Home » Articles

தன்னம்பிக்கை மேடை

 நேயர் கேள்வி…?

பெண் பிள்ளைகள் மற்றும் ஆண் பிள்ளைகளிடம் பெற்றோர்கள் என்ன சொல்லி வளர்க்க வேண்டும்? பாலியல் குற்ற சம்பவங்களை நாம் எவ்வாறு கையாள வேண்டும்?

தாரணி, எழுத்தாளர், மதுரை.

வீடியோ ஒன்றை வாட்ஸ் அப்பில் பார்த்தேன். சிறுவர்களிடம் ஒரு சிறுமியை அறிமுகப்படுத்தி, இவர்தான் எலினா, இவருக்குஹலோசொல்லுங்கள் என்கிறார் ஒருவர். ‘ஹாய், ஹலோஎன்கின்றனர் அந்த சிறுவர்கள் ஒன்றன்பின் ஒன்றாக. பின்னர் இந்த சிறுமியை உனக்குப் பிடித்திருக்கிறதா? என்று கேட்கிறார் அவர்,  ஆம்என்கின்றனர் ஒவ்வொரு சிறுவனும்இவரிடம் எதைப் பிடித்திருக்கிறது என்று கேட்கிறார்; ‘அவளது கண்கள் பிடித்திருக்கிறது’, ‘அவளது புன்சிரிப்பு பிடித்திருக்கிறது’, ‘மொத்தமாகப் பிடித்திருக்கிறதுஎன்கின்றனர் சிறுவர்கள். அந்த சிறுமியை பரிகாசம் செய்யுங்கள் என்கிறார், அதையும் வேடிக்கையாகச் செய்கின்றார்கள் சிறுவர்கள். இறுதியாகஅவளுக்கு ஒரு அறை குடுஎன்கிறார்அப்போது ஒவ்வொரு சிறுவனும் தயங்குகிறான். ‘ம்அறை விடுஎன்கிறார் பிரஞ்சு மொழியில் காட்டமாகஒவ்வொரு சிறுவனும் முடியவே முடியாது என்று மறுக்கிறார்கள். ‘ஏன் அறைய மாட்டாய்?’ என்று கேட்கிறார் அவர். ‘அவளும் என்னைப் போல், ஒரு மனிதன்அவளுக்கும் வலிக்கும்என்கிறார் ஒரு சிறுவர். ‘அவள் ஒரு பெண்பெண் பிள்ளையைத் துன்புறுத்தக் கூடாதுஎன்கிறான் ஒரு சிறுவன்… ‘ஒரு சிறுமியை தாக்குவது தவறுஎன்கிறான் இன்னொரு சிறுவன். அதோடு வீடியோ முடிகிறது.

ஆண் பிள்ளைகளை பெற்றோர்கள் எப்படி வளர்த்திருக்கிறார்கள் என்று பாருங்கள். ஆணுக்குப் பெண் சமம் என்பதும், பெண் பிள்ளைக்கு துன்பம் தரக்கூடாது என்பதும் அவர்களது கலாச்சாரத்தில் ஊறிப்போய் இருக்கிறது. ஆண் பிள்ளையாக இருக்கும் நாம் பெண் பிள்ளையைத் துன்புறுத்தக்கூடாது, அவளுக்கு இம்சை தரக்கூடாது என்ற ஒரு கொள்கையை தீவிரமாக ஆண் பிள்ளைகளிடம் சிறுவயதிலேயே விதைத்திருக்கிறார்கள் பெற்றோர்கள். அவர்களது தந்தைகள் கூட தாய்களிடம் மரியாதையாக நடப்பதையும் கண்கூடாகப் பார்க்கிறார்கள் அந்த சிறுவர்கள்.

பாலியல் பயங்கர நிகழ்வுகள் பல நடந்திருக்கிறது, கோவையிலும், டில்லியிலும், சமீபத்தில் ஹைதராபாத்திலும் நடந்த நகழ்வு அனைவருக்கும் தெரியும். இப்படியொரு நிகழ்வு பரபரப்பானதும் படு பாதக குற்றவாளியை உடனே என்கவுண்டர் செய்யுங்கள் என்று பொதுமக்கள் கொதித்து எழுவதை பார்க்கிறோம். அவர்களது உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியும். ஆனால் அவர்கள் தரும் நெருக்கடியைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

பொதுமக்களுக்கு கோபமும், விரக்தியும் ஏன் வந்தது? புலன் விசாரனணயில் சுணக்கம், ஊடகங்களில் போலி தகவல்கள், மறுக்கப்பட அல்லது தாமதமான நீதி போன்றவை மக்களுக்கு குற்ற பரிபாலனைஅமைப்புகள் மீது அவநம்பிக்கை ஏற்பட காரணமாயின. டெல்லியில் நடந்த நிர்பயா பாலியல் வன்முறை மற்றும் கொலை, 16 டிசம்பர் 2012 அன்று நடந்தது. ஆனால் இந்நாள் வரை குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படவில்லை!

ஆனால் சிலர் இந்த நீதி மறுப்பிற்கு அல்லது தாமதத்திற்கு அரசுகள் தான் காரணம் என்று எளிதில் குற்றம் சாட்டி விடுகின்றனர். ஆனால் இது போன்ற குறைகூறும் பழக்கத்தால் எந்த பயனும் ஏற்படாது. ஏனென்றால், இதுபோன்ற சம்பவம் நடக்க பல காரணங்கள் உண்டு.

பொதுமக்கள் கொதித்தெழுந்து ஆவேசமாகப் போராடுவதால்தான்என்கவுண்டர்போன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன என்ற கோணமும் இதில் இருக்கிறது. காவல் துறையின் குற்றவாளிகளை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லவே திணறுகிறார்கள், அந்த அளவுக்கு பொதுமக்கள் வழிமறித்து குற்றவாளிளைத் தாக்குகிறார்கள். இந்தத் தருவாயில் காவல்துறையிரையும் தாக்குகிறார்கள். பொதுமக்களோடு சமூக விரோதிகளும் சேர்ந்து விடுவதால் காவலர்களுக்கு அந்த இக்கட்டான சூழ்நிலையை சமாளிப்பது கூட கடினமான காரியமாகிவிடுகிறது.

இந்த இதழை மேலும்

நேர்மையின் பரிசு

உயர்ந்த குணங்களின் ஒட்டு மொத்த சாரமே  நேர்மை. உண்மை பேசுவது வேறு நேர்மையாக இருப்பது  வேறு.

உண்மை பேசுவது முதல்படி, உண்மையாக இருப்பது இரண்டாம்படி, உண்மையாக நடப்பது மூன்றாம்படி. உண்மையாக  வாழ்வது நான்காம்படி, நேர்மையாக இருப்பது  உச்சப்படி.

உண்மை என்பது பேசுவதைக் குறிக்கும்,  நேர்மை  என்பது செயலைக் குறிக்கும். தலை சிறந்த பண்புகளின்  ஒட்டு மொத்தக் கலவைதான் நேர்மை.

நல்ல பண்புகள், உயர்ந்த எண்ணங்கள்,மேன்மையான நடத்தைகள்,  மாசில்லாத ஒழுக்கம், மனத்தூய்மை,ஈடில்லாத குணங்கள்,  நேர்மறையான  எண்ணங்கள், நேர்த்தியான வாழ்வு, இவைகள் எல்லாம் கறைபடியாத, களங்கம் இல்லாத நேர்மையின் வடிவத்திற்குள் அடக்கம்.

நேர்மை ஒரு மனிதனை புனிதப்படுத்துகிறது, அவன் வாழ்வை மேம்படுத்துகிறது, உள்ளத்தைத் தூய்மைப்படுத்துகிறது. வாக்கிலும் செயலிலும் இனிமையைத் தருகிறது. சுகமான,  இதமான மனதைத் தருகிறது, ஆரோக்கியத்தை வளர்க்கிறது.  பதட்டத்தையும், கோபத்தையும் குறைக்கிறது. எதிர்பார்ப்பையும், ஏமாற்றத்தையும் அறவே தடுக்கிறது. மன அமைதியையும், ஞானத்தையும் அதிகப்படுத்துகிறது. குறையேதும் இல்லாத வாழ்வைத் தருகிறது, புகழை மேம்படுத்துகிறது,  நேர்மை ஒருவரை குன்றின் மேல் விளக்காய் வெளிச்சம்  போட்டுக் காட்டுகிறது.

மக்களின் மத்தியிலே  மரியாதையைக் கூட்டுகிறது.  அந்தஸ்தையும், கௌரவத்தையும் அதிகப்படுத்துகிறது.

மலர்களைச் சுற்றி   பூ வாசம்  வீசும்  அது போல

நேர்மையை சுற்றி  புகழ்  வாசம்  வீசும்

வில்லுக்கு கட்டுப்பட வேண்டிய அஸ்திரங்கள்  எல்லாம்

நேர்மையின் சொல்லுக்கு கட்டுப்படும்,

ஒருவருடைய நேர்மையினால், ஒழுக்கத்தினால், நடத்தையினால்

செயல்பாடுகளால்,  பணிகளால், திறமையினால்,

அன்பினால், கருணையினால் புகழ் கிடைக்கிறது.

நாமாக தேடாமல் தானாகக் கிடைப்பது புகழ்

குழந்தைப் பிறக்கும் போது புகழ்ளோடு பிறப்பதில்லை

வளர வளர அதன் நேர்மையான குணங்களால்தான்

புகழ்  தேடி வருகிறது,

வரப்பு உயர நீர் உயரும்

    நீர் உயர நெல் உயரும்

    நெல் உயர குடி உயரும்

    குடி உயர கோன்  உயரும் 

என்ற பழம் பாடலுக்கேற்ப  தனிமனித நேர்மையும், ஒழுக்கமும் சமுதாயத்தை உயர்த்துகிறது, சமுதாயம் உயரும் போது  நாடும் உயருகிறது.

இந்த கால கட்டத்தில் நேர்மையாக இருப்பவர்களைப் பார்ப்பதற்கு அரிதாக இருக்கிறது. அத்தி பூத்தாற் போல அங்கொன்றும், இங்கொன்றுமாக இருக்கிறார்கள். ஒழுக்கத்திலும், நேர்மையிலும்  குறைவுபட்ட சமுதாயம் அவர்களைக் கவனிப்பது மில்லை, கண்டு கொள்வதும் இல்லை, நேர்மையாளர்கள் ஏளனமாகப் பார்க்கப் படுகிறார்கள். ‘ பிழைக்கத்  தெரியாதவர்கள்என்ற பட்டம்  அவர்களுக்கு சூட்டப்படுகிறது. நேர்மையாக இருப்பவர்கள் கடைசி படியிலே நிற்கிறார்கள், நேர்மையின்  நிழல் கூட படியாதவர்கள் உயர்ந்த பீடத்திலே அமர்ந்து கோலோச்சுகிறார்கள்,  நேர்மை கை கட்டி, வாய் பொத்தி நிற்கிறது.

இந்த இதழை மேலும்

கபடியில் தடம் பதித்த சாதனையாளர்

என் பெயர் அஜீத்குமார். நான் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவன். நான் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பி. உடையப்பட்டியிலுள்ள மாரிஸ் மேல்நிலை பள்ளியில் படித்தேன். என் பதினொன்றாம் வகுப்பை கே. எஸ். ஆர். வி. கோவகுளம் கரூரில் உள்ள பள்ளியில் முடித்தேன். படிக்கின்ற காலத்தில் எனக்கு கபடியின் மீது மிகுந்த ஆர்வம் இருந்தது. இதனால் பதினொன்றாம் படிக்கும் போது முழுமையாக கபடி பயிற்சியில் ஈடுபடுத்திக் கொண்டேன். சாதாரணமாக கபடியில் ஈடுபட்ட என்னை, என் உடற்கல்வி ஆசிரியர் விஜயகுமார், ராஜகோபால் ஆகியோரின் ஊக்குவிப்பின் காரணமாக கபடியில் தீவிரமாக ஈடுபட்டேன். அப்போது அந்த ஊர் பஞ்சாயத்து தலைவரான செல்வராஜ் அவர்கள் என் விளையாட்டுத் திறனைப் பார்த்து படிப்பிற்கும், விளையாட்டுக்கும் பெரிதும் உதவி புரிந்தார். நான் முன்னேறுவதற்கு தற்போதும் பல உதவிகள் புரிந்து வருகிறார். நான் பனிரெண்டாம் வகுப்பை அரசு ஜெயங்கொண்டான் பள்ளியில் படித்தேன். அந்தப் பள்ளியில் என்னைப் போல் சிறந்த வீரர்கள் இருந்தார்கள். அங்கு திருமுருகன், பாலசுப்ரமணியன் என்னும் பயிற்சியாளரின் உதவியால் போட்டிகளை வென்றுள்ளேன். இவர்கள் செய்த உதவியின் காரணமாகவே நான் பள்ளி பருவத்திலேயே சிறந்த விளையாட்டு வீரனாகத் திகழ்ந்தேன். மேலும் என் பயிற்சியினை அதிகப்படுத்திக் கொள்ள கற்பகம் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தேன்.

எனக்கு கபடியின் மீது  ஆர்வம் வந்த தன் காரணம் என் அண்ணன் தான். அவர் ஆடும் இடத்திற்குச் சென்று அவர் ஆடுவதைப் பார்த்துக் கொண்டு இருப்பேன். தற்செயலாக ஒருநாள் அண்ணன் என்னையும் வந்து விளையாடுமாறு கூறி கபடிக்கான பயிற்சிப் பள்ளியில் சேர்த்து விட்டு ஊக்குவித்து வந்தார். இப்படிதான் என் கபடி விளையாட்டின் பயணம் ஆரம்பம் ஆனது. மேலும் என் பள்ளி பயிற்சியாளரின் ஊக்குவிப்பின் மூலமும் கபடியின் மீது எனக்கு மிகுந்த ஆர்வமானது ஏற்பட்டது.

என் கல்லூரி படிப்பானது கோவை கற்பகம் கல்லூரியில் தொடங்கப்பட்டது. இக்கல்லூரியில் நான் பயில என் பள்ளி பயிற்சியாளர் எனக்கு அறிவுரை வழங்கினார். மேலும் இக்கல்லூரியில் நான் விளையாட்டு இட ஒதுக்கீடு மூலம் பி. காம் பயின்று வந்தேன். இக்கல்லூரியில் படிப்புக்கு முக்கியத்துவம் அளிப்பது போலவே விளையாட்டிற்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதன் மூலம் கபடியில் நன்கு பயிற்சி பெற்று பல்வேறு போட்டிகளில் பங்கு பெற என்னால் முடிந்தது. மேலும் கல்லூரி நிர்வாகமும் பேராசிரியரும் இதற்குப் பெரிதும் துணை புரிந்தனர். நண்பர்களும் விளையாட்டின் போதும் போட்டிகளின் போதும் என்னை பெரிதும் ஊக்குவித்தனர்.   

விளையாட்டின் மீது இருந்த ஆர்வமானது தன்னை மேலும் ஊக்குவிக்கும் விதமாகவும் தன்னை மேலும் வளர்த்து கொள்ளவும் என் பயிற்சியாளரிடமும், முன்னாள் மாணவர்களிடமும், வெற்றிப் பெற்ற சாதனையாளர்களிடமும் விளையாட்டில் உள்ள நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டேன். நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் அவர்களின் அறிவுரையின்படி பயிற்சியின் காலமாக காலை 5 மணி முதல் 8 மணி வரையிலும் மேலும் மாலை 4 மணி முதல் 7 1/2மணி வரை பயிற்சியில் ஈடுபடுவேன்.

இந்த இதழை மேலும்

  

பற்றி எரியும் அமேசான்.. அழுது புலம்பும் அன்னை பூமி..

காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்டு வரும் துயரக்கதைகளை உலகம் முழுவதிலும் இருந்து இன்று நாம் கேள்விப்படுகிறோம். நாமும் அதை அனுபவிக்கவும் செய்கிறோம். காலநிலையை நம்மால் மாற்றமுடியாது. ஆனால், நாம் வாழுமுறையை நம்மால் மாற்றிக்கொள்ள முடியும். அதற்கு நம்மைச் சுற்றிலும் நடக்கும் சம்பவங்களை நாம் கண் திறந்து பார்க்கவேண்டும். புரிந்துகொள்ளவேண்டும். செயல்படவேண்டும்.

பூமியின் சுவாசப்பைகள் என்று அழைக்கப்படும் அமேசான்மழைக் காடுகள் சில வாரங்களாகப் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. நம்மில் எத்தனை பேர் இதைப் பற்றிக் கவலைப்படுகிறோம்? நம்மில் எத்தனை பேருக்கு இதைப் பற்றித் தெரியும்? நமக்குத் தெரிந்தது எல்லாம் அமேசான் என்றால், ஆன்லைன் வணிகம் செய்யும் நிறுவனத்தின் பெயர்தான்! தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் எவ்வளவோ முன்னேற்றங்கள் நடந்து வரும் போதும், நம்மை வாழவைக்கும் இயற்கையைப் பற்றிய விஷயங்களில், நம்மில் பலரும் இன்றும் கிணற்றுத்தவளைகளாகவே இருக்கிறோம்.

அமேசான் எரியும்போது, பூமியின் இயற்கைக் வளங்களின் கருவூலமும் சேர்ந்தே சாம்பலாகிறது. இயல்பாக நிகழாத இந்த இயற்கைப் பேரழிவு அங்கு உள்ள சில தொழிலதிபர்களால் ஏற்படுத்தப்பட்டது. இதற்கு எதிராக மனிதகுலத்தின் மனசாட்சி விழித்துக் கொள்ளவில்லை என்றால், வருங்காலத் தலைமுறையினருக்கு சாம்பலாகிவிட்ட பூமியையே நம்மால் வழங்கமுடியும். எங்கோ இருக்கும் அமேசான் காடுகள் எரிந்தால், நமக்கு என்ன என்று நம்மால் இருந்துவிடமுடியாது.

ஒரு இடத்தில் நடக்கும் காலநிலையுடன்தொடர்புடைய சம்பவங்கள் உலகம் முழுவதையும் பாதிக்கிறது. ஆர்டிக் முதல் அமேசான் வரை, இதற்கு முன் ஒருபோதும் நடந்திராதவகையில் தீ தாண்டவமாடிக் கொண்டிருக்கிறது. இனி, ஒருபோதும் மீட்கமுடியாத அளவிற்கு நம் அன்னை பூமி வெந்து உருகிக் கொண்டிருக்கிறது. அமேசான் காடுகள் என்பது பிரேசில், பெரு, பொலிவியா, வெனிசுவெலா, கயானா, கொலம்பியா, சுரினாம், பிரெஞ்சு கயானா, ஈகுவெடார்  ஆகிய ஒன்பது நாடுகளில்பரவியிருக்கும் உலகின் மிகப்பெரிய மழைக்காடுகள்.

இயற்கையின் இந்த அற்புதக் கருவூலம் பிரேசிலில் 58.4%, பெருவில் 12.8%, பொலிவியாவில் 07.7%, வெனிசுவெலாவில் 06.1%, கயானாவில் 03.1%, கொலம்பியாவில் 07.1%, சுரினாமில் 02.5%, பிரெஞ்சு கயானாவில் 01.4%, ஈகுவெடாரில் 01.0% என்ற அளவில் அமைந்துள்ளது. இந்தக் காடுகளின் மொத்த நிலப்பரப்பு 55 இலட்சம் ச.கி.மீ. பிரபஞ்சத்தின் மாபெரும் கானகங்களான இந்தக் காடுகளின் வயது 5.5 கோடி வருடங்கள் என்று கருதப்படுகிறது. கோடிக்கணக்கான அரியவகை தாவரங்களும், விலங்கினங்களும் இங்கு தோன்றி வாழ்ந்துவருகின்றன.

இங்கு வாழும் தாவரங்களையும், பறவைகளையும், விலங்குகளையும் யாரும் போற்றி வளர்ப்பது இல்லை. இதன் வரலாறு நீண்ட நித்திரையில் (hibernation) ஆழ்ந்துகிடக்கிறது. இந்தக் காடுகளில், 40,000 தாவரவகைகள், 427 பாலூட்டி இனங்கள், 1300 பறவை இனங்கள், 378 ஊர்வன, 3000 நந்நீர்வாழ் மீன் இனங்கள், 1 இலட்சம் மற்றவகை விலங்கினங்கள் வாழ்கின்றன. அமேசான் என்ற இந்தப் பொக்கிஷம் மரம் முதல் மருந்து வரை மனிதனுக்கு எல்லாவற்றையும் வாரி வழங்கிவருகிறது. விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்ட இவை எல்லாம் வெறும் 1% மட்டுமே.

அமேசான், ஆதிவாசிகளின் தாய்வீடு எனலாம். 420  வேறுபட்ட ஆதிவாசி இனங்களைச் சேர்ந்த ஏறக்குறைய 10 இலட்சம் ஆதிவாசிமக்கள் இங்கு வாழ்ந்துவருகிறார்கள். வெளியுலகுடன் தொடர்பு கொள்ளாத ஏறக்குறைய 50 இனங்களைச் சேர்ந்த ஆதிவாசிமக்கள் இன்றும் காட்டிற்குள்ளேயே வாழ்கிறார்கள். தங்களுக்கு என்று பல்வேறு சிறப்புகளை உடைய மொழிகளும், கலாச்சாரங்களும் இவர்களுக்கு உண்டு. அடர்ந்த உள் வனங்களில், குறைந்த அளவில் வேளாண்மை செய்தும், வேட்டையாடியும் வாழ்கிறார்கள்.

இந்த இதழை மேலும்

பிரசவம்

  • சிசுவின் வளர்ச்சி கர்ப்பபையில் குறைவாக இருந்தால் உடனடியாக பிரசவம் செய்ய வேண்டும்.
  • தாய்க்கு இரத்த கொதிப்பு அதிகமாக இருந்தால் உடனடியாக பிரசவம் பார்க்க வேண்டும்.

பிறந்த குழந்தைக்கு அவசர சிகிச்சைப் பிரிவு

குழந்தை பிறந்தவுடன் குழந்தையை அவசர சிகிச்சை பிரிவிற்கு எடுத்துச் செல்ல வேண்டும். அங்கு குழந்தையைத் தலை முதல் கால் வரை பரிசோதிக்க வேண்டும். குழந்தையின் உடல் வெப்பநிலை, இதயத்துடிப்பு, மூச்சு விடுதல் அனைத்தையும் பரிசோதிக்க வேண்டும்.

நஞ்சுக் கொடியைப் பரிசோதித்தல்

நஞ்சுக்கொடியைப் பரிசோதிக்கும் போது ஏதேனும் தொற்று நோய் உள்ளதா என்பதைப் பரிசோதிக்க வேண்டும்.

பின்விளைவுகள்

  • தாழ் வெப்பநிலை
  • இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைவது
  • வெள்ளை அணுக்களின் குறைபாடு
  • கால்சியம் குறைபாடு
  • இரத்தத்தின் அளவு அதிகரித்தல்

பரிசோதனைகள்

  • இரத்தத்தின் சர்க்கரை அளவைக் கண்காணித்தல்
  • இரத்தத்தின் கால்சியம் அளவைக் கண்காணித்தல்
  • இரத்தத்தின் சோடியம் அளவைக் கண்காணித்தல்

பிறந்த குழந்தையின் எடை 2500 கிராமிற்குக் குறைவாக இருத்தல்.

எடை குறைந்த குழந்தையின் உணவு முறை

எடை குறைந்த குழந்தைகளுக்கு உணவு என்பது தாய்ப்பால், பால் பீய்ச்சி கொடுப்பது, தாய்ப்பால் கொடுப்பவர்களிடமிருந்து வாங்குதல், அதிக சத்து நிறைந்த பால் ஆகியவற்றுள் ஒன்றாக இருக்கலாம்.

தாய்ப்பால்

குறை பிரசவத்தில் பிறக்கும் குழந்தைக்குத் தாய்ப்பால் மிகவும் அவசியம். இது குழந்தையைப் பலவிதமான தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.

பிற தாய்மார்களின் தாய்ப்பால் (Donor Breast milk)

பிற தாய்மார்களிடமிருந்து குழந்தைக்குக் கொடுக்கப்படும் பால் டோனர் பால் எனப்படும். டோனர் பால் கொடுப்பதால் குழந்தையின் வளர்ச்சி தடைபடுகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அதிக சத்து நிறைந்த பால் மற்றும் உணவை வலுவூட்டுதல் (fortification)

பாலுடன் மற்ற பொருட்களைச் சேர்த்து கொடுக்கும்பொழுது குழந்தையின் எடை அதிகரிக்கிறது.

மாட்டுப்பால்

எந்த ஆராய்ச்சிகளும் மாட்டின்பால் நல்லது என்று கூறவில்லை.

இந்த இதழை மேலும்

அன்பும் அறனும் உடைத்தாயின். . .

கவிஞர் கவிநேசன் ,

கோபிசெட்டிபாளையம்

இன்னாருக்கு இன்னார்தான் என்று இறைவன் அருளால் ஆசிர்வதிக்கப்பட்டு அமைத்துக்கொடுக்கப்பட்ட உறவுதான் திருமணம். எல்லாக் காலங்களிலும் பிரச்சினைகளைத் தீர்த்து மகசூல் பெருக்கும் பயிர் என்ற  பொருளில்தான் நம் முன்னோர்கள் திருமணத்தை ஆயிரங்காலத்துப் பயிர் என்று வழங்கினார்கள். படிப்பு, அறிவு, அழகு , வேலை, சொத்து , குடும்பம் ஆகியவற்றையெல்லாம் தீர ஆலோசித்து  , பின்பு பெரியோர்களால் நிச்சயித்து ,  பலர் சாட்சியாக ஏற்படுத்திக்கொண்ட  இந்த பந்தம் வாழும் காலம் முழுமைக்குமான ஒரு தெய்வீக பந்தம். குடும்ப அமைப்பிற்கே பெரும் கவுரவத்தை ஏற்படுத்தித் தரும் மகோன்னதமான உறவுதிருமணம் . அவ்வாறு அமையப்பெற்ற இல்லறம் நல்லறமாக இனிக்க வேண்டுமாயின் , கணவனும் மனைவியும் வாழும் காலம் முழுமைக்கும் மனமொத்து ஒருவருக்கொருவர் ஆதரவாகவும் , ஆதாரமாகவும் ,  அன்புடனும் ,  அறத்துடனும் ,  உண்மையாகவும் , இருத்தல் வேண்டும். அப்படி இனிய  மணவாழ்க்கை வாய்க்கப்பெற்றவர்கள் இறைவன் அருளுக்கு பாத்திரமானவர்கள் ஆகிறார்கள்.

பரபரப்பான இன்றைய கால கட்டத்தில் எல்லாமே அவசரம் தான்.  தீர ஆலோசிக்காமல் அவசரமாக முடிவெடுத்து திருமணத்தால் இணைகிறார்கள்.  பிரிவதிலும் அவசரமாகவே முடிவெடுத்து நீதிமன்றத்திற்கு முந்துகிறார்கள். சிறு சிறு கருத்து மோதல்களைக்கூடக்  கடந்து வர முடியாமல் மணவாழ்க்கையை முடித்துக் கொள்ளும் அவலத்திற்கு உள்ளாகிறார்கள்.  சரியான புரிதல் இல்லாமல் இல்லற வாழ்வின் இனிமையைத் தொலைத்துவிடுகிறார்கள். சகிப்புத்தன்மையும் , விட்டுக்கொடுத்தலும் அறவே இல்லாததன் காரணமாக தொடக்கத்திலேயே  இல்லற வாழ்வு தொல்லையாய்த் தெரிகிறது. சுவைத்து  மகிழ்வதற்கு முன்பாகவே  கசக்க ஆரம்பித்துவிடுகிறது

திருமணத்தால் ஒரு பெண் , தன் தாய் தந்தையர் ,  குடும்பம் என  எல்லாவற்றையும்  விட்டு  கரம்பிடித்தவனே  காலத்திற்குமான உற்ற துணை என  உள்ளத்தில்  உறுதி  பூண்டு புகுந்த வீட்டிற்குப் புறப்பட்டு வருகிறாள். அவளது அனைத்து ஆசைகளையும் , விருப்பங்களையும் , எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றுவது ஒரு  நல்ல கணவனின் கட்டாயக் கடமையாகும்.  மனைவியிடம்  மனம்விட்டு பேசுவதற்கு நேரம் ஒதுக்கி , எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் மனைவியிடத்தில் மனதாரப் பகிர்ந்துகொள்ளுதல் அவசியமாகும் . மனம்விட்டு பேசுதலும் அதற்கு நேரம் செலவிடுதலுமே மனைவியின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்த குறைந்தபட்ச எதிர்பார்ப்பை நிறைவேற்ற  முடியாததிலிருந்து தான்  குடும்பத்தில் பனிப்போர் ஆரம்பமாகிறது.

பொருளீட்டுவதில் மட்டுமே ஒரு ஆணின் முழு கவனமும் இருந்துவிடக்கூடாது . மனைவியின் அன்பை  ஈட்டுவதிலும் கவனம் இருத்தல் வேண்டும்.  பணமே பிரதானம் என்று அதற்கான தேடல்களில் மூழ்கிக்கிடப்பதால் குடும்பக் கப்பல் கரைசேர முடியாமல் தத்தளித்து மூழ்கிவிடும் அபாயமும் உண்டு என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.  மனைவியை மகிழ்விக்கவும் குடும்பத்தின் நன்மைக்காகவுமே  நான் கடுமையாக உழைக்கிறேன்என்ற காரணம் ஏற்புடையதல்ல. உழைப்பதாலும் , பொருள் ஈட்டுவதாலும் மட்டுமே குடும்பத்திற்கு கவுரவம் சேர்ந்துவிடாது. இணையோடு இணக்கம் காட்டி இல்லறம் பேணுவதில்தான் குடும்ப கவுரவமே இருக்கிறது  என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். பொருள் தேடி ஓடிக்கொண்டிருப்பதால் வீடுகள் தீவுகளாக்கப்பட்டுவிடுகிறது. இந்த தனித்தீவில் சிக்கிக்கொண்டு தனித்துவிடப்பட்டு அன்பிற்கு ஏங்கித் தவிக்கிறார்கள். இப்படி தத்தளித்தும் தவித்தும் கொண்டிருப்பவர்களைக் குறிவைத்து ஒரு கூட்டம் காத்துக்கொண்டிருக்கிறது. வீட்டின் வாயில் கதவுகள் மூடி வைக்கப்பட்டிருந்தாலும் , இணையக் கதவுகள் திறந்து வைக்கப்பட்டே இருப்பதால் எவர் வீட்டிற்குள்ளும் எவரின் அனுமதியுமின்றியும் எவரும் உள்ளே நுழைந்துவிடும் வாய்ப்பை இன்றைய அறிவியல் தொழில்நுட்பம் நமக்கு வழங்கி இருக்கிறது. சமூக வலைத்தளங்கள் மூலமாகவும்  அலைபேசி வாயிலாகவும் அழையா விருந்தாளிகள் நம் படுக்கை அறை வரைக்கும் எளிதாக வந்துவிடமுடிகிறது.  அடுத்தவர்களின் அந்தரங்கங்களை விற்றுக் காசாக்குகின்ற தந்திரங்களை கலிகாலத்து சகுனிகள் கற்றுவைத்திருக்கிறார்கள்.  சில வக்கிர எண்ணம் கொண்டவர்கள் , தனிமையில் தவித்து அன்புக்கு ஏங்குபவர்களுக்கு உதவிக் கரம் நீட்டுவதுபோல நடித்து , தங்களது வசிய வலையில்  விழ வைத்துவிடுகிறார்கள்.

இந்த இதழை மேலும்

தடம் பதித்த மா மனிதர்கள்

நம் தாய்நாடான இந்தியாவின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட தலைவர்கள் பலர். விடுதலைப் போராட்டத்தில் காந்தியடிகள் கலந்து கொள்ளும் முன் கலந்து கொண்ட பெரிய தலைவர்களின் ஒருவர் வ..சிதம்பரம் பிள்ளை அவர்களும் ஒருவர் ஆவார். அவருடைய வாழ்க்கை வரலாற்றில் இருந்து சில நிகழ்வுகளை இக்கட்டுரை மூலம் பதிவு செய்வதால் பல்வேறு இளைஞர்கள் பலன் பெருவார்கள் என்பது உறுதி. ஏனெனில் அவரது நினைவு சின்னங்கள் பற்றிய குறிப்புகள் கீழே வரிசை படுத்தப்பட்டுள்ளது.

ஒட்டப்பிடாரத்தில் இவர் வாழந்த வீடு அவரது நினைவு இடமாக மாற்றப்பெற்று அதில் நூலகம் மற்றும் இவர் பற்றிய குறிப்புகள் பலவும் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

தமிழகம் முழுவதும் பல இடங்களில் இவரது உருவச் சிலை வைக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் மத்திய சிறையில் இவர் இழுத்த செக்கு இன்று சென்னை கிண்டியில் உள்ள காந்தி நினைவு மண்டபத்தில் காட்சி பொருளாக வைக்கப்பட்டுள்ளது.

செக்கிழுத்த செம்மல் என்ற அடைமொழி பெற்றவர் இவர்.  தூத்துக்குடி துறை முகத்திற்கு அரசாங்கம் இவரது பெயரைச் சூட்டியுள்ளது. கப்பலோட்டிய தமிழன் அடைமொழியையும் பெற்றவர் இவர் ஆவார்.

மேலும் தமிழகம் முழுவதும் பல கல்வி நிறுவனங்கள் தெருக்கள், சாலைகள் மற்றும் பல அடுக்கு மாடிக்குடியிருப்புகள் பலவற்றிற்கு இவரது பெயர்  சூட்டப்பட்டுள்ளது.

செப்டம்பர் 5. 1972 ல் அவரது நூற்றாண்டு விழாவை நினைவு கூறும் வகையில் இந்தியத் தபால் தலையை இவரின் பெயரில் வெளியிட்டது.

கோயம்புத்தூரில் உள்ள வ..சி பூங்கா மற்றும் வ..சி. மைதானம் மிக முக்கியமான பொது சந்திப்புக்கூடமாக இன்றும் விளங்குகின்றன.

1961 ம் ஆண்டு இவரது வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு தமிழ்த் திரைப்படம் ஒன்று வெளியானது. அதன் முன்னிணிப் பாத்திரமாக நடிகர் சிவாஜி அவர்கள் நடித்திருந்தார்.

..சிம்பரனார், விடுதலைப் போராட்ட வீரர், சிறந்த வழக்கறிஞர், நற்பண்புகளை ஒருங்கே பெற்றவர். அவர் தம் சொத்துக்களை எல்லாம் ஏழை, எளியவர்களின் வாழ்விற்காகப் பயன்படுத்தி, சிறந்த வெல்வந்தராய் பிறந்து வளர்ந்தவர் தன்னுடைய இறுதி நாட்களில் வறுமையால் வாடினாலும் இவர் தம் சுதந்திர தாகம் தணியாமல் உயிர் நீத்தார்.

இவர் 1872 ம் ஆண்டு செப்டம்பர்  மாதம் 5 ம் தேதி ஒட்டப்பிடாரத்தில், அன்றைய புகழ்பெற்ற வழக்கறிஞர்களில் ஒருவரான உலகநாதன் பிள்ளைக்கும் பரமாயி அம்மாளிற்கும் மகனாய் பிறந்தார். இவர் ஒட்டப்பிடாரத்திலும், திருநெல்வேலியிலும் உள்ள பள்ளிகளில் சேர்ந்து கல்வி பயின்றார். பள்ளிப்படிப்பிற்குப் பின் ஒட்டப்பிடாரத்தில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் சேர்ந்து பணிபுரிந்தார். அதன் பின் அவரது தந்தையைப் போல சட்டம் படித்து புகழ் பெற்ற வழக்கறிஞர் ஆனார். ஆனால் இவர் தந்தையைப் போல் பணம் படைத்தவர்கள் மட்டும் வாதாடாமல், ஏழைகளுக்காக வாதாடி அதில் வெற்றியும் பெற்றார். ஒரு முறை அவர் தம் வாதத்தால் தன் தந்தையையே தோற்கடித்தார். இவர் தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழிகளை ஆர்வத்துடன் கற்று அவற்றில் புலமையும் பெற்றிருந்தார்.

இந்த இதழை மேலும்

சொத்து

தாத்தா தனது பேத்தியை மடியிலே வைத்துக் கொஞ்சினார். ஏன்டீ செல்லம் அழறே? எதுக்கு அழறே? பசிக்குதா? இப்பத்தானே பாலைக் குடிச்சே அதுக்குள்ளப் பசிக்குதா? என்ன சொல்றே நீ? பசியெல்லாம் ஒன்னுமில்லியா? சரிபிறகேன் இந்தச் சிணுங்கல்? கதை சொல்ல்ணுமா? என்ன கதை வேணும்? காக்கா கதை சொல்லட்டா?

ம்ம்ம் சொல்லுங்கிறியா? வேணாங்கிறியா?

ம்….ம்ம்எல்லாத்துக்கும் ம்ம்ம்.. ம்னா எப்படி செல்லம். அப்படியா சரிசரி காக்கா கல்லு போட்டு தண்ணீர் குடிச்சக்கதையும் வேணாம்..பாட்டி வடை சுட்டக் கதையும் வேணாம் நான் என் சொந்தக்கதையைச் சொல்லட்டுமா? கேக்கிறியா இதோ பாரு உங்கப்பன் எங்கேயோ ஊரைச் சுத்திட்டு இப்பத்தான் வர்றான்என்னன்னு கேளு. ஏன் மறுபடியும் மறுபடியும்அழறே? கதை சொல்ல இன்னமும் ஆரம்பிக்கலையேன்னாசொல்றேன்.. சொல்றேன்..ரொம்பத்தான் நீ அவசரப்பட்றே

உனக்கொரு தாத்தா மாதிரி எனக்கும் ஒரு தாத்தா இருந்தாரு அவர் வேலிக் கணக்கில நிலத்தைச் சம்பாதிச்சி வச்சிருந்தார். நல்ல பல சொந்த பந்தங்கள் எல்லாம் சம்பாதிச்சார்.

என்னோட அப்பா என்ன பண்ணினார் தெரியுமா? அவங்கப்பா சம்பாதிச்ச நெலத்தில நெத்தி வியர்வை சிந்தி உழைச்சிப் பாடுபட்டு ஒண்ணுக்கு நாலா வீடு கட்டினார். சொத்து மேலே சொத்து சேர்த்தார். நான் என்ன பண்ணினேன்னு கேக்கறையா? சமத்துக்குட்டி நீ?

இந்த இதழை மேலும்

வெற்றி உங்கள் கையில் – 73

நேர்மை தந்த பரிசு

இந்தக்காலத்தில் நேர்மையாக இருந்தால் வாழ முடியாது. குறுக்கு வழியில் பணம் சம்பாதிப்பவர்கள் மட்டுமே வாழ முடியும்” – இது சிலரின் ஏக்கப் பெருமூச்சு.

யாரையாவது ஏமாற்றினால்தான் முன்னுக்கு வரமுடியும்” – இது வேறுசிலரின் வேதனை கலந்த வார்த்தைகள்.

நல்லவர்களுக்கெல்லாம் எதிர்காலம் கிடையாது. நயவஞ்சகர்கள் மட்டுமே வெற்றி பெறுகிறார்கள்” – இதுவும் சிலரின் ஏமாற்றம் கலந்த எண்ணங்கள்.

உண்மையாக வாழ்ந்தால் பதவி கிடைக்காது. குறுக்குவழியில் சம்பாதித்தால்தான் பணம் கிடைக்கும்” – இப்படியும் சிலர் நினைத்து செயல்படுவதால், முடிவில் சிறைக்கம்பிகளை எண்ணும் நிலையும் உருவாகிவிடுகிறது.

நேர்மையாக வாழ்ந்தால் வாழ்க்கையில் முன்னேறவே முடியாதா?” என்ற கேள்விக்கு விடை தெரியாமல் சில இளைஞர்கள் தங்கள் பாதையில் தடம் புரளுகிறார்கள். “நேர்மையோடு வாழ்பவர்களின் வெற்றி நிரந்தரமாய் அமையும்என்பதைப் புரிந்துகொண்டவர்கள் வாழ்க்கையை ரசிக்கிறார்கள்.

அது ஒரு மிகப்பெரிய ஆலை.

அந்த ஆலையை சிறிய ஆலையாகத் தொடங்கியவர் ராஜாராம். பின்னர், மிகப்பெரிய ஆலையாக மாற்றியப் பெருமை அவரையே சாரும்.

பல வருடங்களாக அந்த நிறுவனத்தை வளர்த்து, நிர்வாக இயக்குநராக பணிபுரிந்த ராஜாராம், அந்த நிறுவனத்தின் பொறுப்பை வேறு ஒருவரிடம் கொடுக்க முடிவு செய்தார்.

வயதான நிலையில் இன்னொரு நிர்வாக இயக்குநரை தேர்ந்தெடுக்கவும் திறமையானவரை கண்டுபிடிக்கவும் முயற்சி செய்தார். தனது ஆலையில் பணிபுரிந்த அனுபவமிக்க பணியாளர்களை அழைத்தார்.

நிர்வாக இயக்குநர் பொறுப்பிலிருந்து நான் ஓய்வுப் பெறப்போகிறேன். எனக்குப் பின்னர் இந்த நிறுவனத்தில் நிர்வாக இயக்குநராக பணிபுரிய உங்களில் ஒருவரைத்தான் தேர்ந்தெடுக்கப் போகிறேன். உங்களில் ஒருவரைத் தேர்வு செய்ய நான் ஒரு போட்டி நடத்தப்போகிறேன். அந்தப் போட்டியில் வெற்றி பெற்றவர்தான் எனக்குப்பின் பொறுப்பேற்கும் இந்த ஆலையின் நிர்வாக இயக்குநர்” – என நிர்வாக இயக்குநர் ராஜாராம் சொன்னதும் பணியாளர்கள் ஆர்வத்தோடு கவனித்தார்கள்.

நிர்வாக இயக்குநர் மீண்டும் தொடர்ந்தார்.

என்னிடம் இப்போது பலவகையான விதைகள் உள்ளன. இந்த விதைகளை நான் உங்கள் ஒவ்வொருவருக்கும் ஆளுக்கு ஒன்றாகத் தருகிறேன். எந்த விதை யாருக்குத் தருகிறேன் என்று எனக்கே தெரியாது. நீங்கள் உங்கள் வீட்டிற்கு இந்த விதையைக் கொண்டு செல்லுங்கள். வீட்டில் ஒரு தொட்டியில் இந்த விதையை ஊன்றுங்கள். நன்றாக நீர் ஊற்றி வளருங்கள். தேவையான உரமிடுங்கள். அடுத்த ஆண்டு இந்தச்செடி நன்றாக வளர்ந்தபின் நீங்கள் என்னிடம் அதனைக் காட்ட வேண்டும். அப்போது யாருடைய செடி செழிப்பாக உயர்ந்து வளர்ந்திருக்கிறதோ அவர்தான் எனது ஆலையின் முழு பொறுப்பையும் கவனிக்கும் நிர்வாக இயக்குநராக பதவியேற்பார்என்றுசொல்| போட்டியை ஆரம்பித்தார்.

நிர்வாக இயக்குநர் கொடுத்த விதையை அந்தப் பணியாளர்கள் வாங்கிச் சென்றார்கள். பணியாளர்களில் ஒருவர்தான் ராஜன். தனக்கு கிடைத்த விதையை வீட்டிற்கு வாங்கிக்கொண்டுவந்து தனது மனைவியிடம் காண்பித்தார்.

இந்த இதழை மேலும்

நேரம் ஒரு மூலதனம்..

வேகமாகச்செல், வேகமாகச் செல். உன்னுடைய உயிரை காப்பாற்றிக் கொள்ள வேகமாகச் செல். இந்த எழுத்துக்கள் எட்டாம் ஹென்றி காலத்தில் தபால் உறையின்  மீது எழுதப்பட்டிருந்தது.

தபால் போக்குவரத்து இல்லாத அந்தக் காலத்தில் அரசாங்கத்துத் தூதுவர்களே கடிதங்களை எடுத்துச் சென்றனர். அவர்கள் வழியில் தாமதித்தால் என்ன தண்டனை தெரியுமா? மரணதண்டனை.

நாம் இன்று சில மணி நேரத்தில் கடந்து செல்லும் தூரத்தை வாரக்கணக்கில் நடந்து செல்ல வேண்டி இருந்த காலக்கட்டத்திலும் கூட தாமதமானது பெரும் குற்றமாகக் கருதப்பட்டது.

அந்தக் காலத்தில் உள்ளவர்கள் ஒரு நாளில் செய்ய வேண்டிய காரியத்தை இன்று ஒரு மணி நேரத்தல் செய்து முடிக்கும் வகையில் ராக்கெட் வேகத்தில் முன்னேறிக் கொண்டு இருக்கும் பொழுது.

அன்று அனாவசிய தேவையற்ற தாமத்திற்கு மரண தண்டனை என்றால்  இன்று அவ்வித குற்றத்திற்கு என்ன தண்டனை அளிக்கப்பட வேண்டும்?

சோம்பேறித்தனத்தின் காரணமாக ஏற்பட்ட அனாவசியத் தாமத்தால் உலகில் ஏற்பட்ட அழிவுகள் அளவிட முடியாதவை. எத்தனையோ பேரரசுகள் சரிந்திருக்கின்றன. எத்தனை முடியரசுகள் கவிழ்ந்து உள்ளது.

எனவே தான் நெப்போலியன் கூறினார், இழந்தவிட்ட ஒவ்வொரு நிமிடமும் துயரத்திற்குச் சந்தர்ப்பம் அளிக்கிறது. உடனுக்குடன் காரியங்களை ஒழுங்காக செய்வது போன்று நமக்கு வெற்றி மாலை சூட்டக்கூடியது வேறு ஒன்றும் இல்லை.

இதே போன்று செய்ய வேண்டியதை ஓத்திப்போட்டு கொண்டு செல்லது போல துன்பப்படுகுழியில் தள்ளக்கூடியதும் வேறு ஒன்றும் இல்லை.

காலம் என்னும் கடிகாரத்தில் ஒரே ஒரு சொல் தான் பொறிக்கப்பட்டிருக்கிறது. அது என்னவென்றால் இப்பொழுதே என்பது தான். அது தான் வெற்றி வீரனின் தாரக மந்திரமாகும்.

பின்பு அப்புறம், பிறகு என்பது தோல்வியின் தோழமைச்சொல் அன்றாடம் செய்யப்பட்டிருக்க வேண்டிய வேலைகளை ஒத்திப் போட்டால் அவை மலை போல்குவிந்து மலைக்க வைத்துவிடும்.

இப்படித்தான் நம்முடைய வாழ்வில் ஒழுங்கினங்களும் தன்னுடைய கொடி உருவத்தைக் காட்டத் தொடங்குகிறது அதனால் நம்முடைய வாழ்வு சிறப்பின்றி சீதனம் குன்றி அமைந்து விடுகிறது.

செய்ய வேண்டிய வேலையை உடனுக்கு உடன் செய்யாமல் இருப்பது வாழ்க்கையின் வெற்றி சக்கரத்தை ஒட செய்யாமல் செய்து விடும்.

ஒரு வேலையை ஒத்திப் போடுவது என்றால் என்ன? அதைப் புதைக்குழியில் போட்டு மூடிவிடுவது தான், பின்பு பார்ப்பது இல்லை என்பது தான்.

ஒரு வேலையைச் செய்வது ஒரு விதையை விதைப்பது போலாகும். அது உரிய காலத்தில் நடவு நட்டப்படவில்லை பலன் அதற்கு ஏற்றார் போல் தான் இருக்கும்.

எனவே இப்பொழுது என்பது நமக்கு அருளப்பட்டிருக்கும் மாணிக்கம். அதனை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். தோசையை சுடச்சுடச் சாப்பிடும் சுவை, அது ஆறிய பின்பு இருக்குமா?

இதே போன்று தான் தள்ளிப் போடப்பட்டிருக்கும் வேலையும் இருக்கும். இதனால் நமக்கு உற்சாகம் குறைந்து விடுவதோடு, நம்முடைய ஆற்றலையும் சக்தியையும் இழக்கும்படி செய்து விடுகின்றது.

இந்த இதழை மேலும்