Home » Articles (Page 2)

இளம் இரவிவர்மா…

ஓவிய ஓடைகளில் ஓளிரும் ஓவியர் கோ.மோ.. தருண்ராஜா என்பவர்.கோபிசெட்டிபாளையத்தில் வைரவிழா பள்ளியில் படித்து வைரமாக ஜொலிப்பவர். தற்போது கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இயற்பியல் துறை மூன்றாம் ஆண்டில் படிக்கும் இவர் ஓவியத்தில் பல சாதனைகள் புரிந்து வருகிறார்.

2009 ஆம் ஆண்டு தொடங்கிய இவர் சாதனைப் பயணம் இன்றுவரை தொடர்கிறது. 2013 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை விருதுகளின் நாயகனாகவே வாழ்ந்துள்ளார். விஸ்வமலர் நாளிதழின் சார்பாக இளம் ஓவியர் விருது, பாரதிதாசன் கல்வி நிறுவனத்தின் சார்பாக இளம் ஓவியர் விருது, பணி தாய் மொழி விருது பெற்றுள்ளார் தருண்ராஜா.

தமிழிற்கே ஒளி சேர்க்கும் வகையில் திகழும் அகத்திய முனிவர் கலை இலக்கியம் பண்பாட்டு ஆய்வு மையம் சார்பில் தமிழ் ஓளி விருது மேலும் கலைச் செம்மல் விருது, எக்ஸல் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி சார்பாக பெஸ்ட் பெயிண்டர் விருது, ஜெனரல் சேம்பியன் கிளப் சார்பில் ஜெனரல் சாம்பியன் விருது.  2016- 2017 ஆண்டு ஓவியருக்கான தமிழ்நாடு சாம்பியன் பட்டமும் பெற்றுள்ளார்.

படிப்பும், ஓவியமும் ஒரு புறம் இருக்க மானுடம் போற்றும் வகையில் குழந்தைகளுக்கு இலவச ஓவியப் பயிற்சியை அளித்தும் வருகிறார்.

இந்த இதழை மேலும்

வாசியுங்கள்! வாகை சூடலாம்! – 16

101 காக்கத் தகுந்த வாக்குறுதிகள்

(101 Promises worth keeping)

இந்த நூலின் ஆசிரியர் நீல் எஸ்கெலின் (Nil Eskelin) ஆவார். (தமிழில் லலிதா கல்யாண சுந்தரம் மொழிபெயர்த்துள்ளார். மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ் வெளியிட்டுள்ளது.) இந்நூல் பின்வரும் ஐந்து இயல்களில் அமைந்துள்ளது.

1. குடும்பம் மற்றும் நண்பர்களுக்குத் தரும் வாக்குறுதிகள்.

2. உங்கள் உதவியாளர்களுக்குத் தரும் வாக்குறுதிகள்.

3. எனக்கு நானே தரும் வாக்குறுதிகள்.

4. என் உலகத்துக்கு நான் அளிக்கும் வாக்குறுதிகள்.

5. என்னை படைத்த இறைவனுக்குத் தரும் வாக்குறுதிகள்.

இவ்வாறு அமைக்கப்பட்டுள்ள ஐந்து பிரிவுகளில் 101 வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. இந்த நூலின் முன்னுரை இப்படித் தொடங்குகிறது.

ஒரு நாள் மாலை பையன் அப்பாவிடம் கேட்டான், இன்னிக்கி ராத்திரி சாப்பிட்டப்புறம் பாஸ்கின் ராபின்ஸ் ஐஸ்கிரீம் கடைக்குப் போலாமா?”

அப்பாவும்போலாம்என்றார்.

பையனுக்குநம்பிக்கைவரவில்லை, “பிராமிஸ்?”

அப்பா, “.கே. ப்ராமிஸ்.”

திங்கட்கிழமை இரவு கால் பந்தாட்டத்தைக் காரணம் காட்டி அப்பா பின் வாங்கி விட்டதில் பையனுக்கு ரொம்ப ஏமாற்றம், அப்பாவின் இமேஜ் பாழாகிவிட்டது.

வாழ்க்கையின் ஒவ்வொரு களத்திலும், வீடாகட்டும், வியாபாரமாகட்டும் அல்லது சமூகமாகட்டும் நாம் நமது வாக்குறுதிகளால் அல்ல, நமது செயல்பாடுகளால் மட்டுமே அளக்கப்படுகிறோம். காக்கப்படும் ஒவ்வொரு வாக்குறுதியும், நமது வாழ்க்கை அஸ்திவாரத்திற்கு ஒரு கல். போதுமான அளவு கற்கள் இடப்பட்டதும் நீங்கள் உறுதியான, நம்பகமாக ஒரு கட்டிடத்தை எழுப்பலாம்.

வாக்குறுதிகள் கொடுப்பதோடு வேலை முடிந்து விடுவதில்லை. அவற்றை ஒவ்வொரு நாளும் புதுப்பிக்க வேண்டும். வாழ்நாள் முழுவதும் காக்க வேண்டும். 101 வாக்குறுதிகளில் ஒருசில வாக்குறுதிகளை வருமாறு காண்போம்.

எனது திருமண பந்தத்தைக் காக்க நான் உறுதி கூறுகிறேன்

ஹென்றிபோர்டின் 50வது திருமண ஆண்டு நிறைவின்போது, “உங்கள் மகிழ்ச்சியான இல்லறத்தின் ரகசியம் என்ன? என்று ஒரு நிருபர் அவரைக் கேட்டார்.

சிறிது கூடத் தயங்காமல் உடனே ஃபோர்ட் கூறிய பதில் இதுதான். “என் பிசினெசை வெற்றிகரமாக்கிய அதே பார்முலாதான், ஒரே மாடலை வைத்திருக்க வேண்டும் என்றார்.

இன்றைய பயமுறுத்தும் விவாகரத்து புள்ளி விவரங்கள் நமக்குக் காட்டுவது, பிரச்சினை திருமணத்தில் அல்ல, ஆதாம், ஏவாள் காலத்திலிருந்து தம்பதிகள் பிரச்சினைகளையும், அழுத்தத்தையும் சந்தித்து வந்திருக்கிறார்கள்.உண்மையான அவலம் என்னவென்றால் ஒட்டுறவில்தான் பிரச்சினை. மக்கள் உண்மையாக நடந்துகொள்வதில்லை.

உங்கள் வாழ்க்கைத் துணைக்கு நீங்கள் தரும் வாக்குறுதி நழுவக் கூடிய ஓட்டைகள் நிறைந்த ஒப்பந்தமல்ல, அது ஒரு நிரந்தர புனித உடன்படிக்கை. இவ்வாறாக ஒவ்வொரு வாக்குறுதி பற்றியும் மிக அர்த்தமிக்க எடுத்துக்காட்டுக்களுடன் இந்நூலாசிரியர் வாக்குறுதியின் அடர்த்தியை சுருக்கமாக விவரித்துச் செல்கிறார். இந்நூலை ஒரேமட்டில் ஒரு நாவலைப் படிப்பதுபோல படித்துவிட முடியாது. நின்று நிதானித்து நம் வாழ்க்கையுடனும் நாம் கொடுத்துள்ள வாக்குறுதிகளுடனும் ஒப்பிட்டுப் பார்த்து; மிகக் கவனமாகப் படிக்க வேண்டிய நூல் இந்நூல். ஒவ்வொரு வாக்குறுதியை விளக்குவதற்காக நீல் எஸ்கெலின் எடுத்துக்காட்டும் கதைகள், உதாரணங்கள் மிகச் சிறப்பானவை ஆகும்.

நான் என் குழந்தைகளுக்கு முன் மாதிரியாக இருப்பேன்

ஒவ்வொரு தாய் தகப்பனும் கூடிய சீக்கிரம் தன்னைப் போலவே தன் மக்களும் தயாராவார்கள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். தன்னை முன் மாதிரியாக நினைத்துக்கொள்ள வேண்டும். நல்லவரோ, கெட்டவரோ, நேர்மையானவரோ, ஏமாற்றுக்காரரோ, ஒழுக்கமானவரோ, ஒழுக்கமற்றவரோ, நாம் தான் நம் குழந்தைகளுக்கு அளவுகோல்களை நிர்ணயிக்கிறோம். ஒரு குழந்தை சமுதாயமெனும் நெசவில் இறுதியில் எப்படி இடம்பெறுகிறது என்பதில் தாய் தகப்பனின் ஒவ்வொரு சொல்லும் செயலும் ஒரு முக்கியமான இழையோட்டமாகிறது. இதேபோன்று குடும்பம் பற்றி அமையும் வாக்குறுதிகளில் சில வருமாறு.

என் குடும்பத்தோடு செலவழிக்கும் நேரத்தைப் பொக்கிஷமாகக் கருதுவேன்.

ஒரு நல்ல சூழ்நிலையை வீட்டில் பராமரிக்க உறுதி கூறுகிறேன்.

என் குடும்பத்தின் பொருளாதாரப் பாதுகாப்புக்கான பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

நம் இல்லம் மகிழ்ச்சியாலும் சிரிப்பாலும் நிறைந்திருக்கும்.

நான் என் பெற்றோருக்குப் பெருமை தேடித் தருவேன்.

நான் எனது அன்பையும் பாசத்தையும் காட்ட உறுதி கூறுகிறேன்.

நன்றி கூற ஒருபோதும் மறக்க மாட்டேன் என்று உறுதி கூறுகிறேன்.

நான் கருணையுடையவனாக இருப்பேன் என்று உறுதி கூறுகிறேன்.

அடுத்தவர் கருத்தை மதிப்பேன் என்று உறுதி கூறுகிறேன்.

தீங்கான விமர்சனத்தைத் தவிர்ப்பேன்.

அடுத்தவர்களை எடைபோடுவதை நிறுத்திவிடுவேன்.

இந்த இதழை மேலும்

விரட்டுங்கள் மனச்சோர்வை

ராம் ஸ்ரீதர்,சென்னை – 9043019109

சில சமயம் நீங்களே உணர்ந்திருக்கலாம். எதைப் பார்த்தாலும் வெறுப்பாக இருக்கும். யாரைப் பார்த்தாலும் எரிச்சல் வரும். மனதுக்குள் தோற்றுவிட்டதுபோல் ஒரு வெறுமை உண்டாகும். அப்படியானால், மனச்சோர்வு (க்ங்ல்ழ்ங்ள்ள்ண்ர்ய்) என்ற எதிரியை உள்ளே அனுமதித்துவிட்டீர்கள் என்று அர்த்தம்!

மனச்சோர்வு எதனால் வருகிறது அடிப்படையில் உங்களுக்கு என்ன நிகழ்கிறது? ஒருவர் தீக்குச்சி பற்றவில்லை என்றாலே துக்கமாகிவிடுவார். இன்னொருவர் வீடே தீப்பற்றி எரிந்தாலும், அலட்டிக் கொள்ள மாட்டார்.

நீங்கள் விரும்பியபடி யாரோ நடக்கவில்லை. எதிர்பார்த்தபடி எதுவோ நிகழவில்லை. ஆசைப்பட்டபடி வாழ்க்கை அமையவில்லை. சுருக்கமாகச் சொன்னால், உங்களுக்கு என்ன கிடைத்திருக்கிறதோ, அதை ஏற்றுக் கொள்ள முடியாமல், நீங்கள் தவிக்கிறீர்கள். அதை எதிர்க்கிறீர்கள். நீங்கள் மனச்சோர்வுடன் இருக்கும்போது எல்லாம், மற்றவர்கள் உங்களைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள். உங்களுடன் உட்கார்ந்து மற்றவர்களும் அழ வேண்டும் என்று விரும்புகிறீர்கள். இரக்கத்தை யாசிக்கிறீர்கள்.

என்ன பைத்தியக்காரத்தனம் இது? உங்கள் விருப்பப்படி எல்லாம் உலகம் ஏன் நடக்க வேண்டும்? நீங்கள் விரும்பியபடியெல்லாம் தங்களை ஏன் மற்றவர்கள் ஏய்த்துக் கொள்ள வேண்டும்? அகங்காரம் எங்கே இருந்தாலும், அதற்கு அடி விழத்தான் செய்யும். அப்போது, மனச்சோர்வு முளைத்து எழும். அது உங்களைப் பற்றிய நம்பிக்கைகளைத் தகர்த்துவிடும். வெளியே இருந்து ஆயுதங்களால் தாக்குபவர்களைக் கூட சரியாகக் கையாண்டால், சமாளித்துவிடலாம்.

மனச்சோர்வு என்பது உள்ளிருந்து கொண்டே, கீறிக் கிழித்துக் குடைந்து உங்களை உபயோகமில்லாமல் அழித்துவிடும் விஷ ஆயுதம். உங்களை நீங்களே தாக்கி அழித்துக் கொள்வதைப் போன்ற முட்டாள்தனம் அது! எதை நினைத்தும் சும்மா வருத்தப்பட்டுக் கொண்டு இருப்பதால், எந்தப் பலனும் இல்லை.

வருத்தம் என்பதும், துக்கம் என்பதும் ஆளுக்கு ஆள் மாறுபடும்.

இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்னர் ஒருநாள், ஜெனரல் ஐஸனோவர் (உண்ள்ங்ய்ட்ர்ஜ்ங்ழ்) சொர்க்கத்துக்குப் போனார். “வாரக் கடைசியில் நரகத்தைச் சுற்றிப் பார்க்க எனக்கு அனுமதி வேண்டும்என்று கடவுளிடம் அவர் கோரினார். “நரகத்தில் இருப்பவர்கள் சொர்க்கத்தைப் பார்க்க விரும்பினால் அர்த்தம் இருக்கிறது. உனக்கு நரகத்தைப் பார்க்கும் ஆசை எதற்கு?” என்று கேட்டார் கடவுள். “அங்கே ஹிட்லர் என்ன வேதனைகளை அனுபவிக்கிறார் என்று பார்க்க வேண்டும்என்றார் ஐஸனோவர்.

கடவுள் நரகத்துக்கான பாஸ் கொடுத்தார். நரகத்தில் ஹிட்லர் சித்ரவதை செய்யப்படும் முகாமுக்கு ஐஸனோவர் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கே அசிங்கங்களால் நிரப்பப்பட்ட இரண்டு ஆள் உயரத் தொட்டி ஒன்றில், ஹிட்லர் அமிழ்த்தப்பட்டிருந்தார். தொட்டிக்கு வெளியே தெரிந்த அவருடைய முகத்தில், பிரகாசமான புன்னகையைப் பார்த்து ஐஸனோவர் ஆச்சர்யம் அடைந்தார்.

இந்த இதழை மேலும்

நில்! கவனி !! புறப்படு !!! – 11

மகிழ்ச்சித்தருணங்கள் ! (பாதை 10)

வாழ்வில் வெற்றிக்காற்றை மட்டுமே சுவாசிக்கும் நண்பர்களே !

அனைத்திலும் சிறக்கும் ஆறு லட்சம் குடும்பங்கள்ஒரு ஆரோக்கியமான அடுத்த தலைமுறையை உருவாக்குவதே உங்கள் வண்ணமயமான வாழ்வுக்கு வழி காட்டும் வாழ்வியல் பயிற்சியாளரான என் லட்சியம்.

அந்த ஆனந்தக்குடும்பத்தில் உங்களையும் இணைத்துக்கொள்ளஇந்தத்தொடர் ஒரு இணைப்புப்பாலம்.

மகிழ்ச்சித்தருணங்கள் !

அனைவருக்கும் பாரபட்சம் இன்றி கிடைத்திருப்பது 24 மணிநேரம் தான்.  பங்கிடவே முடியாத இந்த பொக்கிஷத்தை வைத்துக்கொண்டு நீங்கள் எந்த அளவு வாழ்வை வாழ்கிறீர்கள் என்பதில் தான் சூட்சுமமே

உலகப்பெரும் பணக்காரன், உலகம் சுற்றும் வாலிபன், தொழில் உலக சக்ரவர்த்தி,  அறிவையே வியக்க வைக்கும் விஞ்ஞானி, ஆண்டவனை அடையாளம் காட்டும் ஆன்மீகத் தந்தைஅவர்க்கு மட்டுமல்ல,,,

பொய், களவு, சூது, நம்பிக்கை துரோகம், பஞ்ச மகா பாதகங்களின் மொத்த குத்தகை, களவானிகளின் பட்டியல் இருந்து உய்ஸ்ரீர்ன்ய்ற்ங்ழ் பட்டியலுக்கு ஏற்றுமதி ஆனவன், – இவர்களுக்கு மட்டுமல்ல ,,,

முன்னேற முடியும் என்ற கொள்கையில் முயற்சி செய்யும் சாமானியன், உழைப்பே உயர்வுக்கு வழி என்று வாழும் தொழிலாளி,  நாளைய விடியல் நிச்சயம் எனக்கு நன்மை பயக்கும் என்ற நம்பிக்கையுடன் நாட்களை நகர்த்தும் அப்பாவிஅவர்க்கும் பொதுவானதே இந்த 24 மணி நேரம்

காற்றில் மிதந்து வந்த கண்ணதாசனின் பாடல் ஒன்று.

கடவுள்ஒருநாள்உலகைக்கானதனியேவந்தானாம்

கண்ணில் கண்ட மனிதர்களை எல்லாம் நலமா என்றானாம்.

ஒருமனிதன்வாழ்வைஇனிமைஎன்றான்

ஒரு மனிதன் அதுவே கொடுமை என்றான்

படைத்தவனோ உடனே சிரித்து விட்டான்” – என்று.

ஆமாம்.  கடவுள் சிரிப்பின் உண்மையான காரணம் இது தான்.

ஒரே அளவு நேரத்தில் நீங்கள் எந்த அளவு முறையாக, சரியாக பயன்படுத்தி வருகிறீர்கள் என்பதில் தான் உங்கள் வாழ்க்கையே இருக்கிறது

கிடைத்திருக்கும் நேரத்துக்கு முதலில் நீங்கள் மகிழுங்கள்.  எந்த நிலையில் நீங்கள் இன்று இருந்தாலும் அந்த நிலைக்கு முதலில் மகிழுங்கள்.  இன்னும் அதிகம் இன்பம் தேவையாக இருந்தாலும்இப்போது கிடைத்திருக்கும் இன்பத் தருணத்திற்கு மகிழுங்கள்.  மகிழ்ச்சி ஆற்றில் குளிக்க விழைந்தாலும்  இப்போது உழன்று கொண்டிருக்கும் துன்பச்சேற்றில் இருந்துகொண்டே இந்த தருணத்திற்கு மகிழுங்கள்.  அறிவாளி என்று நாளை ஊரே புகழும் காலம் வரும் வரைஇப்போதைய ஏமாளி என்ற துன்பத்தருனத்திலும் மகிழுங்கள்

உங்களுக்கு திருவோடு இருப்பதில் மகிழ்ச்சியாஅல்லது திருவோட்டில் இருப்பதற்கு மகிழ்ச்சியா? – என்பதை உங்கள் மனம் தான் முடிவு செய்ய வேண்டும்.

உங்களது 24 மணி நேரத்தில் எத்தனை மகிழ்ச்சித் தருணங்களை உங்களால் உருவாக்கிக்கொள்ள முடியும்.

அதெல்லாம் சரி!  மகிழ்ச்சித் தருணம் என்றால் என்ன?

பரந்துபட்ட பொறுப்புக்கள், கடினமான சூழ்நிலைகள், மோசமான முதலாளிஇதுபோன்று பல நிர்பந்தங்களுக்கும் மத்தியில் மன அமைதி குலையாமல் இருப்பது எப்படி என்று கற்றுத்தெளிவதேமகிழ்ச்சித்தருணங்கள்

அதாவது சூழலை துன்பமாக எடுத்துக்கொள்ளாமல் மகிழ்ச்சி என்றே ஏற்பது.

ஒவ்வொரு சந்தர்பத்திலும் நீங்கள் எடுத்த தேர்வுகளே இன்றைய உங்கள் நிலை.   துன்பத்தருணம் என்றாலும் மகிழ்ச்சித்தருணம் என்றாலும் சரி சூழ்நிலைகள், சூழல்கள் மாற வேண்டுமானால்உங்களுக்கான தேர்வுகளை நீங்கள் தான் சரியாக தேர்வு செய்ய வேண்டும்.

இந்த இதழை மேலும்

ஜெயிப்பது வாழ்க்கையையா? வாழ்க்கையிலா?

வாழ்க்கையை ஜெயிப்பது என்பது சரியல்ல எனத் தெரிந்து கொண்டீர்கள் தானே!

அப்படியென்றால் நாம் வாழும் வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும். அதுவும் எல்லோருமே ஜெயிக்க வேண்டும்.

இதை WIN-WIN FORMULA என ஆங்கிலத்தில் சொல்வர். இதன் பொருள் நாமும் வெற்றி பெறுவோம். மற்றவர்களையும் வெற்றி பெறச் செய்வோம் என்பது தான்.

தன்னம்பிக்கையாளர்கள் மத்தியில் நம்பிக்கையே இல்லாத ஒருவன் இருந்தால் ஒன்று  அவன் பயந்து ஓடிவிடுவான் ; அல்லது அவர்களது தன்னம்பிக்கையின் அழுத்ததால் இவனும் தன்னம்பிக்கையாளாக மாறுவான்.

ஓட்டு வீடுகளும், குடிசைகளும் நிறைந்த பகுதி. மிகவும் விலை குறைவாகக் கிடைக்கிறது என நிலத்தை வாங்கி, அரண்மனை போன்ற வீட்டைக்கட்டி, அதில் வசிக்கும் ஒருவரின் மனநிலை எப்படி இருக்கும்?

எதற்காக இந்தப்பகுதியில் வசிக்க வேண்டுமென வேறிடம் செல்வாரா? அல்லது தன் வீட்டைச்சுற்றியுள்ளவர்களது வாழ்க்கை மேம்பாட்டுக்கு திட்டமிட்டு செயல்படுவாரா?

பிரச்சனைகளையும் சவால்களையும் இனம் கண்டுபிடித்துவிட்டால், செயல்பாடு சுலபமாகிவிடும். இதை இனம் காண்பதில் பெரும் பாலானவர்களுக்கு குழப்பம்.

விளக்கம் இதோ:

அகச்சூழல், புறச்சூழல் என்பதை முதலில் விளக்கிக் கொள்வோம்.

அகச்சூழல் என்பதுஒவ்வொருவரிடமும் உள்ள தகுதிகள், திறமைகள், பயிற்சிகள், தன்னம்பிக்கை விழிப்புநிலை, காலம்அறிந்து செயல்படுதல் போன்றவை.

புறச்சூழல் என்பது ஒருவர் ஒன்றை எதிர்கொள்ளும் இடம், காலம், இயற்கை உள்ளிட்டவைகளாகும்.

நம் வாழ்க்கையில் நாம் எதிர்கொள்பவைகளை இரண்டாகப் பிரிக்கலாம். 1- சவால் ; 2- பிரச்னை.

சவால் என்பதை ஆங்கிலத்தில் இஏஅககஉசஎஉ என்கிறோம். எதிர்கொள்ளும் சூழல் அவரிடமுள்ள திறமைகளால் எளிதாக செய்து விட முடியும் என்பதே சவால்.

1. இருசக்கரவாகனத்தில் நகரின் முக்கிய சாலையில் பயணிக்கிறோம். திடீரென டயர் பஞ்சராகிவிட்டது. இதை சுலபமாகச் சரிசெய்து விடலாம். ஓரமாக வாகனத்தை நிறுத்தி, அவசர வேலை இருந்தால் முடித்த பின்னர் கூட பஞ்சரை சரி செய்து ஓட்டிச் செல்லலாம். இது சவால்.

2 கடும் வெயில்; நடந்து செல்கிறோம். வழியில் ஒருவருமே தென்படவில்லை ; சாலையோரம் மரங்களுமில்லை ;கண்ணுக்கெட்டிய தூரம் வீடுகளும் தெரியவில்லை.

நாவறண்டு கடும் தண்ணீர் தாகம் ஏற்பட்டுவிட்டது. கையிலும் தண்ணீரில்லை ; வெளியில் எங்கும் தண்ணீரில்லை. மயங்கி விழும் நிலை இந்தச் சூழல் தான் பிரச்சனை என்பது.

பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு தன் திறமைகள் மட்டும் போதாது ; வெளியிலிருந்து பெறும் ஆலோசனைகளும் உதவிகளும் கட்டாயம் தேவை.

இந்த இதழை மேலும்

“ சரிவுக்கு தீர்வு… சரியான தேர்வு! ”

நாம்; எடுத்த முடிவு.. சரியா..? தவறா..?”

அடுத்தவர் போல, வாழ நினைப்பது.. சரியா..? தவறா.?’

மற்றவர்களை கலந்து ஆலோசித்து முடிவெடுப்பதுசரியா..? தவறா.?’

மற்றவர்களை, பார்த்து, நம்மை மாற்றிக்கொள்ளவது..சரியா.

.தவறா..?’

பொதுவாக, இது போன்ற கேள்விகளுக்கு, யாராலும், ‘இது சரி, இது தவறுஎன்று, அவ்வளவு எளிதாக, சரியாகவும், தவறாகவும்,, திட்டவட்டமாக பதில் சொல்லிவிட முடியாது. அதை நிருபித்தல் என்பதும் கடினம். காரணம்

வாழ்க்கையில்..                                        

எந்த ஒரு செயலின் ஆரம்பத்திற்கும், முடிவுக்கும்சரி, தவறுஎன்ற தீர்மானம் உண்டு. அந்த வகையில், நாம் படித்திருக்கும், கல்வி, பிடித்திருக்கும் தொழில், கொள்கை, மற்றும் நட்புகள், உறவுகள் என்று வடிவமைத்திருக்கும் வாழ்க்கை முறைகள் யாவும், நம்மை பொருத்தவரைசரி தவறுஎன்ற இரு முறைகளில்தான் நிர்ணயிக்கப்படுகிறது.

ஆனால், ‘சரி தவறுஎன்பது  மாயை. அவை இரண்டும் அவரவர்களின் , மனநிலை, சூழ்நிலை, பொருத்த, அனுபவ ரீதியான உண்மைகல்ன் வெளிப்பாடு. என்பதால்.

உதாரணமாக….

ஒருவன், ஒரு பச்சோந்தியை, வாழை மரத்தில் பார்க்கிறான். அங்கு அது பச்சை நிறத்தில் உள்ளது. அதனால் அவன் பச்சோந்தி, பச்சை நிறமென்கிறான்.   

இன்னொருவன் அதே பச்சோந்தியை , தென்னை மரத்தில் பார்க்கிறான். அது இப்போது, தென்னை மரத்தின் நிறத்தில் உள்ளது. அதனால் அது மா..நிறமானது..என்கிறான்.

இவ்விருவரில்,; யார் பார்த்ததும்,சொன்னதும், சரியானது..?, தவறானது.? இதில் எது உண்மை.?

இருவர் பார்த்ததும், சொல்வதும் ; சரியே!

ஆனால்,  சூழ்நிலைகளுக்கு ஏற்ப நிறம் மாறுதல், என்பது, பச்சோந்தியின் தன்மை என்பதே உண்மை!

அதனால் அவரவர் கண்ணோட்டத்திற்கும், கருத்துக்கும் ஏற்ப, ‘சரி, தவறுஎன்று முடிவுகள் நிரணயிக்கப்படுகிறது.என்பதுதான் உண்மை.

ஆனால், அதேசமயம், அடுத்தவர்களின் ஆலோசனைகளைக் கேட்பதோ, அதன்படி நடப்பதோ முற்றிலும் தவறென்றோ, சொல்லவில்லை. அதை நம் சூழ்நிலைகளில் கொண்டு சென்று ஆராய்தல் நல்லது.

ஒரு ஞானியிடம், ’ குருவே, ஒரு செயலைசரி, தவறுஎன்று எப்படி கண்டு பிடிப்பது.? என சீடர் கேட்டதற்கு,    குரு,”ஒருவரிடம் கேட்கும் கேள்விக்கு, பலரின் பதில் பல விதமாக இருக்கும். அதில் எதுசரி, தவறுஎன்று கண்டு கொள்வது உன் திறமையைப் பொருத்தது.’ என்றார்.

ஒருகேள்விக்கு, ஒரு பதில் இருக்காது. எல்லாமே ஏறக்குறைய சரியான கருத்துக்களே. இதில் நமக்கு,‘எது சரி. .எது..தவறுஎன்று யோசித்து முடிவெடுக்க வேண்டும்.

அவர் சரியானவர்என்பது சரி. ஆனால்,

அவர் என்னைவிட சரியானவர்என்பது தவறு

காரணம்..

இது தன்னம்பிக்கையின் குறைபாடு. தாழ்வு மனப்பான்மையின் மேம்பாடு. நாம் வேறு,அவர் வேறு. இருவரின் சூழ்நிலை. மனநிலைகளும் வேறு. வேறு.என்பதே சரியான நிலைபாடு. நாம் இருக்கும் இயல்பு நிலையி|ருந்து, இல்லாத நிலைக்கு தாவுவது தவறானது.

இப்படி சரியான ஒன்றைதவறாகமாற்ற முயற்சிப்பதுதான் நம் பிரச்சனை, தோல்விகளுக்கு மூலக்காரணம்.. 

நம்மில் பலர் கல்வியோ, தொழிலோ எதிர்காலத்திட்டங்களிலோ, சிறு தோல்வி கண்டு விட்டால், அதை தவறானது என்றும், சரியாக அமைந்து விட்டால், ‘சரியான முறைஎன்றும, தீர்மானித்துக் கொள்கிறோம்.

இந்த இதழை மேலும்

அறிவியலா? இலக்கியமா?

1. தயக்கம் என்பது தாய்மொழி:

இளமாறன் புன்னகைத்தார். தன் மகன்கள் இருவரையும் பாராட்டினார். வெண்ணிலவன், வலிமைச்செல்வன் இருவருமே அவருக்கு இரு கண்கள் போல. பெயருக்கேற்ப வெண்ணிலவன் அமைதியானவன், செல்வனோ கொஞ்சம் ஆற்றல் காட்டுபவன். வெண்ணிலவனை பள்ளி பேச்சுப்போட்டியில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டு இருக்கும் பொழுதுதான் இந்தக்கதை தொடங்கியிருக்கிறது. இரு பையன்களுமே ஒன்பதாம் வகுப்புப் படிக்கிறார்கள்.

அடுத்த நாள் வகுப்பறைக் காட்சியை உங்களுக்குக் காட்டுகிறோம். நீங்கள் கூட இந்த சூழ்நிலையைக் கடந்து வந்திருப்பீர்கள். தயக்கம். நிலவனுக்கு எதற்கும் தயக்கம். எழுதுவது என்றால் சரி! எவ்வளவு என்றாலும் எழுதலாம். ஆனால் இதுவரை பேசியதே இல்லையேநான் எப்படிப் பேசப் போகிறேன். கடவுளேஅப்பா வேறு சொல்லிஅனுப்பி இருக்கிறாரே! சிக்கலில் மாட்டிக்கொண்டோமே!

யார் யார் பேச்சுப்போட்டியில் கலந்துகொள்ளப் போகிறீர்கள்?”

என்று கேட்டார் அஞ்சலிடீச்சர்

அவருடைய கண்களைப் பார்ப்பதைத் தவிர்த்து விலகினான் நிலவன்.

பக்கத்திலிருந்த, பண்பழகன் கை உயர்ந்தது. அவன் ஒரு அதிர்வேட்டுப் பேச்சாலன். பேசமாட்டான்முழங்குவான்! நாம் சும்மா இருப்பதே நல்லதுஅப்பா கேட்டால்அப்போ பார்த்துக்கலாம்வகுப்பு முழுக்க நம்மைப் பார்க்கையில் நம்மால் எப்படிப் பேச முடியும்! ஒரே கூச்சமாக இருக்குமே! என்று தயங்கினான் வெண்ணிலவன். இளமாறனின் அறிவுரை மனதில் வந்து போனது. லேசாக கைகள் முன்னெற்றி ஆகியவை வியர்த்தன.

2.வாய்ப்பு என்பது வாய்மொழி:-

இன்னும் சில மாணவ மாணவியர் பெயர்களைக் கொடுத்தார்கள். பல்லவி வாயெல்லாம் பல்லோடு என்ன தலைப்பில் பேச வேண்டும் என்று கேட்ட பொழுது நிலவனுக்கு தலை சுத்தியது. அந்த வகுப்பு எப்படித்தான் முடிந்தது…?

எப்பொழுது முடிந்தது என்றே வெண்ணிலவனுக்குத் தெரியவில்லை.

கேரோஸ்” (இஹங்ழ்ன்ள்) என்றார் இளமாறன். அது அடுத்த நாள். ‘என்கிற எழுத்தில் தொடங்கும் சொல்லானாலும் அதன் முதல் உச்சரிப்புகேதான். கேரட் மாதிரி என்றார் இளமாறன். இது ஒரு கிரேக்க கடவுள். நம் ஊரில்குபேரன்என்றால் செல்வன் என்பது போல கிரேக்க புராணத்தில் கேரோஸ் என்றால் வாய்ப்பு. அதுல என்ன கவனிக்க வேண்டும்னா இந்தகேரோஸ்வாய்ப்புக்கடவுளோட முன்தலையில் மட்டும் முடி இருக்கும் பின்னாடி வழுக்கை. வாய்ப்பு வரும்போது பிடிக்காவிட்டால் அது கடந்து போன பிறகு வழுக்கிக்கொண்டு போய்விடும். என்ன? பேச்சுப் போட்டிக்கு பெயர் கொடுத்துவிட்டாயா? என்றார் இளமாறன்!

3.உடும்புப்பிடி

அப்பா வழுக்கைத் தலையைப் பிடிக்க முயற்சி செய்தேன்! என்று கூறினான் வெண்ணிலவன். அடடாநிலவாநான் கூறினேனே! உனக்கு என்ன தயக்கம் தருகிறதோஅதை  துணிவோடு எதிர்கொள்கிற ஆற்றல் எங்கிருந்து வரும் தெரியுமா? கேரோஸிடமிருந்தா? அப்பா என்று கேள்விக்குக் கேள்வியை போட்டான் நிலவன்!

இந்த நக்கலுக்கொன்றும் குறைவில்லை, குறும்புக்காரப் பையாஅந்தத் தயக்கத்தை வெல்லும் ஆர்வம் உன்னுள் இருந்து வரவேண்டும்! அதுவே நிலைக்கும். என்றார்இப்பொழுது என்ன செய்வது அப்பாவாய்ப்பை வழுக்க விட்டுவிட்டேனே! என்று சோர்ந்தான் நிலவன். அட வள்ளுவர் வழி சொல்வார் தம்பி….

ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்

ஒருவந்தம் கைத்துடை யார்

குறள்எண் 593 ல் ஊக்கமுடைமை அதிகாரத்தில் இப்படிச் சொல்லி இருக்கிறார். ஒரு வாய்ப்பை நழுவ விட்டாலும் அதனால் வரும் இனிய ஆக்கத்தை இழந்தாலும் நம்மால் முடியும் என்று ஊக்கம் உள்ளவர்கள் கலங்கி நிற்க மாட்டார்கள் என்றார், மாறன்.

சிறப்புஅப்பாநாளைக்குச் சென்று அஞ்சலி மேடத்தைப் பார்த்து என் பெயரைகேரோஸ்என்ற தலைப்பில் பேசுவேன் என்று தரப்போகிறேன்!

4. இரண்டாவது வழி:

கிளை பிரியும் தோட்டம்என்றார் இளமாறன்.

அப்பா இது என்ன? என்றான்

அர்ஜென்டீன எழுத்தாளர் ஜார்ஜ் லூயிஸ் போர்ஹே அவருடைய ஆங்கில ஸ்பெல்லிங்க் ஆர்ழ்ஞ்ங்ள்ஆனால் அர்ஜென்டீன மொழி உச்சரிப்பு போர்ஹேஇவர் எழுதிய கதைதான்கிளை பிரியும் தோட்டம்அதை எதுக்குப்பா இப்போ சொல்றீங்க? தம்பி, நிலவா, நம்ம கதையில கூட அப்படிக் கிளை பிரியலாம்!

ஆமாம்ப்பாநான் உங்களிடம், பேச்சுப்போட்டிக்கு பெயர் கொடுத்துவிட்டேன் என்று சொல்லி இருந்தால்

அப்படியா…?

ஆமாம் அப்படியே சொல்லியிருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள் ஏனென்றால் பின்னாடிப் போய் பார்த்தால் இந்தக் கதையில் என்ன நடந்தது அந்த வகுப்பு முடியும் போது? என்று இருக்காது!

அதனால் எனது வாக்குமூலத்தை மாற்றிச் சொல்கிறேன்

அப்பா தன்னம்பிக்கையோடு பேச்சுப் போட்டிக்கு பெயர் கொடுத்துவிட்டேன். மிகச் சிறப்பு நிலவா நன்றாகப் பேசு. என்று இளமாறன் மகிழ்ச்சியோடு இரவு உணவு உண்ண எழுந்து சென்றார்.

இந்த இதழை மேலும்

சின்னஞ்சிறு சிந்தனைகள்

ஏன் இப்படி நான் நடந்து கொள்கிறேன்? என்று  கேட்பதற்கு முன், அந்தச் செயலுக்கு விதையான எண்ணம்  என்னவாக இருக்கும் என்று யோசியுங்கள். காரணங்கள் புரிய வரும்.

ஒருவரின் முடிவுக்கான காரணத்தை அவனைத் தவிர எவராலும் சரியாக சொல்ல முடியாது. ஒருவரின் முடிவை, நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் விமர்சனம் செய்ய முடியும் . அதைப் பார்க்கும் கடைசிப் போக்கை பொறுத்தது அது.

உங்களின் தேர்வே உங்களின் தேடுதலை உறுதிப்படுத்தும்.

மிகச்சிறிய தூண்டுதலில், மிகப்பெரிய மாற்றம் நிகழக்கூடும். ஏன் இப்படி? நம் மூளை அப்படி உருவாகியுள்ளது.

மனித மனம் அச்சத்தை சுலபமாக உள்வாங்கி வரும் அதனால் தான் உலகம் அதை மையப்படுத்தியே ஓடிக்கொண்டே இருக்கின்றது.

அமைதி, மகிழ்ச்சி, நம்பிக்கை, வளர நிறைய முயற்சியும், பயிற்சியும் தேவைப்படுகின்றன.

நம் வாழ்க்கையில் நடப்பவை நம்மை துன்புறுத்துவதில்லை. அதைப் பற்றிய நாம்எண்ணும் எண்ணங்கள் நம்மை துன்புறுத்துகின்றன.

கணீரென்று பேசுங்கள். நம் மனம் எந்த மனநிலையை இருக்கிறதோ. அதற்கேற்ற நிகழ்வுகள் தான் நம்மைத் தொடரும்.

முன்கூட்டியே தீர்மானிக்கும் எண்ணங்கள், நாம் நம்பும் விளைவுகளைத் தந்து அந்த எண்ணங்களை வலுப்படுத்தும். காலப் போக்கில் அந்த எண்ணங்கள் அனுபவத்தால் வந்தால் அபிப்பிராயங்களால் மனம் பதிவு செய்து கொள்ளும். இது தான் மனம் செய்யும் தந்திரம். நம் வாழ்க்கையின் சகல விஷயங்களிலும் இது தான் நடக்கிறது.

உங்கள் வாழ்க்கையின் பெரும் பிரச்சனை எது என்று யோசியுங்கள் அது குறித்த உங்கள் எண்ணங்களை எழுதுங்கள். அவற்றில் ஏதாவது தெரிகிறதா என்று பாருங்கள். அப்படியானால் உங்கள் வாழ்க்கைத் திருப்பிப் போடும் வகையில் நீங்கள் கை வைத்து விட்டீர்கள் என்று அர்த்தம்.

இந்த இதழை மேலும்

தன்னம்பிக்கை மேடை

நேயர் கேள்வி…?

போர்வெல்களில் குழந்தைகள் விழுந்து இறப்பதைத் தடுப்பது எப்படி? இதில் பெற்றோரின் பங்கு தான் என்ன?

நாகேந்திரன்,

ஆண்டிப்பட்டி.

மனிதனின் தேவைகளில் உணவு, குடிநீர், இவைகளுக்கு அடுத்த பெரிய தேவை, பாதுகாப்பு என்றார் உளவியல் அறிஞர், ஆபிரகாம் மேஸ்லோ. உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட இவரது தேவை படிக்கட்டுகள் (Hierarchy of Needs) எல்லா இடங்களிலும் மேற்கோள் காட்டப்படுகிறது.

பெரியவர்கள் அவர்களை பாதுகாத்துக் கொள்வார்கள். ஆனால் குழந்தைகள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் ஆற்றல் பெற்றவர்கள் அல்லர். எனவே தான் பெற்றோர்கள் குழந்தைகளின் பாதுகாவலாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. இந்தப் பொறுப்பை பெற்றோரும் உறவினர்களும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அப்படியிருந்தும், கவனக்குறைவு பெரிய ஆபத்தை ஏற்படுத்திவிடும் என்பது நடுக்காட்டுப்பட்டி நிகழ்வு நமக்கு உணர்த்தியது. நாடே சோகத்தில் ஆழ்ந்த நிலையும், தீபாவளி கொண்டாட முடியாத நிலையும் இதனால் ஏற்பட்டது.

பெற்றோரின் பொதுவான கவனக்குறைவு நமக்குத் தெரியாதது அல்ல. கிராம திருவிழாக்களில் குழந்தைகளைத் தவறவிட்டு விடுவார்கள். காவல் கட்டுப்பாட்டு அறையில் காணாமல் போன பல குழந்தைகளை கண்டுபிடித்து திருப்பி ஒப்படைக்கப்பட்டதைப் பார்த்திருக்கிறேன். ஓர் ஊரில் ஒரு குழந்தையை மகளிர் காவலர் தாயாரிடம் ஒப்படைத்த போது அந்தக் குழந்தையை, ‘எங்கே தொலைந்து போனாய்?’ எனக் கூறி சரமாரியாகத் தாக்கினார் அந்தக் குழந்தையின் தாய். ஆனால் எல்லா பெற்றோரும் அப்படியல்ல, கட்டியணைத்து, கண்ணீர்விட்டு அழும் பெற்றோர்தான் அதிகம். ஏன் சில பெற்றோர்கள் இப்படி அலட்சியமாக இருக்கிறார்கள்?

பெற்றோரை குறை சொல்ல முடியாது, அவர்களின் வாழ்க்கை முறை அப்படி! இது ஒரு கலாச்சார பிரச்சனை எனலாம். இப்படிதான் வளர்ந்தோம், இதுதான் எனக்குத் தெரியும், எனவே இப்படிதான் நடந்து கொள்வோம் என்ற வகையில் பெற்றோரின் நடவடிக்கை இருக்கிறது. படித்தவர்களும் பெரியதாக மாறவில்லை. தலைக்கவசம் அணியச் சொல்கிறோம், எத்தனை பேர் அணிகிறார்கள்? இருக்கை பெல்ட் அணிய வற்புறுத்துகிறோம், எத்தனை பேர் அதைச் செய்கிறார்கள்?

கட்டுபாடில்லாத சுதந்திர வாழ்க்கை வாழ பழக்கமாகிவிட்டோம். கடமைகளை மறந்து உரிமைகளுக்காக மட்டும் குரல் கொடுக்கிறோம். நமது பழக்கங்களும் அப்படியே இருக்கின்றன. பழக்கங்கள் சிலந்தி வலைகள், ஆனால் காலப்போக்கில் கம்பி வலை என்பது ஸ்பெயின் நாட்டு பழமொழி. கம்பி வலைகளான அலட்சிய பழக்கங்களை அறுத்தெறிந்து நல்ல பாதுகாப்பு பழக்கங்களை நாம் பழக வேண்டும். அதில் குழந்தைகளை பாதுகாப்பது முக்கியமான பழக்கம் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.

இந்த இதழை மேலும்

பூமி, இன்னொரு வெள்ளிக் கோள் ஆகிவிடுமா?

பூட்டிவைக்கப்பட்ட காருக்குள் சிக்கிக்கொண்டதால் 2018ம் வருடத்தில் மட்டும் ஆறு குழந்தைகள் அமெரிக்காவில் உயிரிழந்ததாக செய்திகள் வெளிவந்தன. பலரும் இந்தச் செய்தியை ஆச்சரியத்துடன் நம்பமுடியாமல் வாசித்து இருப்பார்கள். அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் சராசரியாக ஒரு வருடத்தில் 37 குழந்தைகள் உயிரிழப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. உடலில் இருந்து வியர்வையின் மூலம் வெளியேற்றக்கூடிய வெப்பத்தைக் காட்டிலும், அதிகமாக உடல் வெப்பம் அடைகிறது. வெப்பச் சமச்சீர்நிலை (Thermo regulation) தாறுமாறாவதே இதற்குக் காரணம். உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய வெப்பம் பூட்டி வைக்கப்பட்டு உள்ள ஒரு வாகனத்திற்குள் உருவாகிறது.

70 டிகிரி வெப்பநிலையில் நாம் ஒரு முட்டையைப் பொரிக்கலாம். ஒரு மணிநேரத்திற்கு காரை வெய்யிலில் நிற்கவைத்தால் இதைவிட அதிகவெப்பம் காருக்குள் உண்டாகும். காரின் டேஷ் போர்டைத் தொட்டால் சுடும். வெப்பம் அதிகமாக இருப்பதால் சீட்டில் உட்காரவே முடியாமல் போகும். ஸ்டீயரிங்கைத் தொட்டால் கொதிக்கும். குழந்தைகளையும், செல்லப்பிராணிகளையும் அதிகவெப்பம் வேகமாகப் பாதிக்கும். கதவை மூடிவிட்டு ஒரு மணிநேரத்திற்கு வாகனத்தை நிழலில் நிறுத்திவைத்தாலும் கூட இதே நிலைதான்.

உடலின் வெப்பநிலை 40 டிகிரி செல்சியர்சை விட அதிகமானால் உடலின் முக்கிய உறுப்புகள் பாதிக்கப்படும். காருக்குள் வெப்பம் எவ்வாறு இந்த அளவிற்கு அதிகரிக்கிறது என்று நமக்கு ஆச்சரியமாக இருக்கலாம். இதுதான் பசுமை இல்ல வாயு விளைவு (Green House Effect) எனப்படுகிறது. விரிவடைதல் மூலம் வெப்பநிலை அதிகமாகும். வெய்யிலில் ஒரு வாகனம் மூடப்பட்டநிலையில் நிறுத்திவைக்கப்படும்போது விரிவடைதல் மூலம் சூரியவெப்பம் வாகனத்திற்குள் செல்லும். அதனால் வாகனத்தின் இருக்கைகள் உட்பட்ட எல்லா பாகங்களும் சூடடைகிறது. இவ்வாறு உள்ளே நுழைந்த வெப்பம் சிறிதுசிறிதாக விரிவடையும்.

வெளிப்புறத்தில் இருந்து வெப்பம் தொடர்ச்சியாக உள்ளே வந்துகொண்டிருக்கும். இவ்வாறு காருக்குள் சேகரிக்கப்படும் வெப்ப ஆற்றல் அளவில்லாமல் அதிகரிக்கும். காருக்குள் நுழையும் வெப்பம் விரிவடைவதால் உள்ளே உள்ள எல்லாப் பொருள்களிலும் வெப்பம் பரவுகிறது. ஆனால், காரின் உள்ளே உள்ள பொருள்கள் வெளியிடும் வெப்பம் வெளியே போவது இல்லை. உள்ளேயே அகப்பட்டுக் கொள்கிறது.    

பூமியில் விழும் சூரியஒளியை முக்கியமாக மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். கண்களுக்குப் புலப்படும் சூரிய ஒளியில்  0.4 முதல் 0.6 மைக்ரான் வரை அலைநீளம் உடைய அலைகள் உள்ளன. சூரிய ஒளியில் பெரும்பகுதியும் கண்களுக்குப் புலப்படும் கதிர்களே ஆகும். அடுத்த வகை 0.4 மைக்ரானை விடக் குறைவான அலைநீளம் உடைய புறெளஉதாக்கதிர்கள். கொண்டதாகும்.

இந்தக் கதிர்கள்தான் நம் தோலில் வைட்டமின்டியை உற்பத்தி செய்ய உதவுகிறது. மிகக் குறைவான அளவில் மட்டுமே இவை பூமிக்கு வருகின்றன. மூன்றாவதுவகை 0.8 மைக்ரானை விட அதிக அலைநீளம் உடைய அகச்சிகப்புக்கதிர்கள் ஆகும். .8 இந்தக் கதிர்கள் மூடப்பட்ட வாகனங்களுக்குள் வெப்பநிலை அதிகரிப்பதற்குக் காரணம்.

கார் போன்ற வாகனங்களுக்குள் நுழையும் சூரிய ஒளி காருக்குள் இருக்கும் டேஷ்போர்டு, ஸ்டீயரிங், இருக்கைகள் போன்றவற்றால் ஏற்கப்பட்டு காரின் உள் பகுதி வெப்பம் அடைகிறது. டேஷ்போர்டு 157 டிகிரி பாரன்ஹீட் அல்லது 70 செல்சியர்ஸ் வரை வெப்பம் அடைகிறது. நம் உடல் வெப்பநிலை 97 முதல் 99 டிகிரி வரை பாரன்ஹீட் அல்லது 36.5 முதல் 37.5 டிகிரி செல்சியர்ஸ் வரை ஆகும். ஸ்டீயரிங் 53 டிகிரி செல்சியர்ஸ் வரையும், இருக்கை 51 டிகிரிசெல்சியர்ஸ் வரையும் சூடாகிறது. காருக்குள் புகும் அகச்சிகப்புக்கதிர்கள் உள்ளே இருக்கும் நீராவியையும், கார்பன் டை ஆக்சைடையும் வெளியே செல்லவிடாமல் தடுத்து நிறுத்துவதால் உள்ளே உருவாகும் வெப்பம் வெளியே செல்வது இல்லை. வெய்யிலில் ஒரு மணிநேரம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் காருக்குள் சராசரியாக வெப்பம் 47 டிகிரி செல்சியர்ஸ் வரை உயர்கிறது. நிழலில் இருந்தால்கூட இதேபோன்ற பசுமை இல்ல வாயு விளைவுதான் ஏற்படுகிறது. இதுதான் பூமியிலும், காற்று மண்டலத்திலும் நடக்கிறது. பூமிக்கு வரும் சூரியவெப்பம் பூமியில் உள்ள எல்லா உயிரினங்களாலும், மற்ற பொருள்களாலும் எடுத்துக் கொள்ளப்பட்டு பின் வெளியேற்றப்படுகிறது. ஆனால், இவ்வாறு வெளியேற்றப்படும் வெப்பம் வெளியே செல்லமுடியாமல் பூமியிலேயே முடக்கப்படுவதால் பூமியின் வெப்பநிலை அதிகரிக்கிறது. உண்மையில் சூரியனின் வெப்பத்தாஅல் பூமி சூடு அடைவது இல்லை. உறிஞ்சப்பட்டு பூமியில் உள்ள பொருள்களால் வெளியேற்றப்படும் வெப்பமே பூமி வெப்பம் அடையக் காரணம்.

இந்த இதழை மேலும்