கையில் ஒவ்வொருவரும் சம்பாதிக்கும் அனுபவம், மிகச்சிறந்த ஆசான் ஆகும்.

    வையகம் காப்பவரேனும் சிறு வாழைப் பழக்கடை வைப்பவரேனும் பொய்யகலந்தொழில் செய்தே பிறர் போற்றி வாழ்பவர் எங்கனும் மேலோர்.

    கொஞ்சம் மூலதனத்தோடு, கொஞ்சம் மூளையையும் செலுத்தி தன்னம்பிக்கையுடன் உழைத்தவர்கள் பல தலைமுறைகளாக வாழ்விலும், தொழிலிலும் பிரகாசித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

    சூழ்நிலைகளுக்குள் கரைந்து போகிறவன் எப்போதும் சாதனை சிகரத்தைத் தொடுவதில்லை. எந்தச் சூழ்நிலையிலும் தனது முயற்சிகளுக்கு சாதமாக மாற்றும் வல்லமை இருந்தால் போதும் என்றும் முயற்சிகளின் கைகளால் தொட முடியாத உயரங்கள் உலகில் இல்லை.

    இந்த இதழை மேலும்

    இலைகளை எண்ணுகிறாயா? பழங்களை உண்ணுகிறாயா?

    கார் என்பது ஒரு பொருள்; அதை உபயோகப்படுத்த வாங்குகிறோம். இதை மறந்துவிட்டு நேசிக்கிறோம்.

    குழந்தை ஓர் உயிர்; நம் வாரிசு. குழந்தையை நேசிக்காமல் பல சமயம் பொருளாக உபயோகிக்கிறோம். இதனால் தான் இன்று இளைஞர் சமுதாயம் சரியான பாதையைத் தவற விட்டுவிட்டது.

    அடிப்படையில் ஒன்றை மறந்துவிட்டோம்.  பிறக்கும் போது ஒன்றையும் எடுத்து வரவில்லை; இறந்தபின்னும் எதையும் எடுத்து செல்ல முடியாது.

    பொருட்கள் அனைத்துமே நம் வாழ்க்கையை வசதியாக வாழ்வதற்காக இயற்கையாலும், மனிதனாலும் உருவாக்கப்பட்டவை. அதில் இன்பம் அடைவதும் துன்பம் அடைவதும் அவரவர் மன நிலையைப் பொறுத்தது.

    நிம்மதி என்பது நம் மனநிலையைப் பொறுத்தது தான். நம் விருப்பங்களை, தேவைகளைப் பெறுவதற்கான தகுதியை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும்.

    வாழ்க்கை என்பது இன்பம், துன்பம் கலந்ததே. நாம் விரும்பியவறே எல்லாம் நடந்து விட்டால் அது சாதாரணமாகிவிடும்.

    துன்பம் வரும்போது, அதிலிருந்து மீண்டுவர மேற்கொள்ளும் செயல்களால் தான் நம்மிடமுள்ள திறமைகளை நாம் அறிய முடியும்.

    நம் திறமைகளை அறிந்து கொள்ள எளிமையான முதல் நிலை – மற்றவர்களை அப்படியே ஏற்றுக்கொள்ளுதல். இதை ஆங்கிலத்தில் ACCEPT AS SUCH என்று சொல்லலாம்.

    இந்த மன நிலை தான் முதல்படி. கல்விக்கூடங்கள், பணியிடங்கள் மற்றும் பொது இடங்களில் இதை உபயோகப்படுத்தினால் எவரும் இலைகளை எண்ணாமல் கனிகளை உண்ணும் திறமையை அறிய முடியும்.

    இந்நிலையை அடையத் தெரிந்து கெள்ள வேண்டியது ஒன்று தான்.

    உடல் உருவாக்குவது என்ன?

    மனம் உருவாக்குவது என்ன?

    இவற்றைத் தெளிவாகத் தெரிந்து கொண்டால் நாமாகப் பிரச்னைகளை உருவாக்க மாட்டோம்.  வெளிப்பிரச்னைகளும் நம்மை நெருங்காது.

    பசி, தாகம், உறக்கம் போன்றவை உடல் உருவாக்குபவை. இவைகளை உணர்வுகள் என்று சொல்கிறோம்.

    இன்பம், துன்பம், நிம்மதி, கோபம், கவலை, வெறுப்பு, பகை, ஏமாற்றம், அன்பு போன்ற குணங்கள் (பண்புகள்) மனதால் உருவாக்கப்படுபவை, இவைகளை உணர்ச்சிகள் என்று சொல்கிறோம்.

    இந்த உணர்ச்சிகளை அனுபவசாலி மாயை என்று சொல்கின்றனர். உதாரணத்துக்கு ஒன்றைப் பார்ப்போம்.

    பசி நேரம்; 100 பேருக்கு ஒரே மாதிரியான உணவு அளிக்கிறோம். அவர்களுக்கும் நன்றாகப் பசிக்கிறது. இவர்களின் உடல், பசிக்கு உணவு தேவை என்ற உணர்வைச் சொல்லிவிட்டது.

    100 பேரும் சாப்பிட்டு விட்டனர். இப்போது அவர்களிடம் உணவைப் பற்றிக் கருத்து கேட்டால் பலவிதமாகக் கூறுவார்கள். அவர்களின் மனம் அதை எப்படி ஏற்றுக்கொண்டதோ அதன் அடிப்படையில் சொல்வார்கள்.

    உண்ட உணவால் உடலின் பசி என்ற தேவையுணர்வு நிறைவடைந்தது என்ற அளவோடு எண்ணாமல், அதற்கும் மேல் இது நன்றாக இருந்தது அல்லது நன்றாக இல்லை  என்பது உணர்ச்சி.

    இது அவ்வப்போது மாறிக்கொண்டே இருப்பது. இதனால் தான் மாயை அல்லது மயக்க நிலை  என்றனர்.

    கடுமையான குளிர்; உடல் நடுங்குகிறது. உடலை சூடாக வைத்துக்கொள்ள ஏதாவது ஒன்றால் உடலை மூடிக் குளிரிலிருந்து காத்துக்கொள்ள வேண்டு மென்பது உடலின் தேவை உணர்வு.

    இந்த இதழை மேலும்