உள்ளத்தோடு உள்ளம்
2020 ஆம் ஆண்டை மகிழ்வோடு வரவேற்க காத்திருக்கும் அன்பிற்குரிய தன்னம்பிக்கை வாசகர்களே.
பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற வாக்கிற்கேற்ப 2019 ஆம் ஆண்டை நிறைவு செய்து 2020 ஆம் ஆண்டில் காலெடுத்து வைக்கிறோம்.
இந்தாண்டிற்கென்று ஒரு தனித்துவம் இருக்கிறது. பாரத்ததின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் அவர்கள் இந்த ஆண்டில் நாடு வல்லரசு ஆகும் என்று தன்னுடன் கனவையும் எதிர்பார்ப்பையும் கூறியிருந்தார்.
இது அவரின் எதிர்பார்ப்பு மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டின் எதிர்பார்ப்பும் அது தான். இதற்கு நாம் ஒற்றுமையாகவும் சகோதரத்துவமாகும் ஓங்கி இருத்தல் வேண்டும்.
சாதிகளால், மதங்களால், இனங்களால் பிளவுப்பட்டிருப்பதைத் தவிர்க்க வேண்டும், நாம் அனைவரும் ஒன்றிணைந்து கரம் கோர்த்தல் வேண்டும்.
நாட்டின் தூய்மையை வீட்டின் தூய்மையாக நினைத்து போற்றுதல் வேண்டும். நாட்டின் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்ட நடத்தல் வேண்டும். இலஞ்சம் இல்லா நாடு, போரில்லா நாடு, பெண்ணைப் போற்றும் நாடு, வேலைவாய்ப்புள்ள நாடு, விவசாயத்தைப் போற்றும் நாடே வளர்ந்த நாடு. இதை அடைய ஒவ்வொருவரும் உறுதிமொழி எடுப்போம். நம் தேசத்தை வல்லரசு ஆக்குவோம்.
அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
0 comments Posted in Editorial